புதன், 8 ஜனவரி, 2020

ஜனவரி 8, வரலாற்றில் இன்று.

பிடல் காஸ்ட்ரோ கியூபாவில் புரட்சி செய்து ஆட்சியை கைப்பற்றிய தினம் இன்று.

இலவசக் கட்டாயக் கல்வி, இலவச மருத்துவ வசதி என கியூபா நிகழ்த்திய சாதனைகளுக்கு மூலக் காரணம் பிடல் காஸ்ட்ரோ ஆவார்.

 கியூபாவின் மீது திணிக்கப்பட்ட மிக மோசமான அரசியல், பொருளாதார தடைகளைத் தாண்டியும் அந்நாட்டை திறம்பட ஆட்சி செய்தவர்.

தன் நாட்டு வளங்களை கைப்பற்ற முயன்ற அமெரிக்காவுக்கு தன் வாழ்நாள் முழுதும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்.