ஞாயிறு, 11 அக்டோபர், 2020

*🌟உயர்கல்வி கல்லூரிக்கல்வி-2020-2021 கல்வியாண்டு முதல் 7 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்குவதற்கு அனுமதியளித்தல் மற்றும் ஆசிரியரில்லா பணியிடங்கள் ஒப்பளிப்பு செய்தல்-தொடரும் மற்றும் தொடரா செலவினங்களுக்கு நிதி ஒப்பளிப்பு செய்தல் தொடர்பான ஆணை*

*🌟உயர்கல்வி கல்லூரிக்கல்வி-2020-2021 கல்வியாண்டு முதல்  7 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்குவதற்கு  அனுமதியளித்தல் மற்றும் ஆசிரியரில்லா பணியிடங்கள் ஒப்பளிப்பு  செய்தல்-தொடரும் மற்றும் தொடரா செலவினங்களுக்கு நிதி ஒப்பளிப்பு செய்தல்  தொடர்பான ஆணை*

*🌟கல்லூரிக்கல்வி-அரசு கலை மற்றும் அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் சுழற்சி 1 இல் காலியாகவுள்ள உதவிப்பேராசிரியர் பணியிடங்கள்-2020-2021 ஆம் கல்வியாண்டிற்கு தொகுப்பூதியத்தில் 2423 கௌரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்திட அனுமதியளித்தல் மற்றும் தொகுப்பூதியம் வழங்குதல் தொடர்பான ஆணை*

*🌟கல்லூரிக்கல்வி-அரசு கலை மற்றும் அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் சுழற்சி 1 இல் காலியாகவுள்ள உதவிப்பேராசிரியர் பணியிடங்கள்-2020-2021 ஆம் கல்வியாண்டிற்கு தொகுப்பூதியத்தில் 2423 கௌரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்திட அனுமதியளித்தல் மற்றும் தொகுப்பூதியம் வழங்குதல் தொடர்பான ஆணை*

அக்டோபர் 11, வரலாற்றில் இன்று.புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர், மறுமலர்ச்சி கவிஞருமான மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்த தினம் இன்று (1826).

அக்டோபர் 11, வரலாற்றில் இன்று.

புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர், மறுமலர்ச்சி கவிஞருமான மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்த தினம் இன்று (1826).

மாயூரம் மாவட்ட முன்சீஃபாக 13 ஆண்டுகள் பணி புரிந்ததால், மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்றே அழைக்கப்பட்டார். வாழ்க்கை நெறிகள், பொது நீதிகள், பெண் கல்வி, ஒற்றுமை உணர்வு, புதிய சிந்தனைகள், முற்போக்கு கருத்துகள் ஆகியவை இவரது கவிதைகளின் கருப்பொருளாக அமைந்தன.

தமிழகத்தில் பஞ்சம் ஏற்பட்டபோது, தன் சொத்துகள் அனைத்தையும் தானமாக வழங்கினார். குழந்தை திருமணம், உடன்கட்டை ஏறும் வழக்கத்தை கடுமையாக எதிர்த்தார்.

தமிழின் முதல் புதினத்தைப் படைத்தவரும், மறுமலர்ச்சி கவிஞரும், சமூக சீர்திருத்தவாதியுமான மாயூரம் வேதநாயகம் பிள்ளை 63ஆவது வயதில் (1889) காலமானார்.

அக்டோபர் 11,வரலாற்றில் இன்று.சர்வதேச பெண் குழந்தைகள் தினம் இன்று.

அக்டோபர் 11,
வரலாற்றில் இன்று.

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் இன்று.

கடந்த 2012ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மூலம், அக்டோபர் மாதம் 11ஆம் நாள் சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக உருவாக்கப்பட்டது. 

பெண் குழந்தைகள் இன்னமும் உலகம் முழுவதும் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகளை முன்னிலைப்படுத்த உருவாக்கப்பட்டது. அதுமுதல் ஒவ்வொரு ஆண்டும், உலகம் முழுவதும் உள்ள பெண் குழந்தைகளால் இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 

குழந்தை முதல் கிழவி வரை கற்பழிக்கப்பட்டு வரும் அவலத்தை நாம் தினமும் காண்கிறோம். கல்வி, வேலை, திருமணம் என அனைத்திலும் பெண்கள் சந்திக்கும் கொடுமைகள் அளவில்லாதவை. வளர்ந்த நாடுகள் முதல் வளராத நாடுகள் வரை அனைத்திற்கும் இது பொருந்தும். எனவே, பெண் குழந்தைகளை கொண்டாடுவதற்காகவே இந்த தினம் உள்ளது.


இதை நாமும் கொண்டாடும் வகையில், தலைசிறந்த பெண்ணியவாதிகளின் கூற்றுகளை இங்கே பார்க்கலாம்,

“பெண்கள் தங்களைப் பார்த்து சிரிக்கிறார்கள் என்று ஆண்கள் பயப்படுகிறார்கள். ஆண்கள் தங்களை கொல்கிறார்கள் என்று பெண்கள் பயப்படுகிறார்கள்.” – Margaret Atwood

“பெண்கள் சக்திபடைத்தவர்கள், பயங்கரமானவர்கள்.” – Audre Lorde

“பெரும்பாலான வரலாற்றில், அடையாளம் இல்லாத பெண் ஒருவள் இருக்கிறாள்.” – Virginia Woolf

“பெண்ணியம் என்பது பெண்களை வலிமையாக்குவதற்கு இல்லை. பெண்கள் ஏற்கனவே வலிமையானவர்கள் தான். உலகம் அந்த வலிமையை உணர்ந்துகொள்ளும் விதத்தை இது மாற்றியது.” – G.D. Anderson

“பெண்ணியத்தால், எந்தவொரு பெண்ணுக்கும் வேலை கிடைத்துவிடப்போவதில்லை. எல்லா இடங்களிலும் வாழும் பெண்களின் வாழ்க்கையை மேலும் அழகாக்கவே.” – Gloria Steinem

“மறைந்து போவதிலும், அழிந்து போவதிலும் நான் எப்போதும் ஆர்வம் காட்டுவதில்லை.” – Laverne Cox

“பெரியவர்களுக்கு தான், சிறு பெண் பிள்ளைகள் அழகாக தோன்றுகிறார்கள். சக பிள்ளைகளிடையே அவர்கள் அழகானவர்களாக பார்க்கப்படுவதில்லை. அவர்கள் வாழ்க்கை அளவிலானவை.” – Margaret Atwood

“நான் எதையாவது சாதிக்க முடியும் என்ற உண்மையை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதால் நானே என்னை கட்டுப்படுத்த போவதில்லை.” – Dolly Parton

“வழிநடத்தும் பெண்கள், படிக்கவேண்டும்.” – Laura Bates

“தங்களை தாங்களே வெறுக்காத சிலர், பெண்ணைச் சுற்றி இருக்கும் போது, உண்மையில் அசௌகரியமாக உணருகிறார்கள். இதனால், நீங்கள் சற்று தைரியமானவராக இருக்க வேண்டும்.” – Mindy Kaling

“தைரியம், தியாகம், தீர்மானம், அர்ப்பணிப்பு, கடினத்தன்மை, இதயம், திறமை, தைரியம். சிறிய பெண் பிள்ளைகள் இவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளனர்.” – Bethany Hamilton

“ஒரு ஆணால் எல்லாவற்றையும் அழிக்க முடிகிறது எனில், ஏன் ஒரு பெண்ணால் அதை மாற்ற முடியாது?” – Malala Yousafzai

சனி, 10 அக்டோபர், 2020

அரசுப் பள்ளிகளில் புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்க தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்..

அரசுப் பள்ளிகளில் புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்க தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்..

💥தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் மாற்றம். பள்ளிக்கல்வி துறை ஆணையர் திருமதி. சிஜி தாமஸ் வைத்தியநாதன் தொழில் முதலீட்டு கழகத்திற்கு மாற்றம். புதிய பள்ளிக்கல்வி ஆணையராக திரு.வெங்கடேஷ். இ.ஆ.ப.நியமனம்.


தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் மாற்றம்.  பள்ளிக்கல்வி துறை ஆணையர் திருமதி.  சிஜி தாமஸ் வைத்தியநாதன் தொழில் முதலீட்டு கழகத்திற்கு மாற்றம். புதிய  பள்ளிக்கல்வி  ஆணையராக திரு.வெங்கடேஷ். இ.ஆ.ப.நியமனம்.

அக்டோபர் 10, வரலாற்றில் இன்று.உலக மனநல தினம் இன்று.

அக்டோபர் 10, வரலாற்றில் இன்று.

உலக மனநல தினம் இன்று.

உலக மனநல மையம்  சார்பில் 1992 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10 ஆம் தேதி உலக மனநல தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

இந்தியாவில் 15 சதவீதம் பேர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என இந்திய மனநல மருத்துவக்கழகம் தெரிவிக்கிறது. மனிதனின் மன ஆரோக்கியம் மற்றும் உலக நல்லெண்ணத்திற்காகவே உலக மனநல தினம் கொண்டாடப்படுகிறது.

அக்டோபர் 10,வரலாற்றில் இன்று.தேசிய தபால் தினம் இன்று.

அக்டோபர் 10,
வரலாற்றில் இன்று.

தேசிய தபால் தினம் இன்று.

இந்தியாவில் அக்டோபர் 10 முதல் 15ஆம் தேதி வரை தேசிய தபால் வாரமாக கொண்டாடப்படுகிறது. இதன் நோக்கம் இந்திய அஞ்சல் துறையின் நோக்கத்தையும், குறிக்கோளையும் மக்களிடையே பிரபலப்படுத்தி, பொதுமக்களுக்கான தபால் சேவையினை மேம்படுத்தி, பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தி கொள்ள வழிவகை செய்வதே ஆகும்.

வெள்ளி, 9 அக்டோபர், 2020

FLASH NEWS- ஆசிரியர் நியமனம் யார் செய்வது... ஆசிரியர் நியமனத்திற்க்கான வயது வரம்பு ,கல்வி தகுதி ,ஆசிரியர் பதவி உயர்வு, ஆசிரியர் இட மாறுதல், Deployment குறித்து- அரசிதழ் வெளியீடு*

*📘FLASH NEWS- ஆசிரியர் நியமனம் யார் செய்வது... ஆசிரியர் நியமனத்திற்க்கான வயது வரம்பு ,கல்வி தகுதி ,ஆசிரியர் பதவி உயர்வு, ஆசிரியர் இட மாறுதல், Deployment குறித்து- அரசிதழ் வெளியீடு*

இதுவரை தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றிவந்த.(Tamilnadu elementary education subordinate service) வட்டார கல்வி அலுவலர்கள் ,நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், நடுநிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், தொடக்கக்கல்வி துறையில் பணியாற்றிய உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் கைத்தொழில் ஆசிரியர்கள் அனைவரும்

 இனி வரும் காலங்களில் பள்ளி கல்வித்துறை பணியாளர்கள் என (Tamilnadu school education subordinate services)  மாற்றம் செய்து அரசாணை பிறப்பிப்பு .

அந்தந்த பதவிகளுக்கு உண்டான கல்வித்தகுதி மற்றும்  தேர்ந்தெடுக்கும் முறை குறித்தான  வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு மேலும்  ஆசிரியர் பணிக்கு நேரடி நியமனத்திற்கு 40 வயதினை வயது வரம்பாக நிர்ணயித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .

தொடக்க கல்வித்துறையின் கீழ் எந்த ஒரு பதவியும் வரவில்லை

அரசிதழைப் பார்க்க இங்கே கிளிக் செய்க.
click here.

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை விண்ணப்பித்து.. உதவித்தொகை பெற்றுள்ளோர் பட்டியல்.(2019-2020)

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை விண்ணப்பித்து.. உதவித்தொகை பெற்றுள்ளோர் பட்டியல்.
(2019-2020)
பட்டியலைப் பார்க்க கீழே கிளிக் செய்யவும்.