செவ்வாய், 29 அக்டோபர், 2019

*🌷அக்டோபர் 29, வரலாற்றில் இன்று.*
--------------------------------------------------
*அமரர் கல்கியின்* *பொன்னியின் செல்வன்  வரலாற்றுப் புதினம்  தொடராக முதற் தடவையாக கல்கி இதழில் வெளிவர ஆரம்பித்த தினம் இன்று (1950).*


*இப்புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது. *பொன்னியின் செல்வன், பல்வேறு நாடகக்* *குழுக்களால் நாடகமாகவும்*
*அரங்கேற்றப்பட்டுள்ளது.*

*இப்புதினம் புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம் என 5 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 300க்கு மேற்பட்ட அத்தியாயங்களைக் கொண்டது.*