திங்கள், 13 ஜனவரி, 2020

ஜனவரி 13,
வரலாற்றில் இன்று.

ப்ளாஸ்டிக் கார் தயாரிக்கும் முறைக்கு ஹென்றி ஃபோர்ட் காப்புரிமை பெற்ற தினம் இன்று (1942).

 சோயாபீன், கோதுமை, மக்காச்சோளம் உள்ளிட்ட விவசாய உற்பத்தித் பொருட்களைப் பயன்படுத்தி, ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் என்ற தாவரவியலாளரின் உதவியுடன் ஃபோர்ட் உருவாக்கிய இந்தக் கார், 1941 ஆகஸ்டிலேயே பொதுமக்கள் பார்வைக்குக் காட்சிப்படுத்தப்பட்டது.

 சணல் செடியிலிருந்து உருவாக்கப்படும் உயிரி எரிபொருளால் இயங்கக்கூடியதாக இருந்த இந்தக் காரை, விவசாயத்தையும், தொழில்துறையையும் ஒருங்கிணைப்பதற்காக உருவாக்கியதாகவும், உலோகத்தாலான கார்களைவிடப் பாதுகாப்பானது என்றும் ஃபோர்ட் குறிப்பிட்டார்.

 இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் நிலவிய இரும்புத் தட்டுப்பாட்டால், பெருமளவு இரும்பு ஆயுதத் தயாரிப்புக்காக ஒதுக்கப்பட்ட நிலையில், வாகனத் தயாரிப்புக்கு மிகக் குறைந்த அளவு இரும்பே ஒதுக்கீடு செய்யப்பட்டதற்குத் தீர்வாக இந்தக் காரை உருவாக்கியிருந்தார். உலோகத்தாலான வழக்கமான கார்களின் எடையில் முக்கால் பங்கு மட்டுமே இருந்ததால், இது எரிபொருளையும் குறைவாகப் பயன்படுத்தியது. ஆனால், இரண்டாம் உலகப்போர்க் காலத்தில், அமெரிக்கக் கார்த் தொழிற்சாலைகளை, அரசு ஆயுதம் தயாரிக்கப் பயன்படுத்திக்கொண்டதால், இந்தக் கார் உற்பத்தி செய்யப்படாமலேயே நின்றுபோனது.  மோட்டார் காரைக் கண்டுபிடித்தவர் ஃபோர்ட் இல்லையென்றாலும்,  கார் உற்பத்தியில் அவர் கொண்டு வந்த முன்னேற்றங்கள்தான், 1920-40 காலத்தில் உலகிலிருந்த மொத்தக் கார்களில் பாதி ஃபோர்ட் கார்களாக இருக்கக் காரணமாயின. அவர் கொண்டுவந்த முன்னேற்றங்களில் முக்கியமானது, 1930களிலேயே கார்களில் ப்ளாஸ்டிக் பாகங்களை அறிமுகப்படுத்தியதாகும்.

கார்கள் வெளியிடும் மாசுக்கான சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகளுக்குத் தீர்வாக, தற்காலத்திய முன்னேறிய கார்களில் 50 சதவீதம் வரை ப்ளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனாலும், இவை காரின் எடையில் 10 சதவீதம் மட்டுமே இருப்பதால், காரின் எடையை மிகப்பெரிய அளவுக்குக் குறைத்து, எரிபொருளைச் சேமிக்கின்றன. தேவையான வடிவங்களை உருவாக்குவதற்கு, உலோகத்தைவிட ப்ளாஸ்டிக் சிறந்த தேர்வு என்பதுடன், பாதுகாப்பும் அதிகம், எரிபொருளும் குறைவாகச் செலவாகும் ஆகிய காரணங்களால், கார்களில் ப்ளாஸ்டிக் பாகங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.
ஜனவரி 13, வரலாற்றில் இன்று.

விண்ணில் பறந்த முதல் இந்தியர் ராகேஷ் ஷர்மா பிறந்த தினம் இன்று.

 கடந்த 1984ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி ரஷ்யாவின் ‌சோயூஸ் விண்கலம் வாயிலாக விண்ணிற்கு செல்லும் குழுவில், இந்தியாவின் ராகேஷ் ஷர்மா  இடம்பெற்றார். இவர் தான் விண்ணிற்கு அனுப்பிவைக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையினை பெற்றார்.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவைச்சேர்ந்த ராகேஷ் ஷர்மா. 1949ஆம் வருடம் ஜனவரி 13ஆம் தேதி பிறந்தார். தமது 21 வயதிலேயே (1970) இந்திய விமானப்படையில் சேர்ந்தார். பின்‌னர் படிப்படியாக பல்வேறு விமானப்படையில் பல்வேறு பொறுப்புக்களை வகித்து, மிக் ரக போர் விமானங்களை இயக்கி அதில் வெற்றியும் கண்டார். அன்றைய ‌‌‌சோவியத் யூனியன் (ரஷ்யா,) பிரான்ஸ் மற்றும் வார்சா ஒப்பந்த நாடுகளுக்கு போர்விமானங்கள் குறித்த பயிற்சிக்கு சென்றார். இவரின் துடிப்புமிக்க பணியினை வெளிநாட்டவர்களே பாராட்டினர். இந்த சூழ்நிலையில் தான் கடந்த 1982ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம், விண்ணிற்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இறங்கியது. இதற்காக சோயூஸ் விண்கலம் தயாரானது. இதில் அந்நாட்டைச்சேர்ந்த இரு விண்வெளி வீரர்களில் மூன்றாவது வீரராக இந்தியாவின் ராகேஷ் ஷர்மாவும் தேர்வு செய்யப்பட்டார். இதன்படி ரஷ்யாவின் கஜகஸ்தான் மாகாணத்தின் பைகானூர் விண்வெளி நிலையத்திலிருந்து சோயூஸ்-டி.11 விண்கலம் கடந்த 1982ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி விண்ணில் புறப்படத்தயாரானது. மொத்தம் 7 டன் எடைகொண்ட இந்த விண்கலத்தில், விண்வெளி விஞ்ஞானிகள் கையசைத்து வழியனுப்பி வைக்க விண்ணில் பறந்தார் ஷர்மா. மொத்தம் 7 நாட்கள், 21 மணிநேரம், 40 நிமிடங்கள் விண்வெளியில் பயணித்தார். இதன் மூலம் விண்ணில் கால்தடம் பதித்த முதல் இந்தியர் என்ற பெருமையினை பெற்றார். விண்வெளிக்கு சென்று வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார். ஷர்மாவை அப்போதைய பிரதமர் இந்திரா பாராட்டினார்.

ரஷ்யாவின் உயரிய விருது, இந்தியாவில் அ‌சோக்சக்ரா விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் (ஹெச்.ஏ.எல்.), தேசிய விமான பயிற்சி மையம் (என்.எப்.டி.சி) உள்ள மையங்களில் பல்வேறு பொறுப்புக்களை வகித்த ஷர்மா கடந்த 2001ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

இவர் ஓய்வு பெற்றாலும், இந்திய விண்வெளித்துறைக்கு இவர் ஆற்றிய சேவை அளப்பரியது.இதன்பின்னர் , இந்தியாவின் கல்பனா ‌சாவ்லா, சுனிதா வில்லிம்ஸ் ஆகி‌யோர் விண்வெளிக்கு சென்றிருந்தாலும், இவர்கள் அமெரிக்கவாழ் இந்திய வம்சாவழியினர் ஆவார். ஆனால் ராகேஷ் ஷர்மா இந்தியர் என்பதால் இவருக்கு இப்பெருமை உள்ளது.

ITR -1 படிவம் யாருக்கு? 5 புதிய மாற்றங்கள் அறிமுகம்...


வெள்ளி, 10 ஜனவரி, 2020

தொடக்கக் கல்வி_3,4,&5வகுப்பு மாணவர்கள் விளையாட்டுத்திறனை கண்டறிந்து ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு போட்டிகள் நடத்துதல் சார்ந்து செயல்முறை- Namakkal CEO




புகையில்லா போகி பண்டிகை கொண்டாட மாணவர்களுக்கு தலைமையாசிரியர் அறிவுரை வழங்குதல் சார்ந்து...

  ‌

நாமக்கல் மாவட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சு திறன் பயிற்சி (21.01.2020-23.01.2020) நாமக்கல் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்







பள்ளிக்கல்வி_இரண்டாம் கட்ட போலியோ தடுப்பு மருந்து வழங்கும் முகாம்_தலைமையாசிரியர்கள் பள்ளியை தயார் செய்தல் சார்ந்து இயக்குநர் செயல்முறை நாள்:08.01.2020