புதன், 8 ஜனவரி, 2020

எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு பொதுத்தேர்வு ஏப்ரல் 2020 _செய்திக்குறிப்பு_அரசு தேர்வுகள் இயக்ககம்

சாலசித்தி படிவம்_Shaala Siddi Offline Format 2019-2020

ஜனவரி 8, வரலாற்றில் இன்று.

பிடல் காஸ்ட்ரோ கியூபாவில் புரட்சி செய்து ஆட்சியை கைப்பற்றிய தினம் இன்று.

இலவசக் கட்டாயக் கல்வி, இலவச மருத்துவ வசதி என கியூபா நிகழ்த்திய சாதனைகளுக்கு மூலக் காரணம் பிடல் காஸ்ட்ரோ ஆவார்.

 கியூபாவின் மீது திணிக்கப்பட்ட மிக மோசமான அரசியல், பொருளாதார தடைகளைத் தாண்டியும் அந்நாட்டை திறம்பட ஆட்சி செய்தவர்.

தன் நாட்டு வளங்களை கைப்பற்ற முயன்ற அமெரிக்காவுக்கு தன் வாழ்நாள் முழுதும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்.
ஜனவரி 8, வரலாற்றில் இன்று.

இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங் பிறந்த தினம் இன்று.
.
ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking, 08.011.1942 -14 .03. 2018) ஒரு கோட்பாட்டு இயற்பியலாளர் ஆவார்.

பள்ளியில் சுட்டியாக இருந்த அவர் இளம் வயதிலேயே வீட்டில் கிடந்த சாமான்கள்,கடிகார பாகங்கள், அட்டைகள் எல்லாவற்றையும் இணைத்து ஒரு கணினியை உருவாக்கினார் . அப்பா மருத்துவம் படிக்க சொல்ல, இவர் இயற்பியலை ஆக்ஸ்போர்டில் படித்தார் ; வகுப்புகள் அவருக்கு போர் அடித்தன . மூன்று வருட காலத்தில் மொத்தமே ஆயிரம் மணிநேரம் தான் படித்திருப்பார் ; முதல் கிரேடில் தேர்வு பெறாவிட்டால் காஸ்மாலஜி துறையில் மேற்படிப்பை படிக்க இயலாது ;எனினும் தன் திறனை கல்லூரியின் நேர்முகத்தில் காட்டி கேம்ப்ரிட்ஜில் சேர்ந்தார்.

திடீரென்று ஒரு நாள் ஏதோ தடுமாற்றம் உண்டானது. மாடிப்படியில் நடக்கும் பொழுது தடுமாறினார்,மங்கலாக உணர ஆரம்பித்தார்,பேச்சு குழற ஆரம்பித்தது,செயல்பாடுகள் முடங்கின. மோட்டார் நியூரான் நோய் என அழைக்கப்பட்ட அரிய நோய் தாக்கி இருந்தது . இரண்டு வருடம் வாழ்ந்தால் கடினம் என்றார்கள்...
முதலில் நொறுங்கிப்போனவர் பின் நம்பிக்கையை வளர்த்துக்கொண்டு பணிகளை தொடர்ந்தார் .

காலம் மற்றும் அண்டவெளி பற்றிய அவரின் முனைவர் கட்டுரை ஆடம்ஸ் பரிசை பெற்றது. இந்த காலத்தில் கரங்கள் செயலற்று போயின. சுத்தமாக பேச முடியாத நிலை உண்டானது. எனினும் பேச்சு உருவாக்கும் கருவி மூலம் பேசி வந்தார் .

1979 இல் கேம்ப்ரிட்ஜில் நியூட்டன் உட்பட பதினான்கு பேர் மட்டுமே வகித்த லுகாஸியன் கணித பேராசிரியர் ஆனார் .கருந்துளைகளில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சை பற்றிய அவரது அறிவிப்பு ஹாகிங் கதிர்வீச்சு என அழைக்கபடுகிறது . காஸ்மாலஜி துறையை சார்பியல் மற்றும் குவாண்டம் இயற்பியல் எனும் இரண்டு பிரிவுகளின் ஊடாக கண்ட முதல் அறிஞர் இவரே ; இவரின் "A Brief History of Time" நூல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது .

ஐன்ஸ்டீனுக்கு பின் உலகின் தலைசிறந்த கோட்பாட்டு இயற்பியலாளர் இவர் ;சோதனைகளை கடந்து சாதிக்க தூண்டும் அவரிடம் ,"உங்களுக்கு வாழ்க்கை வெறுப்பாக இல்லையா ? எப்படி இத்தனை துன்பங்களுக்கு நடுவிலும் தீவிரமாக உங்களால் செயலாற்ற முடிகிறது ?" என்று கேட்கப்பட்டது ,"என்னுடைய இருபத்தி ஒரு வயதிலேயே என்னுடைய எதிர்பார்ப்புகள் மருத்துவர்களால் பூஜ்யமாக ஆக்கப்பட்டுவிட்டது. அதற்கு மேல் நான் பெற்றது எல்லாமே போனஸ் தான். எதை இழந்தோம் என்பது அல்ல விஷயம் ? எது மிச்சமிருக்கிறது என்பதே முக்கியம் ! வாழ்க்கை சுகமானது !" என்றார். நீங்களும் மிச்சமிருப்பதில் மின்னிடுங்கள்.
ஜனவரி 8,
வரலாற்றில் இன்று.

உலக ஆம்புலன்ஸ் தினம் இன்று.

முன்பு கட்டண சேவையாக நம் ஊரில் இருந்த ஆம்புலன்ஸ், இப்போது இலவச சேவையாக செயல்பட்டு வருவது நமக்குத் தெரியும். அதற்கு ஏன் 108 என்ற எண்ணைப் பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?

ஜனவரி 8 அன்று உலக ஆம்புலன்ஸ் தினமாக உலகமெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 1/08 என்பதன் அடையாளமாகவே 108 என்ற எண்ணை வைத்திருக்கிறார்கள்!
ஜனவரி 8, வரலாற்றில் இன்று.

ராபர்ட் பேடன் பவல்  (Robert Baden-Powell)  நினைவு தினம் இன்று.

பவுல், ஸ்கவுட் எனப்படும் சாரணர் இயக்கத்தை உருவாக்கியவர் ஆவார். இவர் இங்கிலாந்தில் பிறந்த ஆங்கிலத் தளபதி. 1906 ஆம் ஆண்டு சாரணர்  இயக்கத்தை தோற்றுவித்தார். 1910இல் சிறுமிகள் சாரணர் இயக்கத்தையும் தொடங்கினார்.

ரெவறண்ட் பேடன் பவல் என்பவரின் மூன்றாவது திருமணத்தில் பிறந்த பத்துக் குழந்தைகளில் எட்டு ஆண்கள். அந்த ஆண்களில் ஏழாவதாகப் பிறந்தவர் பேடன் பவல். இவருக்கு மூன்று வயதாக இருக்கும் போது இவரது தந்தையார் காலமானார். காலமானவரை கௌரவிப்பதற்காக பவல் என்றிருந்த குடும்பப் பெயர் பேடன் பவல் ஆக்கப்பட்டது.

புலமைப் பரிசில் பெற்று சார்ட்டார்ஹவுஸ் பாடசாலையில் கல்வி கற்ற பேடன் பவல் 1876இல் பிரித்தானிய இராணுவத்தில் இணைந்தார். 1910 இல் ஓய்வு பெற்றார். 1941 இல் கென்யாவில் காலமானார்.

சிறுவர்களுக்கான சாரணியம் (Scouting for Boys) என்ற நூலை 1908 ஆம் ஆண்டு பதிப்பித்தார். ஆப்பிரிக்காவிற்குத் திரும்பிய பேடன் பவுல் தனது புத்தகமான எய்ட்ஸ் டு ஸ்கவுட்டிங் (Aids to Scouting) வெற்றிகரமாக விற்பனை ஆவதனையும், அவை பல இளைய மற்றும் ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதற்குப் பயன்படுவதையும் கண்டார். 1907 ஆம் ஆண்டு சாரணியம் ஓர் சோதனை முயற்சியாக 20 சிறுவர்களுடன் தொடங்கியது. முதலில் தேசிய ரீதியில் துவங்கப்பட்ட இம்முயற்சி பின்னர் உலக அளவில் புகழ்பெற்றது.

செவ்வாய், 7 ஜனவரி, 2020

ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு- மாணவர்கள் விவரங்கள் தயாரித்தல்-அறிவுரை வழங்குதல் சார்ந்து அரசு தேர்வுகள் இயக்கக இயக்குநர் செயல்முறை நாள்:07.01.2020



Go No :3 date:06.01.2020 குடும்ப ஓய்வூதியம் மற்றும் C,D பிரிவு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் பொங்கல் போனஸ் அறிவிப்பு






தமிழ்நாட்டின் கல்வி பயிற்று மொழி தமிழே! இந்தி மொழித் திணிப்புகளை கைவிடுக! தமிழ்நாடு் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலச்செயலாளர் முருகசெல்வராசன் வேண்டுகோள்!

தமிழ்நாட்டின் கல்வி பயிற்று மொழி தமிழே!
இந்தி மொழித் திணிப்புகளை  கைவிடுக!
தமிழ்நாடு் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலச்செயலாளர் முருகசெல்வராசன் வேண்டுகோள்!

அன்பானவர்களே! வணக்கம்.
தேசியஅளவிலான பள்ளித்தலைமையாசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்களின் மேம்பாட்டுக்கான முன்னெடுப்புப் பயிற்சி(NISHTHA) நாமக்கல் , அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி (தெற்கு)யில் 07.01.2020 முதல் 5நாள்களுக்கு நடைபெறுகிறது. இப்பயிற்சியில் சற்றொப்ப 200 ஆசிரியப் பெருமக்கள் நாமகிரிப்பேட்டை, இராசிபுரம், வெண்ணந்தூர், எலச்சிப்பாளையம் , பரமத்தி மற்றும் எருமப்பட்டி ஒன்றியங்களில் இருந்து பங்கேற்கச் செய்யப்பட்டுள்ளனர்.
தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு அலைச்சல் இன் றி , அலைக்கழிப்பு இன்றி அந்தந்த ஒன்றியங்களிலேயே  பயிற்சி தருவதற்க்கு என்றே வட்டாரவள மையங்கள் கட்டப்பட்டுள்ள நிலையில் ,ஏற்கனவே வளமையங்களிலேயே பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்துள்ள நிலையில் ஆசிரியர்களை அன்றாடம் சென்று வர 100கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணம் செய்யவைத்து , ஒரு வாரத்தில் 500கிலோமீட்டருக்கு மேல் அலைக்கழிப்புச் செய்து காலை ,மதிய உணவுகளுக்கு சிரமங்களை உருவாக்கி பயிற்சி தரப்படுகிறது. இது போன்ற எல்லா விதமான பணியிடைப் பயிற்சிகளையும் அந்தந்த வட்டார வளமையங்களிலேயே நடத்திடுவதற்கு ஆவன செய்வது தான் பயிற்சிக்கு இலக்கணமாகும்: அழகாகும். இக்கோரிக்கையை கல்வித்துறை உயர் அலுவலர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு   வேண்டுகிறேன்.
இப்பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்டுள்ள ஆசிரியர்களை அவர்களது அலைபேசியைக் கொண்டு online test( pre traning survey-tamilnadu )செய்திடச் சொல்கின்றனர். இதில் உள்ள 40 வினாக்களும்  ஆங்கிலத்திலேயே  உள்ளது. இவ்வினாக்களுக்கு தமிழில் மொழிபெயர்ப்புச்செய்து தமிழில் விடையை தேர்வு செய்திடும் வாய்ப்பு அறவே இல்லை என்று கூறப்படுகிறது. இதன்காரணமாகவும் மாநிலத்தின் பயிற்றுமொழியான  தமிழ் மொழி ,  அல்லது வட்டார மொழி முற்றிலுமாக அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி இந்த 40கேள்விகளில் ஒரு கேள்வி், அதாவது 22வது கேள்வி இந்தியில் தரப்பட்டுள்ளது. இந்த இந்திக்கேள்வியையும் தமிழில் மொழிபெயர்த்து விடையைத் தேர்வுசெய்திடும் வாய்ப்பு தரப்படவில்லை.  இந்தியில் உள்ள கேள்வி  என்ன வென்றே தெரியாத நிலைக்காணப்பட்டாலும் , அக்கேள்விக்குரிய  விடையைத் தெரிவுச்செய்திட பணிப்பது  கொடூரமான நடவடிக்கையாகும். இத்தகு இந்தித்திணிப்பை அவ்வளவு இலேசாக கடந்துவிட இயலாது என்பதுமட்டுமல்ல கடந்துவிடக்கூடாது என்பதே வேண்டுகோளாகும்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை தமிழ்நாட்டு ஆசிரியர்களுக் கான பயிற்சியின் online test இல் தமிழை முற்றாக புறக்கணித்திருப்பதும், இந்தியை போகிறபோக்கில் வினாக்களின் வழியில்  வலிய திணிக்கப்பட்டு உள்ளதற்கு  உடந்தையாக  உள்ளதும் 
கடும் கண்டனத்திற்குரியதாகும் .
அகில இந்தியத் தேர்வுகளில் , மாநிலத்தேர்வுகளில் எல்லாம் தமிழுக்கு  உரிய இடம் கேட்டு போராடுவது போன்று தமிழ்நாட்டுக் கல்வியில் தமிழ்மொழிக்கு முதன்மையும், முக்கியத்துவமும் வலியுறுத்தியும்  , தமிழ்நாட்டின் கல்வி பயிற்று மொழியாக 
 தமிழ் மொழியே  இருந்திடல் வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்தும்  தமிழ்நாட்டு ஆசிரியர்கள் களம் காணுதல் தான் தாய்த்தமிழ்மொழிக்கு ஆற்றும் மிகச்சிறந்த  தொண்டாகும் என்று  பணிந்து தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி.
-முருகசெல்வராசன்,
மாநிலச்செயலாளர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் மன்றம்.
நாமக்கல்மாவட்டம்.

பள்ளிக்கல்வி_center for culture resources and training டெல்லி யில் விருப்ப முள்ள ஆசிரியர்கள் கலந்துக்கொள்ள நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செயல்முறை