செவ்வாய், 26 மே, 2020

இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி நான்காவது காலாண்டில்
5 சதமாக  உயரும்?
+++++++++++++++++



அடிவாங்கும் ஜிடிபி வளர்ச்சி...

இக்ரா தரமதிப்பீட்டு நிறுவனம் எச்சரிக்கை
*********************
இந்தியாவின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருப்பதாக, உள்நாட்டு தரமதிப்பீட்டு நிறுவனமான “இக்ரா” கூறியுள்ளது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம், 2021-ஆம் நிதியாண்டில் வெகுவாக சரியும் என்றும் அது மதிப்பிட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியை1 சதவிகிதம் முதல் மைனஸ் 2 சதவிகிம் வரை “இக்ரா”கணித்திருந்தது.

தற்போது அதனை, 2021-ஆம் நிதியாண்டின் முதல் மற்றும் இரண்டாவது காலாண்டுகளில் முறையே -25 சதவிகிதம் மற்றும் -2.1 சதவிகிதம் என்று கணிசமாக குறைத்துள்ளது

.இதற்கு முன்பு, 2020-21ஆம் நிதியாண்டின் முதல்காலாண்டில் 16 சதவிகிதம் முதல் மைனஸ் 2 சதவிகிதம் வரையில் ஜிடிபி வீழ்ச்சி இருக்கலாம் என்றும், இரண்டாவது காலாண்டில் 2.1 சதவிகிதமாக வளர்ச்சி இருக்கும் என்றும் இக்ரா கணித்திருந்தது.

தற்போது அதனை மைனஸ்2.1 சதவிகிதமாக குறைத்துள்ளது.
இரண்டு காலாண்டுகளாக நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து மந்த நிலையிலேயே இருக்கிறது என்பதைக் காட்டியிருக்கும் “இக்ரா”வின் அறிக்கை, மூன்றாவது காலாண்டில் 2.1 சதவிகிதம் என்ற அளவிற்கு மிதமான வளர்ச்சியை நோக்கிச் செல்லும், நான்காவது காலாண்டில்
அது 5 சதவிகிதமாக உயரும் என்று ஆறுதலும் அளித் து உள்ளது.
மத்திய இடைநிலைகல்விவாரியத்தின் முதல் முயற்சி!

இணைய வழிக்கல்வியில் அறிவுரைகள் வெளியீடு!
தாய்மொழிவழிக்கல்வியின் முக்கியத்துவம் உணர்வீர்!ஐ.நா.மன்றத்தின் யுனெச்சுகோ வேண்டுகோள்!
*********************
மொழி என்பது பரிமாற்றக் கருவி மட்டுமல்ல...
ஓர் இனத்தை அடையாளப்படுத்தி
அதன் பண்பாடு, நாகரிகம் போன்ற பல கூறுகளையும்
அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது.
அதனால், தாய்மொழியின் தேவையை
அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
குழந்தைகள்
அவரவர் தாய்மொழியில்தான்
கட்டாயம் தொடக்கக் கல்வி
 பயில வேண்டும்'' என்கிறது
ஐ.நா-வின் கல்வி அறிவியல் மற்றும் கலாசார
 அமைப்பான யுனெஸ்கோ.  

ஜூனியர் விகடன் /
28 .05.2014 /
அரசு ஊழியர் மற்றும்
ஆசிரியர் நண்பர்களுக்கு...

நமது மாத சம்பளத்தில் ரூ 180 பிடிக்கும் NHIS திட்டத்தில் , பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டுக்கு apply செய்து"NEW HEALTH INSURANCE ID CARD " பெற அறிவுறுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் இன்னும் கார்டு வராதவர்கள்,பழைய கார்டு எண் தெரிந்தால் "www.tnnhis2016.com" என்ற இணையதள முகவரியில் "e-card" ல் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். password : your date of birth...

பழைய கார்டு எண் தெரியாத நண்பர்கள் இதே இணையத்தில் ஐடி கார்டு சர்ச் என்ற பகுதியில் சென்று பெயர், பிறந்த தேதி, பணி ஏற்ற தேதி, ஓய்வு நாள் போன்ற ஏதேனும் 3 தகவல்களை பதிவு செய்து புதிய கார்டு டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு....

நீங்கள் NHIS(New Health Insurance Scheme) சந்தாதாரரா/சார்ந்தவரா...அவசரத்திற்கு மருத்துவ மனையில் சேர்க்க மருத்துவமனை நிர்வாகம் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டியது அந்தந்த மாவட்ட(NHIS) ஒருங்கிணைப்பாளர்களைத் தான்...

1. Ariyalur # The District Collector Office, Md India Health Care Services (Tpa) Pvt., Ltd , Jayankondam Main Road, Ariyalur.621 704. Mr.Dhavabalan 7373703101

2 . Chennai #27, Lakshmi Towers, Dr.Rk Salai, Mylapore, Chennai 6000004 Mr.Jayaraj 7373703102

3 .Coimbatore # 89,Grey Town, Near Nehru Stadium, Gandhipuram, Coimbatore-641018. Mr.Thangarasu 7373703104

4. Cuddalore #No.10 A/1, Siva Complex (Basement), Imperial Road,Cuddalore – 607 002, Mr.Selvakumar 7373703105

5. Dharmapuri #Collectorate Main Building, Dharmapuri-636705. Mr.Mahendiran 7373703106

6 .Dindigul #Ak Towers,74/5, Siluvathur Raod, Kamaraja Mahal, Opp. Dindigul-624005. Mr.Bharathiraja 7373703107

7 .Erode # Selvanayaki Complex, Room No.120, Near Collector Office, Perundurai Road, Teachers Colony Bus Stand, Erode - 638 011 Mr.Manikandan 7373703108

8. Kanchipuram #No.1,Ellapa Nagar, Opp.To Collector Office, Kanchipuram – 631501. Mr.Prabu 7373703109

9 .Kanyakumari # D,No 84, Lweisammal Street, W.C.C. Jn,Nagercoil, Kanyakumari District – 629001 Mr.Suresh Kumar 7373703110

10 .Karur #District Information Centre,District Collector Office,Karur-639005. Mr. Felix 7373703112

11 .Krishnagiri#  3/E11C,2Nd Floor, Opposite. Rayakottai Road, Flyover Near Hotel Sarvanabhavan, Krishnagiri-635001. Mr.Venkatesan 7373703113

12 .Madurai#  46,Thomas Complex Ii Nd Floor, Nethaji Road, Madurai – 625001. Mr.Palani 7373703114

13. Nagapattinam # No.8, Rajarani Complex, Room No.112, 2Nd Floor, Neela South Street, Nagapattinam-611 001 Mr. Veeramani 7373703164

14 .Namakkal # 14,Ii Nd Floor,Main Campus, Collectorate, Namakkal-637003. Mr.Bakkiaraj 7373703116

15 .Nilgiri (ooty) # 222, J, Sri Ram Nilayam Hospital Road,Udhagamandalam - 643 001 (Nilgiri - Ooty) Mr.Lokesh Kumar 7373703117

16 .Perambalur#  Ground Floor, Collector Office Campus, Perambalur (Dt), Pincode-621212 Mr.Balu 7373703118

17 .Pudukkotai # Shop No-33, Shri Bharathi Complex,East 2Nd Street, Pudukkotai - 622 001 Mr. Parimaleeswaran 7373703119

18 .Ramnathapuram# 1/11 Durai Raja Chattiral Steel, Nks Vappa Complex, Velipattinam Post Ramanathapuram 623504 Rr Sethupathi Nagar, Ramanathapuram. Mr.Usman Ali 7373703123

19 .Salem#  No : 23 / 7 , 1st Floor, Maravaneri 1st Cross, Near Sundar Lodge Auto Stand, Salem – 636 007. Mr.Jameer 7373703124

20 .Sivagangai # District Collectorate, 1st floor District Treasury office, Sivagangai, 630561 Mr.Balaji 7373703125

21 .Thanjavur #Survey No.163/4, Second Floor, Door No.10, Natarajapuram North, Municipal Colony Bus Stop, Medical College Main Road, Thanjavur - 613 004 Mr.Kalaimani 7373703126

22 .Theni # L1/786, Gandhiji Road, Zameendar Complex 1St Floor, Near Theni Bus Stand, Theni-625531 Mr.Sarfraz 7373703127

23 .Thiruvallur # 36/75,Tnhb, Old Collector Office Road,Thiruvallur-602001 Mr.Karthick 7373703128

24 .Thiruvannamalai # No: 16/2 R.V.Complex, Gandhi Nagar Byepass, Tiruvannamalai-606 601 Mr.Fayaz Ahmed 7373703135

25. Thiruvarur # 49, Kamalayam, North Bank, Thiruvarur - 610001 Mr. Vivekanandhan 7373703136

26. Tirunelveli#  4F6/11 Akm Complex, Kailasapuram Middle Street, Tirunelv
மே 26, வரலாற்றில் இன்று.

நடிகை மனோரமா பிறந்த தினம் இன்று.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிறந்த மனோரமாவின் இயற்பெயர் கோபி சாந்தா.

மனோரமா 1,500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

பத்மஸ்ரீ, கலைமாமணி, கலைவாணர், எம்.ஜி.ஆர். விருது உள்பட பல விருதுகளைப் பெற்றவர் மனோரமா.

2015ஆம் ஆண்டு அக்டோபர் 10இல் மனோரமா காலமானார்.
மே 26, வரலாற்றில் இன்று.

சமூக ஆர்வலர் அருணா ராய் பிறந்த தினம் இன்று.

 அருணா ராய் 1946 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர் 1967 ல் இந்திய ஆட்சி பணிக்கு(ஐ.ஏ.எஸ்) தேர்வானார். முதலில் திருச்சியிலும், பின்னாளில் ஆற்காட்டிலும் பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணி புரிந்து பின்னர் 1978 ஆம் ஆண்டு தன் ஐ.ஏ.எஸ் பதவியை துறந்து ராஜஸ்தானில் மஸ்தூர் கிஷான் சக்தி சங்கதன் (MKSS) என்ற இயக்கத்தை தன் கணவனுடன் இணைந்து தொடங்கினார். உழவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலனுக்காக இந்த இயக்கத்தின் சார்பாக போராடினார்.

மக்களுக்காக அரசு ஒதுக்கும் நிதி, முழுமையாக மக்களைச் சென்றடையாமல் இடையே அதிகாரப் படிநிலையில் சுரண்டப்படுவது குறித்து அருணாவின் அமைப்பு கேள்வி எழுப்பியது. ராஜஸ்தானில் நடந்த மக்கள் குறை கேட்பு அமர்வில் அரசாங்க ஆவணத்தில் செய்து முடிக்கப்பட்டதாக இருக்கும் மக்கள் நலத் திட்டங்கள் எவையும் ஒரு செங்கல் அளவுக்குக்கூட வளரவில்லை என்பது அம்பலமானது. அப்போதுதான் அதற்கான வரவு செலவுகளை மக்களுக்கு காண்பிக்க வேண்டும் என அருணா போராட்டத்தைத் தொடங்கினார். எங்கு தவறு நடந்திருக்கிறது என்று பார்க்கத் தகவல்கள் அவசியம். தகவல்களைக் கேட்பது மக்களின் அடிப்படை உரிமை என ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் பெரும் பேரணிப் போராட்டத்தை அருணா நடத்தினார்.

உறுதியான போராட்டத்தால் தகவல் அறியும் உரிமைக்கு ராஜஸ்தானில் சட்ட அங்கீகாரம் கிடைத்தது

பின்னாளில் 1997 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டம் தமிழ்நாட்டிலும் செயல்படுத்தப்பட்டது. அதன் பிறகு 2004 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையாக நாடு முழுவதும் தகவல் அறியும் உரிமை சட்டம் செயல்படுத்தப்படும் என்ற வாக்குறுதி அளித்தது.,இதன்பேரில் தேர்தலில் பெற்ற வெற்றியை அடுத்து 2005 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் நடைமுறைக்கு வந்தது. இந்த முதல் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் குழுவின் தலைவராக சுதர்சன் நாச்சியப்பன் என்ற தமிழர் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

குடிமக்கள் கேட்கும் தகவல்களை கொடுப்பவர் பொது தகவல் அலுவலர் ஆவார்.நாம் எழுதும் மனுக்களில் பெறுநர் என்று குறிப்பிடபடுபவரும் இவரே.,ஒருவேளை  தகவல் பெறப்படாத நிலையில் மேல்முறையீடு அலுவலருக்கு மேல்முறையீட்டு மனு எழுதலாம். ஒவ்வொரு 10 பொது தகவல் அலுவலருக்கும் ஒரு மேல்முறையீடு அலுவலர் ஒதுக்கப்பட்டுள்ளார்.

இந்த தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி பெறப்படும் தகவல்கள் என்பது மத்திய அரசு அல்லது மாநில அரசு அலுவலகங்களிலோ அல்லது மத்திய மாநில அரசுகள் எடுத்து நடத்துகிற அலுவலங்களிலோ பதிவேடுள் மற்றும் கணிப்பொறியில் பதியப்பட்ட தகவல்கள் ஆகும்.

இந்த சட்டத்தில் சில சிறப்பம்ச சட்டப்பிரிவுகள் உள்ளன அவை பின்வருமாறு:

 * பிரிவு 6(2) ன் படி தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்துபவரிடம் எதற்காக இந்த தகவல் என்ற கேள்வி கேட்கக்கூடாது.

* பிரிவு 6 (3)ன் படி சரியான தகவலை தவறுதலாக வேறொரு அதிகாரியிடன் கேட்கும்போது அந்த குறிப்பிட்ட அதிகாரி உரிய அதிகாரியிடம் அனுப்ப வேண்டும்.

* பிரிவு 7 ன் படி ஒரு மனுவிற்கு 30 நாட்களுக்குல் பதில் தர வேண்டும் தவறும் பட்சத்தில் பிரிவு 7(6) ன் படி அனைத்து கோப்புகளும் இலவசமாக வழங்க வேண்டும்.

 * பிரிவு 8 ன் படி பெறமுடியாத தகவல்களாக இராணுவ ரகசியங்கள் நடந்து கொண்டிருக்கும் சி.பி.ஐ வழக்குகள் உள்ளன, பிரிவு 8(J)ன் படி சட்டமன்றத்திற்கோ நாடாளுமன்றத்திற்கோ கொடுக்கப்படும் தகவல்களை கொடுக்கலாம்.

இவ்வாறு கிராமப்புறம் தொடங்கி மத்திய அரசு வரை நடைவெறும் ஒவ்வொரு செயல்பாடும், வெளிப்படைத்தன்மையாக இருக்க வேண்டும். என்பதையே இந்த சட்டம் எடுத்துக்காட்டிகிறது. எனவே தகவல் அளிப்பது அரசின் கடமை தகவல் பெறுவது ஒவ்வொரு குடிமகனின் உரிமை ....தகவல் அறியும் உரிமை சட்டம் பயன்படுத்தி தகவல் பெறுவோம் தவறை துடைப்போம்.
மே 26, வரலாற்றில் இன்று.

2006ஆம் ஆண்டு இதே நாளில் தான் பிரெஞ்சுக்காரர்கள் பெயரிட்ட யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரி என்ற பெயர் பல்வேறு தரப்பு கோரிக்கையால் புதுச்சேரி என்று மாற்றப்பட்டது.

மூன்று இந்திய மாநிலங்களில் பரவியிருக்கும் கடற்கரை நகரங்களை கொண்ட யூனியன் பிரதேசம் தான் பாண்டிச்சேரி. ஆந்திரபிரதேசத்தில் யானாம், தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரையில் பாண்டிச்சேரி, காரைக்கால் மற்றும் கேரளாவின் மேற்கு கடற்கரையிலுள்ள மாஹே ஆகியவைதான் இந்த நான்கு ஆட்சிப்பகுதிகள். மாநிலத்தின் பெயர்தான் புதுச்சேரி. அதன் தலைநகரத்தின் பெயர் எப்போதும்போல் பாண்டிச்சேரிதான்.
மே 26, வரலாற்றில் இன்று.

அப்பல்லோ 10 வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய தினம் இன்று.

அப்பல்லோ விண்வெளித் திட்டம், மனிதன் சந்திரனுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து பத்திரமாக திரும்புவதை நோக்கமாகக்கொண்டு 1961-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மனிதனை சந்திரனுக்கு கொண்டு செல்வதில் இருந்த சவால்கள் தீவிரமாக ஆராயப்பட்டு தொடர்ச்சியாக நடந்த ஆராய்ச்சியின் முடிவாக அப்பல்லோ விண்வெளி திட்டம் வரையறை செய்யப்பட்டது. அதன் படி 1969-ஆம் ஆண்டு மே-18ல் அப்பல்லோ – 10 விண்கலம் நிலவில் தரையிரங்கும் லூனார் தொகுதியுடன் கார்னென், ஸ்டாஃபோர்டு, யங் என்ற விண்வெளி வீரர்களை சுமந்து கொண்டு அமெரிக்காவின் கென்னடி விண்வெளி ஏவுதளத்திலிருந்து கிளம்பியது. எட்டு நாட்கள் விண்வெளிப் பயணத்தில் விண்வெளி வீரர்கள் சந்திரனில் பாதுகாப்பாக இறங்கி ஆய்வு செய்வதற்கான ஆய்வுகளை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு இதே நாளில்(மே-26) நாளில் அப்பல்லோ-10 பூமிக்கு திரும்பியது. 2002-ஆம் ஆண்டின் கின்னஸ் சாதனையின்படி மனிதனை சுமந்து கொண்டு சந்திரனிலிருந்து மணிக்கு 39,897 கி.மீ வேகத்தில் தரையிறங்கிய விண்கலம் அப்பல்லோ-10 ஆகும்.
மே 26, வரலாற்றில் இன்று.

பன்மொழிப்புலவர்    கா.அப்பாத்துரை நினைவு தினம் இன்று.

கா. அப்பாத்துரை (ஜூன் 24, 1907 - மே 26, 1989) தமிழ்நாட்டு மொழியியல்  வல்லுநர்களுள் ஒருவர். பன்மொழிப்புலவர் எனப் பெயர் பெற்றவர். அப்பாத்துரையாருக்கு தமிழ், மலையாளம், வடமொழி, இந்தி, ஆங்கிலம்  ஆகிய ஐந்து மொழிகளிலும் சரளமாகப் பேசவும், படிக்கவும், எழுதவும் கூடியத் திறமை இருந்தது. தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் ஒரே ஆண்டில் முதுகலைத் தேர்ச்சி பெற்றார். இந்தி மொழியில் விசாரத் பட்டம் பெற்றார். இவை தவிர இன்னும் பல வேற்று மொழிகளிலும் புலமை பெற்று விளங்கினார். இதனாலேயே அறிஞர் பெருமக்கள் அவருக்குப் "பன்மொழிப்புலவர்" என்ற பட்டத்தைச் சூட்டினார்கள்.

அப்பாத்துரையார் குமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி என்னும் ஊரில் பிறந்தார். அவர் எழுதிய நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி நூல்களுள் குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு மற்றும் தென்னாட்டுப் போர்க்களங்கள்  ஆகியவை தலையாயனவாகக் கருதப்படுகின்றன. தமிழும் தமிழரினமுமே உலக மொழிகளுக்கும் மனித இனத்திற்கும் முன்னோடிகள் என்னும் தனது கோட்பாட்டை அறிவியற்பூர்வமாகத் தனது ஆய்வுகள் மூலம் முன்வைத்தார்.
மே 26, வரலாற்றில் இன்று.

மாவீரன் செண்பகராமன்
நினைவு தினம் இன்று!

1891 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாள் திருவனந்தபுரத்தின் ஒரு பகுதியான புத்தன் சந்தை என்ற ஊரில் பிறந்தவர் செண்பகராமன். தந்தை சின்னசாமிப்பிள்ளை; தாயார் நாகம்மாள்.

 இளம் வயதிலேயே விளையாட்டிலும் சிலம்பம், வாள்வீச்சு போன்ற கலைகளிலும் சிறந்து விளங்கினார். திருவனந்தபுரம் மன்னர் உயர் நிலைப் பள்ளியில் படிப்பைத் தொடங்கினார்.
ஆறாம் படிவம் படித்துக் கொண்டிருந்த போது இந்தியாவில் விடுதலைக் கனல் எரியத்தொடங்கிய காலம். செண்பகராமனையும் விடுதலைத்தீ பற்றிக்கொண்டது. அச்சிறிய வயதிலேயே தம்முடன் பயின்ற மாணவர்களைச் சேர்த்துக் கொண்டு "ஸ்ரீ பாரத மாதா வாலிபர் சங்கம் " ஏற்படுத்தி 'வந்தே மாதரம்' என உரிமை முழக்கம் இட்டார். அதன் பின்னர் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு 'ஜெய் ஹிந்த்' என்ற முழக்கத்தை முதல் முதலில் எழுப்பினார்.

இதைக் கேட்ட நேதாஜி இம்முழக்கத்தை வழிமொழிந்து உலகெங்கும் பரப்பினார். விடுதலைப் போரில் இவர் காட்டிய தீவிரம் காரணமாக ஆங்கில ஆட்சியின் காவல் துறையினர் செண்பகராமனைக் கண்காணிக்கத் தொடங்கினர்.

சர் வால்டர் வில்லியம் என்ற ஜெர்மானியர், தம்மை விலங்கியல் மருத்துவர் எனக் கூறிக்கொண்டு, இந்தியாவில் ஆங்கில ஆட்சியைக் கண்காணிக்கும் ஒற்றராகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார். இவருடன் செண்பக ராமனுக்குத் தொடர்பு ஏற்பட்டது. தன் பெற்றோர் அனுமதியோடு சர் வால்டர் வில்லியம்ஸின் உதவியுடன் யாரும் அறியாமல் செண்பக ராமன் ஐரோப்பா சென்றார். அங்கு இத்தாலி, சுவிட்சர்லாந்து, பெர்லின் போன்ற பல்கலைக் கழகங்களில் படித்துப் பொறியியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றார்.

சுவிட்சர்லாந்தில் மாணவராக இருந்த போது இந்திய நாட்டில் ஆங்கிலேயர் கையாண்ட அடக்குமுறைகள் பற்றி பல சொற்பொழிவுகள் ஆற்றினார். டாக்டர் பட்டம் பெற்ற பின்னர், ஐரோப்பாவில் இருந்தபடியே இந்திய விடுதலைப்போரில் தீவிரமாகப் பங்கேற்றார். பெர்லினில் இந்திய சர்வதேசக் குழுவை நிறுவினார். ஐரோப்பிய நாடுகளில் இந்தியாவைக் குறித்து ஆங்கிலேயர் செய்து வந்த பொய்ப்பிரசாரத்தை இக்குழுவின் உதவியுடன் முறியடித்தார்.

'புரோ இந்தியா' என்ற இதழைத்தொடங்கி இந்தியர்களின் நிலைகளையும், ஆங்கிலேயரின் இந்தியர்களைப் பற்றிய பொய்யான வதந்திகளையும் வெளிப்படுத்தினார்.

 சீனா, தென் ஆப்பிரிகா, மியான்மர் முதலான நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து உலக மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டி இந்தியாவிற்கு ஆதரவைத் திரட்டினார்.

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியினை எதிர்த்து காபூலின் ' ராஜா மஹேந்திர பிரதாப்' அவர்களை அதிபராகவும், 'மவுலானா பர்கத் 'அவர்களை பிரதம மந்திரியாகவும் கொண்டு இந்தியர்கள் தாங்களே நடத்துகின்ற போட்டி அரசை 1915- ல் ஆப்கானிஸ்தானில் நிறுவினர். இவ்வரசின் வெளிவிவகாரத் துறை அமைச்சராக செண்பகராமன் பிள்ளை பணியாற்றினார்.
1914 -ல் உலகப்போர் மூண்ட போது இங்கிலாந்தை எதிர்த்து ஜெர்மனி போரிட்டது.
.
 இங்கிலாந்தின் கடற்படையைக் கலங்க வைக்க ஜெர்மனியர்கள் நீர்மூழ்கிக் கப்பலைப் பயன்படுத்தினர். 'எம்டன்' என்ற பெயர் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் செண்பகராமன் உதவிப் பொறியாளராகப் பணியாற்றினார். வங்காள விரிகுடாவிற்கு வந்த ஹிட்லரின் ஜெர்மனியக் கடற்படையின் நாசகாரிக் கப்பலான “எம்டன்”, ஆங்கில அரசுக்குச் சொந்தமான இரு பெரிய எண்ணெய்க் கிடங்குகளின் மீதும் சென்னைத் துறைமுகத்தின் மீதும், புனித ஜார்ஜ் கோட்டையிலும், திருகோணமலைத் துறைமுகத்தின் மீதும் பீரங்கித் தாக்குதல் நடத்தியது.
முதல் உலகப்போருக்குப் பின் ஜெர்மனியில் நாட்சிக்கட்சி ஹிட்லர் தலைமையில் உருவாகி வளர்ந்தது. ஹிட்லர் ஜெர்மனியின் சர்வாதிகாரி ஆனார். ஒரு சமயம் ஹிட்லருடன் செண்பகராமன் பேசிக் கொண்டிருந்த போது "இந்தியர்கள் அடிமையாக இருக்கவே தகுந்தவர்கள். இந்தியாவுக்கு விடுதலைக் கிடைத்தால், நாட்டைத் திறமையாக ஆளும் தகுதி இந்தியருக்கு இருக்கிறதா என்பது சந்தேகமே " என்று கூறினார். ஹிட்லர் கூறியதைக் கேட்ட செண்பக ராமன் கொதித்தெழுந்தார். ஹிட்லருக்கு எதிராகத் திறமையாக வாதாடி, எழுத்து மூலம் ஹிட்லரை மன்னிப்பு கேட்கச் செய்தார்.
தங்கள் தலைவரை வாதாடி வென்ற செண்பகராமனை, நாஜிக்கள் வெறுத்தனர். எனவே, அவர் கலந்து கொண்ட அரசாங்க விருந்து ஒன்றில் பரிமாறப்பட்ட உணவில் திட்டமிட்டபடி நஞ்சைக் கலந்தனர். அந்த நஞ்சு நாளடைவில் மெல்ல மெல்ல செண்பகராமனை நோயாளியாக்கி, படுத்த படுக்கையில் வீழ்த்தியது. 1934 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் நாளன்று செண்பக ராமனின் உயிர் பிரிந்தது
செண்பகராமன் உயிர் பிரியும் முன் "நான் இறந்த பிறகு என் சாம்பலை இந்தியாவிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, சாம்பலின் ஒரு பகுதியை என் தாயாரின் சாம்பலைக் கரைத்த திருவனந்த புரத்திலுள்ள கரமனை ஆற்றில் கரைக்க வேண்டும். மீதியை நாஞ்சில் நாட்டு
வயலில் தூவ வேண்டும்
என்றார்வி.அவரது விருப்பப்படி அவரது இறப்புக்குப்பின் 32 ஆண்டுகள் அவரது சாம்பலை வைத்திருந்து சுதந்திர இந்தியாவில் 1966 ஆம் ஆண்டு அவரது விருப்பத்தினை
அவரது மனைவி
ஜான்சி நிறைவேற்றினார்.