புதன், 29 ஜூலை, 2020

ஜூலை 29, வரலாற்றில் இன்று.தொல்காப்பியத்தை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரும், பல்கலைக்கழகத்தின் வாயிலாக தமிழில் முனைவர் பட்டம் பெற்ற முதல் ஆய்வறிஞருமான பி.எஸ். சுப்ரமணிய சாஸ்திரியின் பிறந்த தினம் இன்று.

ஜூலை 29,
வரலாற்றில் இன்று.
               
தொல்காப்பியத்தை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரும்,  பல்கலைக்கழகத்தின் வாயிலாக தமிழில்  முனைவர் பட்டம் பெற்ற முதல் ஆய்வறிஞருமான  பி.எஸ். சுப்ரமணிய சாஸ்திரியின் பிறந்த தினம் இன்று.
 

திருச்சி மாவட்டம் கொல்லிமலைப் பகுதி, பாலகிருஷ்ணன்
பட்டியில் 1890ஆம் ஆண்டு ஜூலை 29இல் ஓர் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர் பின்னங்குடி சா.சுப்ரமணிய சாஸ்திரி.

 திருச்சி நேஷ்னல் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்பு எஸ்.பி.ஜி (தற்போதைய பிஷப் ஹீபர் கல்லூரி) கல்லூரியில் கணிதத்தில் பட்டப் படிப்பை முடித்தார். திருவையாறு சீனிவாசராவ் மேல்நிலைப்பள்ளி
யிலும், திருச்சி நேஷனல் உயர்நிலைப் பள்ளியிலும் கணிதப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றினார்,

  மெட்ராஸ் பிரெசிடென்சி கல்லூரியில் ,  சமஸ்கிருதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். நீலகண்ட சாஸ்திரி, எஸ்.குப்புசாமி போன்ற பேராசிரியர்களிடம் மாணவராக இருந்து,  தமிழ், சமஸ்கிருத இலக்கண இலக்கியங்களில் ஆழ்ந்த புலமை பெற்றார். ”தமிழ் இலக்கணக் கோட்பாடுகளுக்கும் சமஸ்கிருத இலக்கியங்களுக்கும் இடையே உள்ள தொடர்பைப்” பற்றிய ஆய்வில் ஈடுபட்டார்.

 சென்னைப் பல்கலைக் கழகத்தில், இதே தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றார். தமிழில் முனைவர் பட்டம் பெற்ற முதல் நபர் என்ற பெருமையையும் பெற்றார்.     தான் கணிதத்தில் பட்டம் பெற்ற திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியிலும் ,  திருவையாறு மன்னர் கல்லூரியிலும் , அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பல்வேறு பொறுப்புகள் வகித்து , ஓய்வு பெற்றார்.

தொல்காப்பியத்தை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரும் இவரே. தொல்காப்பிய நூலுக்கு ஆங்கிலத்திலும், தமிழிலும் உரை எழுதியுள்ளார்.  குப்புசாமி ஆய்வு மையமும், அண்ணாமலை பல்கலைக் கழகமும் இதனை நூல்களாகக் கொண்டு வந்தன. காஞ்சி சங்கராச்சாரியாரின் கோரிக்கையை ஏற்று,  பதஞ்சலி முனிவர் எழுதிய ‘மஹாபாஷ்யம்’ நூலினைத்  தமிழில் மெழிபெயர்த்தார். பாணினியின் நூல்கலையும் தமிழில் கொண்டுவந்தார்.       புறநானூறு பாடல்களை ஆய்வு செய்து முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். விளக்கமுறை  இலக்கணம், வரலாற்று இலக்கணம், ஒப்பீட்டு இலக்கணம் என மூவகை இலக்கணங்களையும் எழுதியுள்ளார். 

தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் மட்டுமின்றி பிரெஞ்சு, தெலுங்கு, கன்னடம் , மலையாளம், ஜெர்மன் போன்ற மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார்.    40க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள பி.எஸ். சுப்ரமணிய சாஸ்திரி
மாணவர்கள் மீது அளவற்ற அன்பு வைத்திருந்தார். பல நேரங்களில், ஏழை மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தானே செலுத்துவார். நான்கு வகை வேதங்களையும் எல்லா மாணவர்களுக்கும் நடத்துவார்.

ஓய்வுக்குப் பின் உடல் நலிவடையும் காலம் வரை, திருவையாறில் ,  தொடர்ந்து  திருக்குறள் வகுப்பு நடத்தினார்.      எளிமையான மனிதராக வாழ்ந்த சுப்ரமணிய சாஸ்திரி , மொழிகளின் ஆராய்ச்சியிலேயே தனது நாள்களைக்  கடத்தினார்.

 இன்றைய சூழலில் , பல இடங்களில்  முனைவர் பட்டம் என்பது விலை கொடுத்து  வாங்கும் ஒரு பொருள் போல ஆகிவிட்டது. முன்னோர் நூல்களையெல்லாம்  முறையாகப் பயின்று, முழுதாக முனைந்து,  முனைவர் பட்டம் பெற்ற முதல் அறிஞர் பி.சா.சு என அன்போடு அழைக்கப்படும் சுப்ரமணிய சாஸ்திரியை நினைவு கொள்ள வேண்டிய சரியான நேரம் இதுவே ஆகும்.

                      ஆம்,   தமிழில்  ஆய்வுகள் இன்னும் விரைவாய் முன் நகர வேண்டும்.     இந்நாளில்,    பிற மொழியின் நூல்களையெல்லாம் தமிழ் மொழியில் பெயர்த்திடவும், நாம் வளர்த்த கலைச் செல்வங்களை    உலக மொழிகளுக்கு வழங்கிடவும் பன்மொழிப் புலமை பெற்ற அறிஞர்களின் தேவையை உணர்ந்திட வேண்டும்.

மொழி- ஒருபோதும்  தேங்கி விடக்கூடாது. வற்றாத நதி போல- பருவத்தில் - முற்றாத இளங்கொடி போல- தழைத்தோடிக்
கொண்டே இருக்கவேண்டும். தேவை உணர்வோம்.!

ஜூலை 29, வரலாற்றில் இன்று. சர்வதேச புலிகள் தினம் இன்று

ஜூலை 29,
வரலாற்றில் இன்று.

 சர்வதேச புலிகள் தினம் இன்று
.

உலகளவில் கடந்த நூறு ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கையில் 97 சதவீதம் அழிந்து விட்டன. அதாவது ஒரு லட்சம் புலிகளில், தற்போது வெறும் 3,000 புலிகள் மட்டுமே வாழ்கின்றன.

மனிதச் செயற்பாடுகளின் காரணமாக எடுத்துக்காட்டாக வேட்டையாடுதல், வாழிடங்களை அழித்தல் போன்றவற்றால் புலிகள் உலகில் அழிந்து வரும் விலங்காக வகைப்படுத்தப்
பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு புலிகளைப் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டு சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது.

மருத்துவக் கல்விக்கான மத்திய தொகுப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கு எந்தத் தடையும் இல்லை என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது!-கீ.வீரமணி.

மருத்துவக் கல்விக்கான மத்திய தொகுப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கு எந்தத் தடையும் இல்லை என்ற  உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது!

தமிழ்நாடு பெரியார் மண்தான் என்பது மீண்டும் நிரூபணம்!

கமிட்டி முடிவு செய்ய மூன்று மாதம் தேவையில்லை -  மத்திய அரசு மனது வைத்தால், ஒரே வாரத்தில் முடிக்கலாமே!

மத்திய அரசு இனியும் தாமதம் செய்யாமல் தீர்ப்பைச் செயல்படுத்த வேண்டும்!
----------------------------------------------------------------------------------

திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு!

மருத்துவக் கல்வியில், மத்தியத் தொகுப்புக்கு மாநிலங்கள் எம்.பி.பி.எஸ். போன்ற பட்டப் படிப்புகளுக்கு 15 சதவிகித இடங்களும், மருத்துவ மேல்பட்டப் படிப்பிற்கு (எம்.டி., எம்.எஸ். போன்றவைகள்) 50 சதவிகித இடங்களும் அளிக்கும் திட்டத்தில், ஏற் கெனவே உள்ள மாநில சட்டப்படியும், ‘நீட்' தேர்வினை நடத்தும் மெடிக்கல் கவுன்சில் தனது ஒழுங்குமுறை ஆணை அடிப்படையிலும், தரவேண்டிய இட ஒதுக் கீட்டை கடந்த பல ஆண்டுகளாக பிற்படுத்தப்பட்ட டோருக்குத் தராமலே ‘நீட்' ஆரம்பித்த கடந்த மூன்று ஆண்டுகளாக - O.B.C. என்ற பிற்படுத்தப்பட்டவர் களுக்கு பூஜ்ய இட ஒதுக்கீடே என்ற நிலையை எதிர்த்து நமது இயக்கமும், ‘விடுதலை'யும் இதனை வெளிச் சத்திற்குக் கொண்டு வந்ததோடு, இது சட்டப்படி பிற் படுத்தப்பட்டவர்களுக்கு இருக்கும் உரிமை - அரசமைப் புச் சட்டப்படியும்கூட என்பதைச் சுட்டிக்காட்டி, சமூகநீதி மண்ணான தமிழ்நாடு இதற்கான சட்டப் போராட்டக் களத்தில் (முதற்கட்டமாக) இறங்கி நீதி கேட்கவேண்டும் என்று அனைத்துக் கட்சி, தலைவர்களும் கேட்டுக் கொண்டதை ஏற்றுக்கொண்டனர். திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு ‘ரிட்' (Writ of Mandamus) வழக்கும் தொடுத்தோம்!

திராவிட முன்னேற்றக் கழகம் உச்சநீதிமன்றத்தில் முன்னோடியாகச் சென்று வழக்குத் தொடர்ந்தது; அதனையொட்டி மற்ற அரசியல் கட்சிகளான ம.தி.மு.க.,  தமிழ்நாடு காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க் சிஸ்ட் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றோடு தமிழ்நாடு அரசும் சமூகநீதி கேட்டு வழக்குத் தொடர்ந்தன.

உச்சநீதிமன்றத்தில் அந்தக் கட்டத்தில் இதனை ஏற்க மறுத்து, உயர்நீதிமன்றத்திற்கே நீங்கள் செல்லுங்கள் என்று கூறி, மனுக்களை ‘டிஸ்மிஸ்' செய்ய ஆயத்தமான நிலையில், அனைவரும் மனுக்களைத் திரும்பப் பெற்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளைத் தாக்கல் செய்து, மூத்த வழக்குரைஞர்களும், அரசின் தலைமை வழக்குரைஞரும் சிறப்பாக வாதாடினர்.

எதிர்வாதங்களை வைத்தனர்!

மத்திய அரசின் சுகாதாரத் துறை, மெடிக்கல் கவுன்சில் சார்பாக, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்ய முடியாது என்றும், 50 விழுக்காட்டிற்கு மேலே செல்வதால் செயல்படுத்த முடியாது என்றும், உச்சநீதி மன்றம்தான் இது சம்பந்தமாக முடிவு செய்யும்  அதிகாரம் படைத்தது என்றும், உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே சலோனிகுமாரி வழக்கு என்ற பிற்படுத்தப்பட்டவரின் வழக்கு விசாரணையில் இருப்பதால், அதன் முடிவுக்குப் பிறகே இதுபற்றி எந்த முடிவையும் எடுக்க முடியும் என்றும் பல எதிர்வாதங்களை வைத்தனர்.

உயர்நீதிமன்றத்தின் விசாரணையைத் தடுக்கும் வகையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால், உயர்நீதிமன்றத்தில் விசாரித்துத் தீர்ப்பளிக்கக் கூடாது என்பதாகவும் மத்திய அரசு துறைகள் சார்பாக, மெடிக் கல் கவுன்சில் சார்பாக வழக்குரைஞர்கள் வாதிட்டனர்.

உடனே தி.மு.க. சார்பில் வாதாடிய மூத்த வழக்கு ரைஞர் திரு.ஆர்.வில்சன், உச்சநீதிமன்றத்தில் ஏற் கெனவே இது சம்பந்தமாக மாணவர் ஒருவர் சார்பாக போட்டிருந்த வழக்கு விசாரணையில், இதைக் கூறிய வுடன், ‘உயர்நீதிமன்றம் அந்த வழக்குகளைத் தொடர்ந்து விசாரிக்க எந்த ஆட்சேபணையும் இல்லை'' என்று தெளிவுபடுத்திய நிலையில், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் ஏ.பி.சாஹி, ஜஸ்டீஸ் செந்தில்குமார், ஜஸ்டீஸ் இராமமூர்த்தி ஆகி யோரைக் கொண்ட முதல் அமர்வு இந்த இட ஒதுக்கீட்டு வழக்கினை விசாரணைக்கு எடுத்து, தொடர்ந்து பல மணிநேர வாதங்களை அனுமதித்துக் கேட்டு, காலம் தாழ்த்தாமல், 27 ஆம் தேதி தீர்ப்பு என்றும் அறிவித்தது.

வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு

நேற்று (27.7.2020) தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வின் தீர்ப்பு வெளிவந்தது. 171 பக்கங்கள் கொண்ட அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில்,

மத்திய அரசின் சுகாதாரத் துறை, இந்திய மெடிக்கல் கவுன்சில் சார்பாக தெரிவித்த எதிர்தரப்பு வாதங்களை இந்நீதிமன்றம் ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தது. ஏற்கெனவே மாநில அரசின்  69 சதவிகித சட்டம் அமுலில் இருப்பதால் ளிஙிசி என்ற பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு என்ற கோரிக்கையைப் புறந்தள்ள முடியாது என்றும்,

உச்சநீதிமன்றம்தான் இட ஒதுக்கீடு சம்பந்தமாக முடிவு செய்ய முடியும் என்ற மத்திய அரசு துறைகளின் வாதங்கள்  ஏற்கத்தக்கன அல்ல என்றும்,

ஏற்கெனவே ‘நீட்' தேர்வில், இட ஒதுக்கீடு - மெடிக்கல் கவுன்சில், உச்சநீதிமன்றத் தீர்ப்புகள்  அபயநாத் வழக்கு போன்றவற்றிலும்,

ராஜேஸ்வரன், ஜெயக்குமார் வழக்குகளிலும், அபய நாத் வழக்குகளிலும் முன்பு அளித்துள்ளதைச் சுட்டிக் காட்டியும், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தர  அரசமைப்புச் சட்டப்படியும் எந்தத் தடை யும் இல்லை என்று தீர்ப்பு கூறினர்- இது வரவேற்கத்தக்க தீர்ப்பாகும்!

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு இன்னொரு முக்கிய கருத்தைத் தெளிவுபடுத்தி, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு உரிமை மறுக்கப்பட முடியாத ஒன்று என்று திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டிருக்கிறது!

இது சம்பந்தமாக ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் பல வந்துள்ளன. பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியி னருக்கு முறையே 15 விழுக்காடு, 7.5 விழுக்காடு, உயர்ஜாதியினரில் ஏழைகளுக்கு (EWS) 10 விழுக்காடு, மாற்றுத் திறனாளிகளுக்கும் இட ஒதுக்கீடு என்று வரும் போது மொத்தக் கூட்டலில், 50 விழுக்காட்டுக்குமேல் இட ஒதுக்கீடு போகக் கூடாது என்பது - இனி எடுபடக் கூடிய வாதமாகாது என்பது தெளிவாகி விட்டது.

காலதாமதம் செய்யாமல்...

இத்தீர்ப்பின்படி, மத்திய அரசு, மூன்று மாதத்திற்குள் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிப்பது சம்பந்தமாக ஒரு கமிட்டி அமைத்து முடிவு செய்ய வேண்டும் என்பதும், இவ்வாண்டு இதன் பலன் கிடைக்காது என்பதும்கூட இத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. சமூகநீதியை நடைமுறைப்படுத்த மத்திய அரசு மனம் வைத்தால், ஒரு வாரத்திற்குள் செய்ய முடியும் என்பதை 103 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் வரலாறே நன்கு உணர்த்தும். எனவே, காலதாமதம் செய்யாமல், அரசமைப்புச் சட்டம் வழங்கிய உரிமைகளைப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அளிக்க முன்வரவேண்டும்!

பாராட்டி வரவேற்கிறோம்!

சென்னை உயர்நீதிமன்றம், அதன் முதல் அமர்வில் வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க, சமூகநீதியின் மைல்கல் போன்ற இந்தத் தீர்ப்பு அந்நீதிபதிகளின் ஆழ்ந்த சட்டப் புலமைக்கும், சமூகநீதியின்பால் உள்ள நியா யங்களின் நேர்மையையும் சட்டப்படி விளக்கியிருக்கிறது. இத்தீர்ப்பைப் பாராட்டி வரவேற்கிறோம்.

இனி, பந்து மத்திய அரசிடம்தான் இருக்கிறது.

காலந்தாழ்த்தாமல் - மீண்டும் பிற்படுத்தப்பட் டோருக்கு, ஒடுக்கப்பட்டோருக்கு உரிய நீதி - சமூகநீதி கிடைக்கச் செய்ய உடனடியாக செயல் வடிவம் கொடுக்கவேண்டும்.

உயர்நீதிமன்றம் கொடுத்த மூன்று மாத அவகாசம் என்பது உச்ச வரம்புதானே தவிர, அதற்குள் வினையாற்ற எந்தத் தடையுமில்லை என்பதையும் புரிந்துகொண்டு, மத்திய அரசு செயல்படுவதே உண்மையான மக் களாட்சிக்கு சரியான அடையாளம் ஆகும்.

மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது!

தமிழ்நாடு பெரியார் மண்தான் என்றும்,  சமூக நீதிக்கான இந்தியாவிற்கே வழிகாட்டும் கலங்கரை வெளிச்சம் தரும் மண்தான் என்பது இதன்மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இதற்காக  நம்மைப் போல வழக்குத் தொடுத்த  எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு அரசு, அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள் அனைவருக்கும் நமது பாராட்டுகள்!

இதற்காக நீதிமன்றத்தில் சிறப்பாக வாதாடிய மூத்த வழக்குரைஞர்கள் உள்பட அனைத்து வழக்குரைஞர் பெருமக்களுக்கும் நமது மகிழ்ச்சி கலந்த பாராட்டும், நன்றியும்!

சமூகநீதிக் கொடி எக்காரணத்தை முன்னிட்டும் தலைதாழ விடமாட்டோம்!

சமூகநீதி வெளிச்சமும், சமூகநீதிக்கான உரிமைக் குரலும் இனி நாடெங்கும் பரவும், கேட்கும் என்பதும் உறுதி! உறுதி!!

- கி. வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
28.7.2020

செவ்வாய், 28 ஜூலை, 2020

*📘✍️அரசாணை எண் 77 நாள்:28.07.2020 -ன் படி இணை இயக்குனர்கள் மாற்றம்*

*📘✍️அரசாணை எண் 77 நாள்:28.07.2020 -ன் படி இணை இயக்குனர்கள் மாற்றம்*

*இணை இயக்குனர்கள் மாற்றம்*
➖➖➖➖➖➖➖➖➖
திரு கோபிதாஸ் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் 

திரு நரேஷ் இணை இயக்குனர் தொழிற்கல்வி 

திருமதி சுகன்யா இணை இயக்குனர் இடைநிலைக்கல்வி 

திருமதி ஸ்ரீதேவி ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்.

*_தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஈழுவா வகுப்பினரை பிற்படுத்தப்பட்ட வகுப்பிலும், தீயா வகுப்பினரை பிற்படுத்தப்பட்ட வகுப்பிலும் சேர்க்க முதலமைச்சர் உத்தரவு - அரசாணையும் வெளியீடு!!!_* 👇

*_தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்  உள்ள ஈழுவா வகுப்பினரை பிற்படுத்தப்பட்ட வகுப்பிலும், தீயா வகுப்பினரை பிற்படுத்தப்பட்ட வகுப்பிலும் சேர்க்க முதலமைச்சர் உத்தரவு - அரசாணையும் வெளியீடு!!!_*








ஊரடங்கு காரணமாக தங்களின் சொந்த மாநிலம் சென்ற வெளிமாநில தொழிலாளர்கள் மீண்டும் தமிழகம் திரும்புவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக தங்களின் சொந்த மாநிலம் சென்ற வெளிமாநில தொழிலாளர்கள் மீண்டும் தமிழகம் திரும்புவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


*📘✍️01.07.2020 முதல் 30.09.2020 வரையிலான காலத்திற்கு GPF மீதான வட்டி விகிதம் 7.1% ஆக நீடிப்பு!!!*

*📘✍️01.07.2020 முதல் 30.09.2020 வரையிலான காலத்திற்கு GPF மீதான வட்டி விகிதம் 7.1% ஆக நீடிப்பு!!!*

ஜூலை 28,வரலாற்றில் இன்று.உலக கல்லீரல் நோய் விழிப்புணர்வு தினம் இன்று.

ஜூலை 28,
வரலாற்றில் இன்று.

 உலக கல்லீரல் நோய் விழிப்புணர்வு தினம் இன்று.

ஹெப்படைடிஸ் சி எனப்படும் கல்லீரல் நோய், எய்ட்ஸ் நோயை போன்ற ஒரு கொடிய நோய். அதுவும் இது ஒரு தொற்று நோயாகும். இந்த நோயின் தாக்கம் அதிகமாகும் போது கல்லீரலில் புற்று நோய் ஏற்படுகிறது. எனவே இந்த நோயிலிருந்து பாதுகாத்து கொள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகும்.

அதன் பொருட்டே ஹெப்படைட்டிஸ் பி என்கிற வைரஸை கண்டுபிடித்த நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் திரு. புளூம்பர்க் ( Blumberg)  அவர்களின் பிறந்த தினமான ஜூலை 28 ஆம் தேதியன்று அவரின் நினைவாக உலக கல்லீரல் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

ஒட்டுமொத்தமான நம் உடலின் உட்பகுதியில் இருக்கும் பெரிய திண்ம உறுப்பு கல்லீரல். ’அதிகம் மது அருந்தினால் கல்லீரல் கெட்டுப் போகும்’ என்பது தான் சாதாரண மக்களுக்கு கல்லீரல் பற்றிய அதிகபட்ச விழிப்புணர்வு. மாரடைப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்று கல்லீரல் நோய்கள் தொடர்பாக நம்மிடையே போதிய விழிப்புணர்வு இல்லை என்பது உண்மைதான்.

இதற்கிடையில் இதயமாற்று, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை போன்று கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை இப்போது தான் பிரபலமாகி வருகிறது. ஆனால் இந்தியாவில் பத்து லட்சம் பேர் பல்வேறு கல்லீரல் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தான் அதிர்ச்சி தகவல்.
மேலும் சொல்வதென்றால் உடலின் வளர்சிதை மாற்றம், புரோட்டீன் உற்பத்தி, ரத்த உறைவு உட்பட பல முக்கிய செயல்களை இந்த கல்லீரல்தான் செய்கிறது.

நம் உடலின் மையத்தில் உள்ள கல்லீரல் முற்றிலும் பாதிக்கப்பட்டால் மற்ற உறுப்புகளும் படிப்படியாக செயலிழக்க ஆரம்பித்து விடும். எனவே, கல்லீரலை கவனமாக காக்க வேண்டும். அது நம் கையில் தான் உள்ளது.

மது அருந்துதல், கொழுப்பு மிக்க துரித உணவு, சுகாதாரமற்ற உணவு சாப்பிடுவது, தூய்மையற்ற தண்ணீர் அருந்துவது, அதிக உடல் எடை, உடல் பருமன், டென்ஷன் அடைவது, சர்க்கரை நோய், ரத்தம் பெறும் போது ஏற்படும் தொற்று போன்ற பல்வேறு காரணங்களால் இத்தகைய கல்லீரல் நோய்கள் உண்டாகின்றன. சில குழந்தைகளுக்கு பிறக்கும் போதே என்சைம் கோளாறுகளால் கல்லீரல் பாதிப்பு ஏற்படுகிறது.

மஞ்சள் காமாலை மற்றும் பலவகை ஹெபடைடிஸ், கல்லீரல் வீக்கம், கல்லீரல் சுருக்கம், கல்லீரல் புற்றுநோய், கல்லீரலில் கட்டிகள் போன்றவை முக்கிய நோய்கள்.

பசி இல்லாமை, உடல் சோர்வு, எடை குறைதல், மயக்கம், கால் வீக்கம், ரத்த வாந்தி, ரத்தம் வெளியேறுதல் போன்றவை, கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகள்.

முக்கியமான விஷ்யம் என்னவென்றால் கல்லீரல் 70 சதவீதம் பாதிக்கும் வரை நிறைய பேருக்கு பெரிய அளவில் அறிகுறிகள் எதுவும் தெரிவது இல்லை. ஆனாலும் மஞ்சள் காமாலை போன்றவை உடனடி சிகிச்சையின் மூலம் குணமாகும். அது போல மற்ற கல்லீரல் நோய்களுக்கும் தொடர் சிகிச்சைகள் தடுப்பூசிகள் உள்ளன. ஆனால் முற்றிலும் பாதிக்கப்பட்டு விட்டால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தான் ஒரே வழி.

மேலும் சிறுநீரகம் போன்று, ’டயலிசீஸ்’ செய்ய இயலாது. கல்லீரல் மட்டும் பாதிக்கப்பட்டு இருந்தால் உடனடியாக மாற்று அறுவை சிகிச்சை செய்யலாம். ஆனால் மற்ற உறுப்புகளும் பாதிக்கப்பட்ட பின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை கூட செய்வது இயலாத காரியம்.

உடல் உறுப்பு தானம் செய்வோரிடம் இருந்து இறந்த குறிப்பிட்ட மணி நேரத்திற்குள் கல்லீரல் பெறலாம்; அல்லது நெருங்கிய உறவினரிடமிருந்து கல்லீரலின் 70 சதவீத பகுதி வரை வெட்டி எடுத்து பாதிக்கப்பட்டவருக்கு பொருத்தலாம். இதனால் இருதரப்பிற்கும் பாதிப்பு இல்லை. கல்லீரல் அளித்தவர் அறுவை சிகிச்சைக்கு பின் ஏழு நாட்கள் மருத்துவமனையில் தங்கினால் போதும். புண் ஏற்படும், வலி ஏற்படும் என்ற பீதி ஏதும் வேண்டாம். பின்னர் வழக்கமான வாழ்க்கை வாழலாம். அது மட்டுமின்றி வெட்டப்பட்ட கல்லீரல் இரண்டு மாதத்திற்குள் வளரும்.

எனவே ஒருவர் முற்றிலும் கல்லீரல் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதை விட நெருங்கிய உறவினர் கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்தால் அந்த உயிரை காப்பாற்றலாம். ஒருவர் தினமும் மது அருந்தினால் உறுதியாக கல்லீரலை பாதிக்கும். சிலர் எப்போதாவது மது அருந்துபவர்களாக இருக்கலாம். ஆனால் அவருக்கு, கொழுப்பு படிந்து கல்லீரல் பாதிப்பு ஏற்கனவே இருந்தால் அது ஆபத்து. எனவே நம் வாழ்க்கை முறை, உணவு முறைகளை மாற்றினால் கல்லீரலை காக்கலாம்.

ஜூலை 28,வரலாற்றில் இன்று.முதல் உலகப் போர் ஆரம்பமான தினம் இன்று (1914).

ஜூலை 28,
வரலாற்றில் இன்று.

முதல் உலகப் போர் ஆரம்பமான தினம் இன்று (1914).

ஐரோப்பா  ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் (சீனா மற்றும் பசிபிக் தீவுகளின் சில இடங்களில்)
முதல் உலகப்போர் என்பது உலகம் தழுவிய அளவில் இடம்பெற்ற ஒரு போர்.

எனினும் இது பெரும்பாலும் ஐரோப்பாவிலேயே நடைபெற்றது.

இப் போரில் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும்,

மைய நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் எதிர்ப் பக்கங்களில் நின்று போரிட்டன.

இதன் அளவும், செறிவும் முன்பு எப்போதும்  இல்லாத அளவு பெரிதாக இருந்தது.

பெருமளவினர் சண்டையில் ஈடுபட்டிருந்ததோடு பெரும் தொகையில் இழப்புகளும் ஏற்பட்டன.

60 மில்லியன் ஐரோப்பியர்களை உள்ளடக்கிய சுமார் 70 மில்லியன் போர்வீரர்கள் சண்டையில் ஈடுபட்டிருந்தனர்.

புதிய தொழில்நுட்பங்களின் வழிவந்த இயந்திரத் துப்பாக்கிகள், உயர்தரமான கனரகப் பீரங்கிகள், மேம்பட்ட போக்குவரத்து, நச்சு வாயு, வான்வழிப் போர்முறை, நீர்மூழ்கிகள் என்பன போரின் தாக்கத்தைப் பெரிதும் அதிகப்படுத்தின.

போரில் 40 மில்லியன் பேருக்குக் காயங்களும் உயிரிழப்புக்களும் ஏற்பட்டன.

ஜூலை 28,வரலாற்றில் இன்று. உலக இயற்கை வள பாதுகாப்பு தினம் (World Nature Conservation Day) இன்று.

ஜூலை 28,
வரலாற்றில் இன்று.


உலக இயற்கை வள பாதுகாப்பு தினம் (World Nature Conservation Day) இன்று.

உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், அதனால் ஏற்படும் சவால்களை உலகம் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆகவே இயற்கையை நாம் பாதுகாத்தால், இயற்கை நம்மைப் பாதுகாக்கும் என்கிற நோக்கில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.