செவ்வாய், 29 அக்டோபர், 2019

EMIS - இனி செல்போன் மூலம் Time Table Assign செய்யலாம்...

முதலில் EMIS login செய்து விட்டு  பின்னர் கீழே உள்ள link-ஐ Click செய்யவும்...

*🌷அக்டோபர் 29, வரலாற்றில் இன்று.*
-------------------------------------------------
*பத்திரிகையாளர் ஜோசப் புலிட்சர் நினைவு தினம் இன்று(1911).*

*17 வயதில் பிரிட்டிஷ் இராணுவத்தில் சேர்வதே அவரது கனவாக இருந்தது.*
 *ஆனால் அதற்கான உடல் கட்டு இல்லை மற்றும் கண் பார்வை குறைவு. அதனால் நிராகரிக்கப்பட்டார். பின்பு அமெரிக்க இராணுவத்தில் ஏஜன்ட் ஆக பணியாற்றினார். பின்னர் 3 ஆண்டுக்கு பின்னர் ஜெர்மனிய பத்திரிகை ஒன்றில் நிருபராக சேர்ந்தார். அவர் செயிண்ட் லூயி போஸ்ட் டெஸ்பாட்ச் என்ற பத்திரிகை மூலமாக அரசியல்வாதிகளின் முகத்திரைகளையும் அரசாங்கத்தின் பின்னால் உள்ள திரைமறைவு நிகழ்வுகளையும்,போர்கொடூரங்களையும் தைரியமாக தோலுரித்து காட்டினார்.*

*புலிட்சர்,  1911 ஆம் ஆண்டில் அவர் இறக்குமுன்னர் பத்திரிகையாளர்களுக்கு விருது அளிக்க குறிப்பிட்ட தொகைப் பணத்தைக் கொலம்பியா பல்கலைக்கழகத்துக்கு விட்டுச் சென்றார்.*
*இத்தொகையின் ஒரு பகுதியைக் கொண்டு 1912 ஆம் ஆண்டில் அப் பல்கலைக்கழகத்தின் பத்திரிகைத்துறைக் கல்விக்கழகம் (School of Journalism) தொடங்கப்பட்டது. முதலாவது புலிட்சர் பரிசு 1917ஆம் ஆண்டு ஜுன் மாதம் நான்காம் நாள் வழங்கப்பட்டது. இப்பொழுது இது ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்படுகின்றது.*
*🌷அக்டோபர் 29, வரலாற்றில் இன்று.*
--------------------------------------------------
 *முல்லை பெரியாறு அணை கட்டுவதன் முதன்மை நடவடிக்கையாக அக்டோபர் 29, 1886 இல் திருவிதாங்கூர் அரசர் விசாகம் திருநாளுக்கும் பிரிட்டிஷ் அரசுக்கும் இடையில் 999 ஆண்டுகள் செல்லுபடியாகும் ஒரு குத்தகை ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட தினம் இன்று.*

*அந்த குத்தகை ஒப்பந்தம் திருவிதாங்கூரின் திவான் வி. ராம் மற்றும் சென்னை மாகாணத்தின் மாநிலச் செயலாளர் ஜே. சி. ஹான்னிங்டன் இருவராலும் கையொப்பமிடப்பட்டது.*


*இராணுவப் பணிப் பொறியாளராக இந்தியாவிற்கு வந்தவர் கர்னல் பென்னி குக் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் பெரியாறு என்ற ஆறாக ஓடி வீணாகக் கடலில் சென்று கலப்பதைப் பார்த்து இதன் குறுக்காக ஒரு அணையைக் கட்டி மலையின் வடக்குப் பகுதிக்குத் திருப்பி விட்டால் வறண்டுள்ள நிலங்கள் பயனுள்ள விளைநிலங்களாக மாறிவிடும் என்று திட்டமிட்டார். இதற்கான திட்டத்தை ஆங்கிலேய அரசின் பார்வைக்கு வைத்து அனுமதி பெற்றார். இவ்வணை கட்டுவதற்கான இத்திட்டத்தின்படி ஆற்றின் அடிப்பகுதியிலிருந்து 155 அடி உயரமும், ஆற்றின் தளத்திற்கு கீழே 18 அடி ஆழமும் அணையின் மேல் 4 அடி அகலத்தில் 5 அடி உயரக் கைப்பிடிச்சுவர் ஒன்றும் கட்ட முடிவு செய்யப்பட்டது.*

*பல சோதனைகளைக் கடந்து பென்னி குக்கின் விடாமுயற்சி காரணமாக முல்லைப் பெரியாறு அணை 1895ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.*
*🌷அக்டோபர் 29, வரலாற்றில் இன்று.*
---------------------------------------------------
*எழுத்தாளர்*
*லா. ச. ராமாமிர்தம் நினைவு தினம் இன்று.*


*லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (1916 - அக்டோபர் 29, 2007) தமிழ்நாடு, லால்குடியில் பிறந்த தமிழ் எழுத்தாளர். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி காலத்தில் இருந்து எழுதி வந்தவர்.*


*1916 ஆம் ஆண்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடியில் பிறந்தவர். அவருடைய தந்தை சப்தரிஷி, தாய் ஸ்ரீமதி. அவருடைய மனைவி ஹைமாவதி. அவருக்கு 4 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.*


*லா.ச.ரா.வின் முதல் கதை அவரது 18ஆவது வயதில் வெளியானது. தொடக்கத்தில் சிறுகதைகள் மட்டுமே எழுதிவந்த லா. ச. ராவை அவருடைய 50-வது வயதில் சென்னை வாசகர் வட்டம் "புத்ர" என்ற நாவல் எழுத வைத்தது. அவருக்கு 1989இல் சாகித்ய அகாதமி விருது பெற்றுத் தந்த சுயசரிதை சிந்தாநதி தினமணி கதிரில் தொடராக வந்தது.*

*லா.ச.ரா.வின் படைப்புகள் பல இந்திய, அயல்நாட்டு மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்ட "மஹஃபில்", பெங்குவின் நிறுவனத்தார் வெளியிட்ட "நியூ ரைட்டிங் இன் இந்தியா" செக் மொழியில் அவரை மொழியாக்கம் செய்த கமீல் ஜீவலபில் என்ற தமிழ் ஆய்வாளர் சுதந்திர இந்தியாவின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக லா.ச.ரா.வைக் கருதினார்.*

*அவருடைய "பாற்கடல்" என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள். அவருடைய "புத்ர" மற்றும் "அபிதா" நாவல்கள் மொழிநடையால் தனித்துச் சிறந்து விளங்கும். கட்டுரை நூல் "சிந்தாநதி" அவருடைய இயல்பான குறியீட்டு நடையில் பிரமிக்கத்தக்க விதத்தில் எழுதப்பட்டது.*

*அவருடைய படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட்டுவிட்டதால், அவற்றில் பல தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் கிடைக்கின்றன.*

*லா.ச.ரா அக்டோபர் 29, 2007 திங்கட்கிழமை அதிகாலை தமது 91ஆவது வயதில், சென்னையில் காலமானார்.*
*🌷அக்டோபர் 29, வரலாற்றில் இன்று.*
--------------------------------------------------
*அமரர் கல்கியின்* *பொன்னியின் செல்வன்  வரலாற்றுப் புதினம்  தொடராக முதற் தடவையாக கல்கி இதழில் வெளிவர ஆரம்பித்த தினம் இன்று (1950).*


*இப்புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது. *பொன்னியின் செல்வன், பல்வேறு நாடகக்* *குழுக்களால் நாடகமாகவும்*
*அரங்கேற்றப்பட்டுள்ளது.*

*இப்புதினம் புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம் என 5 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 300க்கு மேற்பட்ட அத்தியாயங்களைக் கொண்டது.*

திங்கள், 28 அக்டோபர், 2019

டெங்கு காய்ச்சல் எதிரொலி ~ பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் ~ பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு…

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு அற்ற ஆழ்துளைக் கிணறுகளை பற்றி தகவல் தர நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவு


*🌷அக்டோபர் 28, வரலாற்றில் இன்று.*
--------------------------------------------------
 *ஜோனாஸ் எட்வர்ட் ஸல்க் பிறந்த தினம் இன்று.*

*அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் 28-10-1914 அன்று பிறந்த ஜோனாஸ் எட்வர்ட் ஸல்க்,*
*நியூயார்க் மருத்துவ பல்கலைக்கழகத்தில் படித்து, பட்டம் பெற்று, சிலவகை மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தார். இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய காலகட்டமான 1950களில் உலகம் முழுவதும்* *’போலியோ’ எனப்படும் இளம்பிள்ளை வாதம் நோயின் தாக்கமும், அதனால் விளைந்த பாதிப்புகளும் உச்சகட்டத்தை எட்டியது.*

*குறிப்பாக, 1952ஆம் ஆண்டில் அமெரிக்காவில் மட்டும் சுமார் 58 ஆயிரம் மக்கள் போலியோ நோயினால் பாதிக்கப்பட்டனர்.* *இவர்களில் 3 ஆயிரத்து 145 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.*
 *21 ஆயிரத்து 269 பேர் கை, கால்கள் செயலிழந்த*) *நிலையில் முடக்குவாத தாக்கத்திற்கு ஆளாகி, மாற்றுத் திறனாளிகளாக மாறிப் போயினர்.*

*இந்த அவலநிலையை கண்டு கொதித்துப் போன டாக்டர் ஜோனாஸ் ஸல்க், போலியோவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்* *மாற்று மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இரவும், பகலும் மூழ்கிப் போனார்.*
*10 ஆண்டு கால கடும் உழைப்பின் பலனாக, 1955ஆம் ஆண்டு புதிய மாற்று மருந்து ஒன்றினை வெற்றிகரமாக கண்டுபிடித்தார்.*

*அதே ஆண்டில், சோதனை முயற்சியாக 20 ஆயிரம் டாக்டர்கள், 64 ஆயிரம்* *பள்ளி* *ஊழியர்கள், சுமார்*
*2 லட்சம் தன்னார்வ தொண்டர்கள் கொண்ட போலியோவிற்கு எதிரான தற்காப்பு படையினர்,* *அமெரிக்காவில் உள்ள 18 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு ஜோனாஸ் ஸல்க்-கின் புதிய கண்டுபிடிப்பான ‘போலியோ சொட்டு மருந்து’ போட்டு தீவிர பிரசார முகாமினை தொடங்கினர்.*

*இந்த மருந்தின் செயலாற்றலின் விளைவாகதான். இன்றைய உலகில் போலியோ இல்லாத இளய சமுதாயத்தை பார்க்க முடிகிறது. இந்த அரிய கண்டுபிடிப்புக்கான காப்புரிமை (பேட்டண்ட் ரைட்ஸ்) தனக்கு தேவை இல்லை என்று கூறிவிட்ட டாக்டர் ஜோனாஸ் ஸல்க், அதனை மனித சமுதாயத்துக்கு பரிசாக வழங்குவதாகவும் மகிழ்ச்சியுடன் அறிவித்தார்.*

*அவர் மட்டும் இந்த சொட்டு மருந்துக்கான காப்புரிமையை பெற முயற்சித்திருந்தால் 1960களிலேயே உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரராக உயர்ந்திருக்க முடியும். ஆனால், மிகப்பரந்த பெருந்தன்மையுடன் தனது 10 ஆண்டு ஆராய்ச்சியின் பலனை மனித குலத்துக்கு தானமாக வழங்கி, நோயற்ற சமுதாயத்துக்கான வரலாற்றில் நீங்கா தனிச் சிறப்பிடத்தை இவர் பிடித்துள்ளார்.*

*அவரது இந்த முடிவை அறிந்து வியந்துப் போன ஒரு பத்திரிகை நிருபர், ‘இந்த கண்டுபிடிப்புக்கான காப்புரிமையைப் பெற ஏன் மறுத்து விட்டீர்கள்’ என்று வினவினார். இந்த கேள்விக்கு டாக்டர் ஜோனாஸ் எட்வர்ட் ஸல்க் சற்றும் சிந்திக்காமல் கூறிய பதில் என்ன தெரியுமா...?*

*‘அடப்போங்க... சார்! சூரியனுக்கு யாராவது காப்புரிமை கோர முடியுமா..? அதேபோன்றது தான் இந்த சொட்டு மருந்தும் உலகத்தில் உள்ள அனைத்து உயிரினத்துக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்’ என்று மிகவும் தன்னடக்கத்துடன் அவர் பதில் அளித்தார்.*

*அவர் மட்டும் இந்த மருந்தினை பொதுவுடமை ஆக்கியிராதிருந்தால்... கடந்த 50 ஆண்டுகளில் போலியோவால் பாதிக்கப்பட்ட பல கோடி உயிர்கள் மரணத்தை தழுவி மடிந்திருக்கும். அந்த துர்மரணத்தில் இருந்து மனித குலத்தை காத்து, வாழ்விக்கப் பிறந்த டாக்டர் ஜோனாஸ் எட்வர்ட் ஸல்க், 23-06-1995 அன்று தனது 80வது வயதில் காலமானார்.*

*பிரபல கோடீஸ்வர தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் ஆகியோருக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி செய்திகளை வெளியிடும் உலக ஊடகங்கள், டாக்டர் ஜோனாஸ் எட்வர்ட் ஸல்க் என்ற இந்த ‘மாமனிதர்’ மனித குலத்துக்கு ஆற்றிய மகத்தான சேவையை இருட்டடிப்பு செய்துவிட்டதாகவே பலரும் கருதுகின்றனர்.*

*தனது இறுதி மூச்சு வரை உயிர்க் கொல்லி நோயான எச்.ஐ.வி.க்கு எதிரான தடுப்பு மருந்தினை கண்டுபிடிக்கும் அரிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த டாக்டர் ஜோனாஸ் ஸல்க். தனது இலக்கினை எட்டாமலேயே இறந்துப் போனது மனித குலத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பு என்றே கருத வேண்டும்.*
*🌷அக்டோபர் 28, வரலாற்றில் இன்று.*
--------------------------------------------------

*ஜெர்மன் அறிஞர் பெட்ரிக் மாக்ஸ் முல்லர்*
*(Friedrich Max Muller)*
*நினைவு தினம் இன்று.*

*இந்தியாவுக்கு வராமலேயே இந்திய நாட்டின் உயர்ந்த நூல்களை மொழிபெயர்த்து உலகறியச் செய்தவர், ஜெர்மன் நாட்டு அறிஞர் மாக்ஸ் முல்லர். அவரது நண்பர் மலபாரி, அவரை இந்தியாவுக்கு வரவேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அதற்கு மாக்ஸ் முல்லர், "நான் வருவதற்கில்லை! ஏனெனில், புராதனமான பண்பாடு நிறைந்த, முனிவர்கள் வாழ்ந்த இந்தியாவிலேயே அவர்களது உன்னதத் தத்துவ நூல்கள் மூலம் வாழ்ந்துவிட்டேன். நான் அங்கே வந்தால் மீண்டும் ஜெர்மன் திரும்ப முடியாது" என்று கூறி மறுத்துவிட்டார்.*
*🌷அக்டோபர் 28, வரலாற்றில் இன்று.*
-------------------------------------------------
*சர்வதேச அனிமேஷன் தினம் இன்று.*

*அசையும் படங்களை கொண்டு உருவாக்கப்படும் அனிமேஷன் திரைப்படம் ஆரம்ப காலத்தில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவையாக இருந்தாலும், தற்போது அனைத்துலக மக்களின் விருப்ப தேர்வில் ஒன்றாக திகழ்கிறது.*
*வெகு வேகமாக வளர்ந்து வரும் 3D தொழில்நுட்பமும், அனிமேஷன் துறையை சார்ந்தது தான். இந்த அனிமேஷன் தொழில்நுட்பத்தில் உருவாகும் திரைப்படங்கள் மற்றும் இத்துறையில் பணியாற்றும் ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக “சர்வதேச அனிமேஷன் தினம்” கொண்டாடப்படுகிறது.*

*1892இல் சார்லெஸ் எமிலி ரெனால்ட் என்பவர் கிரெவின் மியூசியத்தில் முதன் முதலில் திரையரங்கு ஒன்றில் அனிமேஷன் திரைப்படத்தை திரையிட்டதை நினைவு கூறும் விதமாக இந்த சர்வ தேச அனிமேஷன் தினம் அமைந்துள்ளது.*
*சமீப காலங்களாக இந்நாள் 50க்கும் மேற்பட்ட நாடுகளால் கொண்டாடப்*
*படுகின்றன. UNESCOவின் ஒரு அங்கமான சர்வதேச அனிமேஷன் திரைப்பட சங்கம்(International Animated Film Association-* *ASIFA), 2002இல் இந்நாளை அறிமுகப்படுத்தியது.*
*இந்நாளன்று உலகின் பல பகுதிகளில், அனிமேஷன் திரைப்படங்கள் மற்றும் குறும்படங்களை ஊக்குவிக்கும் விதமாக, புதிய அனிமேஷன் குறும்படங்கள் மற்றும் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.*