வியாழன், 9 ஜனவரி, 2020

ஜனவரி 9, வரலாற்றில் இன்று.

விஞ்ஞானி டாக்டர்  ஹர்கோபிந்த் குரானா பிறந்த தினம் இன்று.

1959ல் மனித உடலின் செயல் முறைகளுக்கு முக்கிய பங்கு வகிக்கும் கோ என்சைம் ஏ என்ற வேதிப் பொருளை கண்டறிந்தது மட்டுமன்றி
1960ஆம் ஆண்டு அமெரிக்கா சென்று, விஸ்கான்சின் பல்கலைக்கழக என்சைம் மற்றும் செயற்கை உயிர் உற்பத்தி துறையில் பணியாற்றி வருகையில்
தொடர்ந்து ஆய்வுகளை "மார்ஷல் நோரென்பர்க்" அவர்களுடன் இணைந்து மேற்கொண்டு, அதன் மூலம் மரபு வழி நோய்களை (ஆர். என். ஏ. ரிலேட்டட் ஜெனடிக்கல் டிசாடர்ஸ்) குணமாக்க இயலும் என்ற  அவர்களது கண்டு பிடிப்புக்காக...""1968ல் உடற்கூறியல் மற்றும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு"" டாக்டர் குரானா, டாக்டர் நோரென்பர்க், மற்றும் டாக்டர் ஹாலே ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கும் இணைந்து வழங்கப்பட்டது.!

1922 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் நாள் அப்போது சுமார் 100 குடும்பங்கள் மட்டுமே கொண்ட, தற்போது பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் ராய்பூர் கிராமத்தில் பிறந்த குரானா அவர்கள் இளவயது முதலே  படிப்பில் சிறந்து விளங்கினார்.

மேற்குவங்க மாநிலத்தின் முல்தானில் பள்ளிப் படிப்பைச் சிறப்பாகப் பயின்று முடித்து, லாகூரில், பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் பி.எஸ்சி மற்றும் பேராசிரியர் "மதன்சிங்" அவர்களின் மேற்பார்வையில், 1945ம் ஆண்டு வேதியியலில் முதுகலைப் பட்டமும் பெற்று, அரசின் ஸ்காலர்ஷிப் மூலம் இங்கிலாந்தில் உள்ள லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, "பேராசிரியர் ரோஜர் ஜே. எஸ். பீர்" வழிகாட்டுதலில், ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்து, திரு குரானா அவர்கள் டாக்டர் பட்டம் பெற்றார்.!

தொடர்ந்து மசாசூசெட்ஸ் பல்கலைக் கழகத்தில், உயிரியல் மற்றும் வேதியியல் பேராசிரியராக பணியாற்றி...ஜெனடிக் பாலிமார்பிசம் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, டாக்டர் குரானா மற்றும் 24 பேர் அடங்கிய குழுமத்தின் 9 ஆண்டுகள் விடாமுயற்சியின் பயனாக மனிதர்களின் குடற் பகுதியில் வாசம் செய்யும், ஈ. கோலை ( ஈஷ்சீரியா கோலை)என்று அழைக்கப்படும் அனரோபிக் பாக்டீரியத்தின் 207 மரபணுக்களை செயற்கையாக உருவாக்கி, 1976ம் ஆண்டு ஆகஸ்ட்டு மாதம்...அந்த மரபணுக்களை இயற்கை மரபணுக்கள் போல செயல்பட வைத்த நிகழ்வு உலகப் புகழ் பெற்றது.

டாக்டர் குரானா பெற்ற பிற விருதுகள் :

1. 1968 - ஹாவாயில், ஹோனலூலுவின் "சிறப்பு மிக்கச் சேவைக்கான விருது".!

2. 1969ஆம் ஆண்டு இவருக்கு, மைய அரசின் 2ம் சிவிலியன் விருதான  பத்மபூஷண்.!

3. 1971‍ல் அமெரிக்கன் அச்சீவ்மெண்ட் அவார்ட்...பிலடெல்பியா பலகலைக் கழகம் .!

4. 1972‍ல் கல்கத்தா...போஸ் நிறுவனம் 'ஜே.சி. போஸ்' பதக்கம்.!

5. 1973-74 ஆண்டுக்கான அமெரிக்க வேதியல் பிரிவின் வில்லர்ட் கிப்ஸ் பதக்கம்.!

6. தொடர்ந்து'கெய்ர்ட்னர் அமைப்பு அனைத்துலக விருது', 'லூயிசா குரோஸ் ஹார்விட்சு பரிசு' ,'ஆல்பர்ட் லாஸ்கரின் அடிப்படை மருத்துவ ஆய்வுக்கான விருது' முதலிய விருதுகளையும் டாக்டர் குரானா பெற்றுள்ளார்.!

அமெரிக்க தேசிய அறிவியல் கழகம், அமெரிக்க அறிவியல் முன்னேற்றக் கழகம், ரஷ்யாவின் அறிவியல் கழக அயல் நாட்டு உறுப்பினர், ஸ்கிரிப்ஸ் ஆய்வு நிறுவனத்தின் அறிவியல் ஆளுநர்கள் குழுவில் உறுப்பினர் போன்ற பதவிகள் மட்டுமன்றி இந்திய வேதியல் கழகத்தில் கௌரவ ஆய்வு உறுப்பினர் என்ற பதவியினையும் வகித்தார் டாக்டர் குரானா அவர்கள்.!

 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 9ம் நாள் தனது 89ம் வயதில் முதுமை காரணமாக இயற்கை எய்தினார்.
ஜனவரி 9,
வரலாற்றில் இன்று.

வெளிநாடு வாழ் இந்தியர் தினம் இன்று.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் பாடுபடுகின்றனர். அவர்களின் பங்களிப்பை போற்றும் வகையில் ஜனவரி 9ஆம் தேதி வெளிநாடு வாழ் இந்தியர் தினம் கொண்டாடப்படுகிறது.

மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து ஜனவரி 9, 1915ஆம் ஆண்டு (மும்பை) இந்தியா திரும்பினார். காந்தி தாயகம் திரும்பிய நாளை அடிப்படையாகக் கொண்டு ஜனவரி 9ஐ வெளிநாடு வாழ் இந்தியர் தினமாக 2002ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டது. 2003ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
ஜனவரி 9, வரலாற்றில் இன்று.

புனித ஜார்ஜ் கோட்டையில் சென்னை சட்டமன்றத்தின் முதல் கூட்டம் நடைபெற்ற தினம் இன்று (1921).

புனித ஜார்ஜ் கோட்டை (Fort St. George), இந்தியாவில் ஆங்கிலேயர்களின் முதலாவது கோட்டையாகும்.பிரான்சிஸ்டே, ஆண்ட்ரூ கோகன் என்ற ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த இரு அதிகாரிகளின் முயற்சியால் 1639 ஆம் ஆண்டில் கரையோர நகரான மதராசில் (இன்றைய சென்னை நகரம்) கட்டத் தொடங்கப்பட்டது. வெறுமனே கிடந்த இப் பகுதியில் கோட்டை கட்டப்பட்டதால், புதிய குடியேற்றங்களும், வணிக நடவடிக்கைகளும் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. இன்றைய சென்னை நகரம் இக் கோட்டையைச் சுற்றியே உருவானது எனக் கூற முடியும்.
இந்தக் கோட்டை யில் தான். தமிழகத்தின் முதல் சட்டசபை 1921ஆம் ஆண்டுஉருவாக்கப்பட்டது. அதற்கு மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் என்றுபெயர். இந்த சட்டமன்றத்தின் கூட்டம் முதல்முறையாக புனித ஜார்ஜ் கோட்டையில்,1921ஆம் ஆண்டு ஜனவரி 9ந் தேதி கூடியது. கன்னாட் கோமகன் (Duke of Connaught) இதை தொடங்கி வைத்தார்.
ஜனவரி 9, வரலாற்றில் இன்று.

1951ஆம் ஆண்டு
ஐநா தலைமையகம் நியூயார்க்கில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்ட தினம் இன்று.

1945ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம் நாள் ஐக்கிய நாடுகள் கழகம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது.

 ஐக்கிய நாடுகள் சபையின் இந்தத் தலைமையகக் கட்டடம் 1949, 1950 ஆம் ஆண்டுகளில், ஜோன் டி, ராக்பெல்லர் ஜூனியர் வழங்கிய 8.5 மில்லியன் டாலர்கள் நன்கொடையைக் கொண்டு வாங்கிய நிலத்தில் கட்டப்பட்டது. இது மான்ஹட்டனின் கிழக்குப் பகுதியில், டர்ட்டில் பே (Turtle Bay) வட்டகையில், ஈஸ்ட் ஆற்றை நோக்கியிருக்கும் பரந்த நிலத்தில் அமைந்துள்ளது.

இக்கட்டிடத்தொகுதி அமைந்துள்ள இடம் நியூயார்க் நகரத்தில் இருந்தாலும், இந்த இடம் ஒரு அனைத்துலக ஆட்சிப் பகுதியாகும்.
அமெரிக்காவுக்கு (USA ) சொந்தமானதல்ல !

புதன், 8 ஜனவரி, 2020

எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு பொதுத்தேர்வு ஏப்ரல் 2020 _செய்திக்குறிப்பு_அரசு தேர்வுகள் இயக்ககம்

சாலசித்தி படிவம்_Shaala Siddi Offline Format 2019-2020

ஜனவரி 8, வரலாற்றில் இன்று.

பிடல் காஸ்ட்ரோ கியூபாவில் புரட்சி செய்து ஆட்சியை கைப்பற்றிய தினம் இன்று.

இலவசக் கட்டாயக் கல்வி, இலவச மருத்துவ வசதி என கியூபா நிகழ்த்திய சாதனைகளுக்கு மூலக் காரணம் பிடல் காஸ்ட்ரோ ஆவார்.

 கியூபாவின் மீது திணிக்கப்பட்ட மிக மோசமான அரசியல், பொருளாதார தடைகளைத் தாண்டியும் அந்நாட்டை திறம்பட ஆட்சி செய்தவர்.

தன் நாட்டு வளங்களை கைப்பற்ற முயன்ற அமெரிக்காவுக்கு தன் வாழ்நாள் முழுதும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்.
ஜனவரி 8, வரலாற்றில் இன்று.

இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங் பிறந்த தினம் இன்று.
.
ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking, 08.011.1942 -14 .03. 2018) ஒரு கோட்பாட்டு இயற்பியலாளர் ஆவார்.

பள்ளியில் சுட்டியாக இருந்த அவர் இளம் வயதிலேயே வீட்டில் கிடந்த சாமான்கள்,கடிகார பாகங்கள், அட்டைகள் எல்லாவற்றையும் இணைத்து ஒரு கணினியை உருவாக்கினார் . அப்பா மருத்துவம் படிக்க சொல்ல, இவர் இயற்பியலை ஆக்ஸ்போர்டில் படித்தார் ; வகுப்புகள் அவருக்கு போர் அடித்தன . மூன்று வருட காலத்தில் மொத்தமே ஆயிரம் மணிநேரம் தான் படித்திருப்பார் ; முதல் கிரேடில் தேர்வு பெறாவிட்டால் காஸ்மாலஜி துறையில் மேற்படிப்பை படிக்க இயலாது ;எனினும் தன் திறனை கல்லூரியின் நேர்முகத்தில் காட்டி கேம்ப்ரிட்ஜில் சேர்ந்தார்.

திடீரென்று ஒரு நாள் ஏதோ தடுமாற்றம் உண்டானது. மாடிப்படியில் நடக்கும் பொழுது தடுமாறினார்,மங்கலாக உணர ஆரம்பித்தார்,பேச்சு குழற ஆரம்பித்தது,செயல்பாடுகள் முடங்கின. மோட்டார் நியூரான் நோய் என அழைக்கப்பட்ட அரிய நோய் தாக்கி இருந்தது . இரண்டு வருடம் வாழ்ந்தால் கடினம் என்றார்கள்...
முதலில் நொறுங்கிப்போனவர் பின் நம்பிக்கையை வளர்த்துக்கொண்டு பணிகளை தொடர்ந்தார் .

காலம் மற்றும் அண்டவெளி பற்றிய அவரின் முனைவர் கட்டுரை ஆடம்ஸ் பரிசை பெற்றது. இந்த காலத்தில் கரங்கள் செயலற்று போயின. சுத்தமாக பேச முடியாத நிலை உண்டானது. எனினும் பேச்சு உருவாக்கும் கருவி மூலம் பேசி வந்தார் .

1979 இல் கேம்ப்ரிட்ஜில் நியூட்டன் உட்பட பதினான்கு பேர் மட்டுமே வகித்த லுகாஸியன் கணித பேராசிரியர் ஆனார் .கருந்துளைகளில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சை பற்றிய அவரது அறிவிப்பு ஹாகிங் கதிர்வீச்சு என அழைக்கபடுகிறது . காஸ்மாலஜி துறையை சார்பியல் மற்றும் குவாண்டம் இயற்பியல் எனும் இரண்டு பிரிவுகளின் ஊடாக கண்ட முதல் அறிஞர் இவரே ; இவரின் "A Brief History of Time" நூல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது .

ஐன்ஸ்டீனுக்கு பின் உலகின் தலைசிறந்த கோட்பாட்டு இயற்பியலாளர் இவர் ;சோதனைகளை கடந்து சாதிக்க தூண்டும் அவரிடம் ,"உங்களுக்கு வாழ்க்கை வெறுப்பாக இல்லையா ? எப்படி இத்தனை துன்பங்களுக்கு நடுவிலும் தீவிரமாக உங்களால் செயலாற்ற முடிகிறது ?" என்று கேட்கப்பட்டது ,"என்னுடைய இருபத்தி ஒரு வயதிலேயே என்னுடைய எதிர்பார்ப்புகள் மருத்துவர்களால் பூஜ்யமாக ஆக்கப்பட்டுவிட்டது. அதற்கு மேல் நான் பெற்றது எல்லாமே போனஸ் தான். எதை இழந்தோம் என்பது அல்ல விஷயம் ? எது மிச்சமிருக்கிறது என்பதே முக்கியம் ! வாழ்க்கை சுகமானது !" என்றார். நீங்களும் மிச்சமிருப்பதில் மின்னிடுங்கள்.
ஜனவரி 8,
வரலாற்றில் இன்று.

உலக ஆம்புலன்ஸ் தினம் இன்று.

முன்பு கட்டண சேவையாக நம் ஊரில் இருந்த ஆம்புலன்ஸ், இப்போது இலவச சேவையாக செயல்பட்டு வருவது நமக்குத் தெரியும். அதற்கு ஏன் 108 என்ற எண்ணைப் பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?

ஜனவரி 8 அன்று உலக ஆம்புலன்ஸ் தினமாக உலகமெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 1/08 என்பதன் அடையாளமாகவே 108 என்ற எண்ணை வைத்திருக்கிறார்கள்!
ஜனவரி 8, வரலாற்றில் இன்று.

ராபர்ட் பேடன் பவல்  (Robert Baden-Powell)  நினைவு தினம் இன்று.

பவுல், ஸ்கவுட் எனப்படும் சாரணர் இயக்கத்தை உருவாக்கியவர் ஆவார். இவர் இங்கிலாந்தில் பிறந்த ஆங்கிலத் தளபதி. 1906 ஆம் ஆண்டு சாரணர்  இயக்கத்தை தோற்றுவித்தார். 1910இல் சிறுமிகள் சாரணர் இயக்கத்தையும் தொடங்கினார்.

ரெவறண்ட் பேடன் பவல் என்பவரின் மூன்றாவது திருமணத்தில் பிறந்த பத்துக் குழந்தைகளில் எட்டு ஆண்கள். அந்த ஆண்களில் ஏழாவதாகப் பிறந்தவர் பேடன் பவல். இவருக்கு மூன்று வயதாக இருக்கும் போது இவரது தந்தையார் காலமானார். காலமானவரை கௌரவிப்பதற்காக பவல் என்றிருந்த குடும்பப் பெயர் பேடன் பவல் ஆக்கப்பட்டது.

புலமைப் பரிசில் பெற்று சார்ட்டார்ஹவுஸ் பாடசாலையில் கல்வி கற்ற பேடன் பவல் 1876இல் பிரித்தானிய இராணுவத்தில் இணைந்தார். 1910 இல் ஓய்வு பெற்றார். 1941 இல் கென்யாவில் காலமானார்.

சிறுவர்களுக்கான சாரணியம் (Scouting for Boys) என்ற நூலை 1908 ஆம் ஆண்டு பதிப்பித்தார். ஆப்பிரிக்காவிற்குத் திரும்பிய பேடன் பவுல் தனது புத்தகமான எய்ட்ஸ் டு ஸ்கவுட்டிங் (Aids to Scouting) வெற்றிகரமாக விற்பனை ஆவதனையும், அவை பல இளைய மற்றும் ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதற்குப் பயன்படுவதையும் கண்டார். 1907 ஆம் ஆண்டு சாரணியம் ஓர் சோதனை முயற்சியாக 20 சிறுவர்களுடன் தொடங்கியது. முதலில் தேசிய ரீதியில் துவங்கப்பட்ட இம்முயற்சி பின்னர் உலக அளவில் புகழ்பெற்றது.