புதன், 14 அக்டோபர், 2020

அக்டோபர் 14வரலாற்றில் இன்று.உலக கண்பார்வை தினம் இன்று.

அக்டோபர் 14
வரலாற்றில் இன்று.

உலக கண்பார்வை தினம் இன்று.

ஒரு சராசரி மனிதன் ஒரு நிமிடத்திற்கு 12 முறை கண்களை இமைக்கிறார், ஒரு நாளைக்கு சராசரியாக 10,000 முறை கண்களை இமைக்கிறார்.
நமது கண் இமைமுடிகளின் சராசரி ஆயுள் காலம் 5 மாதங்கள் மட்டுமே.
நமது கண்கள் தோராயமாக 28 கிராம் எடை உள்ளது.

இறந்த பிறகு மண்ணில் புதைக்காமல், நெருப்பில் எரிக்காமல் கண்தானம் செய்வோம்.

நம் கண்களை பார்வை மங்காமல் நீண்ட காலம் எப்படி பாதுகாக்கலாம்?

நம் கண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். எனவே அதற்கு எந்த மாதிரியான பராமரிப்பு வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர் பரிந்துரைக்கிறார். இது உங்களுக்கு உதவியாக இருக்கும்.
    

இப்பொழுது நாம் வேலை செய்யும் அனைத்து விஷயங்களும் கணினி மயமாக்கப்பட்டு விட்டது. ஓயாமல் டிஜிட்டல் திரை முன்னாடியே உட்கார்ந்து இருப்பது, வயதாகுவது போன்ற பிரச்சினைகளால் நாம் கண் பார்வை குறைப்பாட்டை அனுபவிக்கிறோம். இதனால் குழந்தைகள் சிறு வயதிலேயே கண்ணாடி போடும் சூழலை அனுபவித்து வருகிறார்கள். இதுபோன்ற கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தவிர்ப்பது எப்படி, நீண்ட நாள் கண் பார்வையை எப்படி ஆரோக்கியமாக வைத்திருப்பது என்பது பற்றி இங்கு விரிவாகப் பார்க்கலாம்.
​கண் நோய்கள்

கண்கள் சிவந்து போதல், கண்களுக்கு போதிய ஊட்டச்சத்து இல்லாமல் பார்வை குறைபாடு, கண்புரை, மாகுலார் சிதைவு, கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை பிரச்சினைகள் என நிறைய கண் சம்பந்தமான பிரச்சனைகள் வருகின்றன. எனவே இவற்றையெல்லாம் களைந்து நம் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க நாம் என்ன செய்ய வேண்டும். உங்களுக்காக கண் ஆரோக்கிய பராமரிப்பு பற்றி படிப்படியாக இங்கே சொல்லப்பட்டு உள்ளது. இவை எல்லோரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.

​நன்றாக சாப்பிடுங்கள்

உங்க கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உங்க கண்ணிலிருந்து தொடங்குவது மிகவும் அவசியம். கண் ஆரோக்கியத்திற்கு ஒமேகா 3 கொழுப்பு அமிலம், லுடீன், துத்தநாகம் மற்றும் வைட்டமின்கள் சி மற்றும் இ போன்ற ஊட்டச்சத்துக்கள் மிகவும் அவசியம். இந்த சத்துக்கள் வயது தொடர்பான பார்வை சிக்கல்கள், மாகுலார் சிதைவு மற்றும் கண்புரை போன்றவற்றில் இருந்து காக்கிறது.

கீரை, காலே, காலார்ட்ஸ் போன்ற பச்சை இலை காய்கறிகள், சால்மன், டுனா மற்றும் பிற மீன் வகைகள், முட்டை, நட்ஸ் வகைகள் , பீன்ஸ் மற்றும் புரத மூலங்கள், ஆரஞ்சு மற்றும் பிற சிட்ரஸ் பழங்கள், சிப்பிகள் மற்றும் பன்றி இறைச்சி போன்றவற்றை சாப்பிடுங்கள்.

சரிவிகித உணவு உங்க எடையை நிர்வகிக்க உதவும். கண் ஆரோக்கியம் மட்டுமல்லாது உடம் பருமன், டைப் 2 டயாபெட்டீஸ் போன்றவை வராமல் தடுக்கிறது. ஏனெனில் நீரிழிவு நோயால் ஏற்படும் நீரிழிவு கண் நோய் சிதைவு போன்ற பிரச்சனையை தடுக்க இந்த வகை உணவுகள் உதவுகின்றன.

​புகைப்பிடித்தலை தவிருங்கள்

புகைப்பிடித்தலால் கண்களில் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. கண்புரை, பார்வை நரம்புக்கு சேதம் மற்றும் மாகுலர் சிதைவு ஆகியவற்றைப் பெற அதிக வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் புகைப்பிடித்தலில் இருந்து வெளியேறுவது உங்க கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி செய்யும்.

​சன் கிளாஸ்

வெளியே செல்லும் போது சன் கிளாஸ் அணிந்து கொள்ளுங்கள்

சன் கிளாஸ் உங்க கண்களை புற ஊதாக் கதிர்களின் தாக்கத்தில் இருந்து காக்கிறது. இது உங்க கண்களை பாதுகாக்க உதவுகிறது. அதிகப்படியான புற ஊதா வெளிப்பாடு கண்புரை மற்றும் மாகுலர் சிதைவுக்கான வாய்ப்புகளை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

UVA மற்றும் UVB கதிர்களில் 99% முதல் 100% வரை தடுக்கும். மடக்கு லென்ஸ்கள் உங்கள் கண்களை பக்கத்திலிருந்து பாதுகாக்க உதவுகின்றன. வாகனம் ஓட்டும் போது பயன்படுத்தும் லென்ஸ்கள் உங்க கண்களின் கூசும் தன்மையை குறைக்கின்றன. நீங்கள் காண்டாக்ட் லென்ஸ்கள் அணிந்தால், சிலர் புற ஊதா பாதுகாப்பை பெற முடியும். எனவே உங்க கண்களை பாதுகாக்க கூடுதல் லேயருடன் சன் கிளாஸ்களை அணிவது நல்லது என்கிறார்கள் கண் மருத்துவர்கள்.

​பாதுகாப்பு கண்ணாடியை பயன்படுத்துங்கள்

நீங்கள் நச்சு கலந்த தொழிற்சாலையில் வேலை பார்த்தாலோ அல்லது வான்வழி பொருட்களை பயன்படுத்தும் வேலையில் வேலை பார்த்தாலோ பாதுகாப்பு கண்ணாடியை அணிய மறக்காதீர்கள். ஐஸ் ஹாக்கி, ராக்கெட்பால், லாக்ரோஸ் போன்ற விளையாட்டுகளும் உங்க கண் காயத்திற்கு வழிவகுக்கும். பாதுகாப்பு மாஸ்க் கொண்ட ஹெல்மெட் அல்லது பாலிகார்பனேட் லென்ஸ்கள் கொண்ட விளையாட்டு கண்ணாடிகள் உங்கள் கண்களைப் பாதுகாக்கும். எனவே விளையாடும் போது உங்க கண்களை பாதுகாக்க இதை அணிந்து கொள்ளுங்கள்.

​கணினித்திரை

கொஞ்ச நேரம் கணினித் திரையில் இருந்து விலகி இருங்கள்

கணினி அல்லது மொபைல் திரையில் அதிக நேரம் பார்ப்பது உங்களுக்கு கீழ்க்கண்ட பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

கண் சிரமம் ஏற்படுதல்

மங்கலான பார்வை

தூரத்தில் கவனம் செலுத்துவதில் சிக்கல்

வறண்ட கண்கள்

தலைவலி

கழுத்து, முதுகு, தோள்பட்டை வலி போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கண் திரையில் இருந்து விலகி உங்க கண்ணுக்கு பயிற்சி கொடுப்பது நல்லது

​கண் பாதுகாப்பு அம்சங்கள்

உங்க கண்ணாடிகளை தேர்வு செய்யும் போது கணினித்திரையை பார்ப்பதற்கான பாதுகாப்பு அம்சங்களை கொண்டு தேர்வு செய்யுங்கள்.

கண்ணாடி அணிந்தும் வேலை பார்க்கும் போது உங்களுக்கு கண் அயர்வு ஏற்பட்டால் உங்க மருத்துவரிடம் அது குறித்து பேசுங்கள்.

உங்க கண்களை மானிட்டரின் மேலே இருக்குமாறு வையுங்கள். இது உங்களுக்கு கணினி திரையை தெளிவாக பார்க்க உதவி செய்யும்.

ஜன்னல்கள் மற்றும் விளக்குகளிலிருந்து வரும் வெளிச்சம் உங்க கண்களை கூசுவதைத் தவிர்க்க முயற்சிக்கவும்.

ஒரு வசதியான ஆதரவான நாற்காலியை தேர்வு செய்யுங்கள். உங்க கால்களை தரையில் இருக்கும்படி வையுங்கள்.

உங்க கண்கள் வறண்டு போய் இருந்தால் சிமிட்டுங்கள். செயற்கை கண்ணீரை பயன்படுத்த முயற்சிக்காதீர்கள்.

ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் கண்களை ரிலாக்ஸ் செய்யுங்கள். 20 விநாடிகளுக்கு தொலை தூர பொருட்களை பாருங்கள். ஒவ்வொரு 2 மணி நேரமாவது எழுந்து 15 நிமிடங்கள் ரிலாக்ஸ் செய்யுங்கள்.

​கண் மருத்துவரை தொடர்ச்சியாக போய் சந்தியுங்கள்

உங்க கண் மருத்துவரை தவறாமல் பார்வையிடுவது மிகவும் அவசியம். இது சிறு குழந்தைகள் கூட கண் பார்வையை பாதுகாக்க உதவுகிறது. இதன் மூலம் கண் சம்பந்தமான பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே நாம் காண முடியும். கண் பரிசோதனைகளில் கிளைக்கோமா போன்ற அறிகுறிகளை காண முடியும். ஆரம்பத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது உங்க கண் பார்வை இழப்பை தடுக்க முடியும். கண் சுகாதார தேவைகளை பொறுத்து நீங்கள் இரண்டு வகையான மருத்துவர்களை காண வேண்டும்.

​கண் மருத்துவர்கள்

இவர்கள் கண் பராமரிப்பில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள். கண் பராமரிப்பு, கண் நோய்க்கு சிகிச்சை அளிப்பது மற்றும் கண் அறுவை சிகிச்சை அளிப்பது போன்றவற்றை அவர்கள் செய்வார்கள். உங்க கண்களை பரிசோதனை செய்து சிகச்சை அளிக்க முயற்சி செய்வார்.

ஒரு விரிவான கண் பரிசோதனையில் பின்வருவன அடங்கும்

உங்க குடும்ப வரலாறு, உங்க உடல் நிலை குறித்து மருத்துவர் விசாரிப்பார்.

ஒரு ஆஸ்டிஜிமாடிசம் (பார்வையை மழுங்கடிக்கும் வளைந்த கார்னியா), அல்லது பிரஸ்பியோபியா (வயது தொடர்பான பார்வை மாற்றங்கள்) போன்றவை குறித்து கேட்கப்படும்.

உங்க கண்கள் எப்படி நன்றாக வேலை செய்கிறது என்பது குறித்து பரிசோதனை செய்யப்படும். கண் பார்வையில் ஏற்படுத்தும் அழுத்தம், பார்வை நரம்பு சோதனைகள் மூலம் கிளைக்கோமாவை சோதிக்க முடியும்.

மைக்ரோஸ்கோப் மூலம் உங்க கண்களின் வெளிப்புற மற்றும் உட்புற சோதனைகளை விரிவாக்கம் செய்து பார்க்க முடியும். வேண்டுமானால் பிற சோதனைகளையும் நீங்கள் செய்து பார்க்கலாம்.

அக்டோபர் 14, வரலாற்றில் இன்று.உலகத்தர நிர்ணய தினம் இன்று.

அக்டோபர் 14, வரலாற்றில் இன்று.

உலகத்தர நிர்ணய தினம் இன்று.

உற்பத்தி செய்யும் பொருட்கள் சர்வதேச அளவில் தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக 1946ஆம் ஆண்டு, அக்டோபர் 14 இல் சர்வதேச தர நிர்ணய அமைப்பு (ISO) உருவாக்கப்பட்டது.

 உலகத் தர நிர்ணய தினம் 1970ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது.

 நுகர்வோர்க்கு தரமான பொருட்களை வழங்க வேண்டும். தரமான பொருட்களே உலகைக் காக்கும் என தர நிர்ணய அமைப்பு கூறுகிறது.

திங்கள், 12 அக்டோபர், 2020

பொதுக்கல்வியில் கேரளம் மற்றுமொரு சாதனை.... முதல் ‘முழு டிஜிட்டல் மாநிலம்’ இன்று அறிவிப்புதிருவனந்தபுரம்:உலக பொதுக் கல்வி வரலாற்றில் இடம்பிடித்துள்ள கேரளம் மீண்டும் முதலிடத்தில்உள்ளது.

பொதுக்கல்வியில் 

கேரளம் மற்றுமொரு சாதனை.... 

முதல் ‘முழு டிஜிட்டல் மாநிலம்’ 

இன்று அறிவிப்பு

திருவனந்தபுரம்:
உலக பொதுக் கல்வி வரலாற்றில் இடம்பிடித்துள்ள கேரளம் மீண்டும் முதலிடத்தில்உள்ளது. 

ஒன்று முதல் 12 வகுப்புகளுக்கு முழுபள்ளியையும் டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் கேரளா நாட்டின் முதல் முழுமையான டிஜிட்டல் பொதுக் கல்வி மாநிலமாக மாறியுள்ளது. 

உயர் தொழில்நுட்ப வகுப்பறை திட்டம், உயர் தொழில்நுட்ப ஆய்வக திட்டம்தொடக்கப்பள்ளிகளில் நிறைவு செய்யப்படுவதை திங்கள்கிழமை காலை 11 மணிக்கு முதல்வர் பினராயி விஜயன் அறிவிக்க உள்ளார்.

இதன் மூலம் மாநிலத்தில் உள்ள பொதுப்பள்ளிகள் முழுமையாக டிஜிட்டலுக்கு மாறும்என்று முதல்வர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். 

ஹைடெக் வகுப்பறை திட்டத்தின் கீழ், 4752 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் 45,000 வகுப்பறைகளை 8 முதல் 12 வரை ஹைடெக் ஆக மாற்றியுள்ளன. 

இதற்காக, ப்ரொஜெக்டர்கள், மடிக்கணினிகள், ஒலிபெருக்கிகள், தொலைக்காட்சிகள், டிஎஸ்எல்ஆர் கேமராக்கள், முழு எச்டி வெப்கேம்கள், அனைத்து வகுப்புகளிலும் அதிவேக பிராட்பேண்ட் இணைப்புகளும்வழங்கப்பட்டன. 

1,83,440 ஆசிரியர்களுக்கு ஐ.சி.டி டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவதில் பயிற்சி அளிக்கப்பட்டது. 

ஆரம்பப் பள்ளிகளை (எல்பி, யு.பி.) டிஜிட்டல் மயமாக்க பள்ளி அளவில் முழுவசதிகளுடன் கூடிய ஹைடெக் ஆய்வகங்கள்அமைக்கப்பட்டுள்ளன. 

ஒன்று முதல் ஏழுவகுப்புகளுக்கு 11,275 பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. இரண்டு லட்சம் கணினிகளில் இலவச மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பொதுக் கல்வித் துறையில் 41.01 லட்சம் குழந்தைகளுக்கு டிஜிட்டல் கற்றல் வசதிகளை உறுதி செய்வதற்காக 3,74,274 சாதனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 12,678 பள்ளிகளுக்கு பிராட்பேண்ட் இணைய வசதி வழங்கப்பட்டுள்ளது. 

கைட்டின் (KITE) தொழில்நுட்ப உதவியுடன் பொதுக்கல்வித்துறை இந்த  திட்டத்தை நிறைவேற்றி உள்ளது. 

இந்த திட்டத்திற்கான உள்கட்டமைப்பிற்காக மட்டும் ரூ.730 கோடி செலவிடப்பட்டது. இதில் ரூ.595 கோடி கிப்பி மூலம் கிடைத்தது என முதல்வர் குறிப்பிட்டார்.

அக்டோபர் 12, வரலாற்றில் இன்று.ரிச்சர்ட் ஜான்சன் என்பவர் தமிழகத்தின் முதல் செய்திப்பத்திரிக்கையான மெட்ராஸ் கூரியர் என்ற ஆங்கில வார இதழை வெளியிட்ட தினம் இன்று (1785).

அக்டோபர் 12,
 வரலாற்றில் இன்று.

ரிச்சர்ட் ஜான்சன் என்பவர் தமிழகத்தின் முதல் செய்திப்
பத்திரிக்கையான மெட்ராஸ் கூரியர் என்ற ஆங்கில வார இதழை வெளியிட்ட தினம் இன்று (1785).

அக்டோபர் 12, வரலாற்றில் இன்று.பெருந்தலைவர் காமராஜரின் பள்ளிக்கல்விச் சீர்திருத்தமுன்னோடி அய்யா நெ.து.சுந்தரவடிவேலு அவர்களின் பிறந்த தினம் இன்று.

அக்டோபர் 12,
 வரலாற்றில் இன்று.

பெருந்தலைவர் காமராஜரின் பள்ளிக்கல்விச் சீர்திருத்த
முன்னோடி அய்யா நெ.து.சுந்தரவடிவேலு அவர்களின் பிறந்த தினம் இன்று.

பத்மஸ்ரீ முனைவர் நெ. து. சுந்தரவடிவேலு (நெய்யாடுபாக்கம் துரைசாமி சுந்தரவடிவேலு, ( அக்டோபர் 12, 1912 - ஏப்ரல் 12, 1993) தமிழ்நாட்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தின், துணைவேந்தராக இரு முறை (1969 முதல் 1972 வரையும் 1973 முதல் 1975 வரையும்) பொறுப்பு வகித்தவர். அதற்கு முன்பு தமிழ் நாடு அரசின் கல்வி ஆலோசகராகவும், பொதுக்கல்வி இயக்குநராகவும் பல காலம் சிறப்பாகப் பணியாற்றினார்.
இவரது பெற்றோர் துரைசாமி,
சாரதாம்பாள் தம்பதியினர்.

1951 ஆம் ஆண்டு, சுந்தரவடிவேலு பொதுக்கல்வி இயக்குநராகப் பதவி ஏற்றார். அப்போது தமிழக முதல்வராக இருந்த காமராசருடன் இணைந்து பல திட்டங்களைச் செயல்படுத்தினார். இவற்றுள் முன்னுரிமை வகிப்பது இலவசக்கல்வி மற்றும் இலவசச் சீருடைத்திட்டங்கள் ஆகியவை ஆகும்.

இவர் காலத்தில் இலவச மதிய உணவுத்திட்டம் அறிமுகப்
படுத்தப்பட்டது. பள்ளிக் குழந்தைகள் புத்தக மூட்டைகளோடு மதிய உணவுக் கட்டுச்சோற்று மூட்டைகளையும் சுமந்து சென்று கொண்டு இருந்த நிலைமை மாறியது. இலவச மதிய உணவுத் திட்டம் மூலம் மாணவர்கள் சாப்பிட்டது மட்டுமில்லாமல், இலவசக் கல்வியும் கற்றனர்.

எல்லா ஊர்களிலும் தொடக்கப் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. பின்தங்கிய பல குடும்பங்களிலிருந்து மாணவர்கள் கல்வி கற்றார்கள். தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வி பெருகியது. ஆயிரக்கணக்கான பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்தப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை எப்படிப் பணியமர்த்துவது என்ற கேள்வி எழுந்தது. இதற்கு அந்நாள் முதலமைச்சரும் பொதுக்கல்வி இயக்குனரும் எடுத்த முடிவு, தமிழ்நாட்டிலே படித்துவிட்டு வேலை கிடைக்காமல் துயருற்ற பலருக்கும் வேலை கிடைக்கச் செய்தது எனலாம். ஆயிரக்கணக்கானோர் ஓராசிரியர் பள்ளிகளுக்கு ஆசிரியர்களாகப் பணியமர்த்தப்பட்டனர்.

சுந்தரவடிவேலு, 1951 ஆம் ஆண்டு பொதுக்கல்வி இயக்குநராகப் பதவியேற்றபோது, முதல் பொது நூலக இயக்குநராகவும் பதவி ஏற்றார். அப்போது நாட்டில் மாவட்ட மைய நூலகங்கள் மட்டும் செயல்பட்டு வந்தன. நூலகத்தின் தேவையை உணர்ந்த இவர் தமிழ்நாடு முழுவதும் 400-க்கும் மேலான கிளை நூலகங்களை ஏற்படுத்தினார். பல மாவட்டங்களில் மைய நூலகங்களுக்குச் சொந்தக் கட்டடங்கள் கிடைத்ததும் இவர் காலத்தில்தான். தமிழ் நாட்டில் சொத்து வரியுடன் சேர்த்து பெறப்படுகிற நூலக வரி திட்டம் இவர் பொது நூலக இயக்குநராகப் பணியாற்றிய காலத்தில்தான் நடைமுறைப்
படுத்தப்பட்டது.

சுந்தரவடிவேலு பள்ளிக் கல்வியில் திறம்படப் பணிபுரிந்ததைப் போலவே சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் செயல்பட்டார். பள்ளிப்படிப்புடன் நிறுத்திவிட்டுக் கல்லூரிப் படிப்பைத் தொடர முடியாமல் வேலைக்குச் செல்வோர் உயர்கல்வி பெறுவதற்காகக் கல்லூரிகளில் மாலை நேரக் கல்லூரிகளை அறிமுகப்படுத்தினார். கல்லூரி ஆசிரியர்களுக்கு மறுபயிற்சி எனப்படும் படிப்பைக் கொண்டு வந்தார்.

சுந்தரவடிவேலு பெரியவர்களுக்காக 30 நூல்களை எழுதியுள்ளார். சிறுவர்களுக்காக 13 நூல்களை வள்ளுவர் வரிசை என்னும் தலைப்பில் எழுதி உள்ளார். பெரியார் பற்றிய அரிய நூலொன்றையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவருடைய வாழ்க்கை வரலாற்றை மூன்று தொகுதிகளாக எழுதி வெளியிட்டுள்ளார்.

அக்டோபர் 12, வரலாற்றில் இன்று.இந்தியாவில் தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்ட தினம் இன்று.

அக்டோபர் 12, வரலாற்றில் இன்று.

இந்தியாவில் தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்ட தினம் இன்று. 

🇮🇳இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் ஒரு தன்னாட்சி பெற்ற இந்திய அரசாங்கத்தின் ஆணையமாகும். அக்டோபர் 12, 1993 இல் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1993 , (டி பி எச் ஆர் ஏ) இன் கீழ் இவ்வாணையம் நிலைநாட்டப்பெற்றது. பாரிசில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அவை சார்பில் மனித உரிமை பாதுகாப்பு ஆணைய கூட்டத்தில் எடுக்கப்பெற்ற தீர்மானத்தின் அடிப்படையில் இவ்வாணையம் இந்தியாவில் உருவாக்கப்பட்டது,

இங்கு பெற அல்லது வரப்படும் ஒவ்வொரு புகாரும் அதன் தன்மைக் குறித்து ஆய்வு செய்யப்பட்டு அதன் படி வகைப்படுத்தப் படுகின்றது. அவற்றை ஒழுங்குபடுத்தியபின் அவற்றை தன்மைக்கேற்ப வழக்குப் பதிவு செய்து அதற்கு பதிவெண் வழங்கப்படுகின்றது.
புகார்ரைப்பதிவு செய்த நாளிலிருந்து 7 நாட்களுக்கு மிகாமல் ஆணையத்தின் முன் வைக்கவேண்டும். அவசரத் தேவையாக இருப்பின் அவற்றின் அவசரத்தன்மைக் கருதி 24 மணி நேரத்திற்குள்
தேசிய அல்லது மாநில மனித உரிமை ஆணையத்தின் முன் வைக்கப்படவேண்டும் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.

டி பி எச் ஆர் ஏ பிரிவு 3 மற்றும் 4 ன் கீழ் வரையறுத்துள்ளதின்படி இவ்வாணையத்தின் நியமனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய மனித உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் நியமனங்கள் அதன் சிறப்புக்குழுப் பரிந்துறையின்படி இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர்.

ஞாயிறு, 11 அக்டோபர், 2020

*🌟உயர்கல்வி கல்லூரிக்கல்வி-2020-2021 கல்வியாண்டு முதல் 7 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்குவதற்கு அனுமதியளித்தல் மற்றும் ஆசிரியரில்லா பணியிடங்கள் ஒப்பளிப்பு செய்தல்-தொடரும் மற்றும் தொடரா செலவினங்களுக்கு நிதி ஒப்பளிப்பு செய்தல் தொடர்பான ஆணை*

*🌟உயர்கல்வி கல்லூரிக்கல்வி-2020-2021 கல்வியாண்டு முதல்  7 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்குவதற்கு  அனுமதியளித்தல் மற்றும் ஆசிரியரில்லா பணியிடங்கள் ஒப்பளிப்பு  செய்தல்-தொடரும் மற்றும் தொடரா செலவினங்களுக்கு நிதி ஒப்பளிப்பு செய்தல்  தொடர்பான ஆணை*

*🌟கல்லூரிக்கல்வி-அரசு கலை மற்றும் அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் சுழற்சி 1 இல் காலியாகவுள்ள உதவிப்பேராசிரியர் பணியிடங்கள்-2020-2021 ஆம் கல்வியாண்டிற்கு தொகுப்பூதியத்தில் 2423 கௌரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்திட அனுமதியளித்தல் மற்றும் தொகுப்பூதியம் வழங்குதல் தொடர்பான ஆணை*

*🌟கல்லூரிக்கல்வி-அரசு கலை மற்றும் அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் சுழற்சி 1 இல் காலியாகவுள்ள உதவிப்பேராசிரியர் பணியிடங்கள்-2020-2021 ஆம் கல்வியாண்டிற்கு தொகுப்பூதியத்தில் 2423 கௌரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்திட அனுமதியளித்தல் மற்றும் தொகுப்பூதியம் வழங்குதல் தொடர்பான ஆணை*

அக்டோபர் 11, வரலாற்றில் இன்று.புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர், மறுமலர்ச்சி கவிஞருமான மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்த தினம் இன்று (1826).

அக்டோபர் 11, வரலாற்றில் இன்று.

புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர், மறுமலர்ச்சி கவிஞருமான மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்த தினம் இன்று (1826).

மாயூரம் மாவட்ட முன்சீஃபாக 13 ஆண்டுகள் பணி புரிந்ததால், மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்றே அழைக்கப்பட்டார். வாழ்க்கை நெறிகள், பொது நீதிகள், பெண் கல்வி, ஒற்றுமை உணர்வு, புதிய சிந்தனைகள், முற்போக்கு கருத்துகள் ஆகியவை இவரது கவிதைகளின் கருப்பொருளாக அமைந்தன.

தமிழகத்தில் பஞ்சம் ஏற்பட்டபோது, தன் சொத்துகள் அனைத்தையும் தானமாக வழங்கினார். குழந்தை திருமணம், உடன்கட்டை ஏறும் வழக்கத்தை கடுமையாக எதிர்த்தார்.

தமிழின் முதல் புதினத்தைப் படைத்தவரும், மறுமலர்ச்சி கவிஞரும், சமூக சீர்திருத்தவாதியுமான மாயூரம் வேதநாயகம் பிள்ளை 63ஆவது வயதில் (1889) காலமானார்.

அக்டோபர் 11,வரலாற்றில் இன்று.சர்வதேச பெண் குழந்தைகள் தினம் இன்று.

அக்டோபர் 11,
வரலாற்றில் இன்று.

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் இன்று.

கடந்த 2012ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மூலம், அக்டோபர் மாதம் 11ஆம் நாள் சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக உருவாக்கப்பட்டது. 

பெண் குழந்தைகள் இன்னமும் உலகம் முழுவதும் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகளை முன்னிலைப்படுத்த உருவாக்கப்பட்டது. அதுமுதல் ஒவ்வொரு ஆண்டும், உலகம் முழுவதும் உள்ள பெண் குழந்தைகளால் இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 

குழந்தை முதல் கிழவி வரை கற்பழிக்கப்பட்டு வரும் அவலத்தை நாம் தினமும் காண்கிறோம். கல்வி, வேலை, திருமணம் என அனைத்திலும் பெண்கள் சந்திக்கும் கொடுமைகள் அளவில்லாதவை. வளர்ந்த நாடுகள் முதல் வளராத நாடுகள் வரை அனைத்திற்கும் இது பொருந்தும். எனவே, பெண் குழந்தைகளை கொண்டாடுவதற்காகவே இந்த தினம் உள்ளது.


இதை நாமும் கொண்டாடும் வகையில், தலைசிறந்த பெண்ணியவாதிகளின் கூற்றுகளை இங்கே பார்க்கலாம்,

“பெண்கள் தங்களைப் பார்த்து சிரிக்கிறார்கள் என்று ஆண்கள் பயப்படுகிறார்கள். ஆண்கள் தங்களை கொல்கிறார்கள் என்று பெண்கள் பயப்படுகிறார்கள்.” – Margaret Atwood

“பெண்கள் சக்திபடைத்தவர்கள், பயங்கரமானவர்கள்.” – Audre Lorde

“பெரும்பாலான வரலாற்றில், அடையாளம் இல்லாத பெண் ஒருவள் இருக்கிறாள்.” – Virginia Woolf

“பெண்ணியம் என்பது பெண்களை வலிமையாக்குவதற்கு இல்லை. பெண்கள் ஏற்கனவே வலிமையானவர்கள் தான். உலகம் அந்த வலிமையை உணர்ந்துகொள்ளும் விதத்தை இது மாற்றியது.” – G.D. Anderson

“பெண்ணியத்தால், எந்தவொரு பெண்ணுக்கும் வேலை கிடைத்துவிடப்போவதில்லை. எல்லா இடங்களிலும் வாழும் பெண்களின் வாழ்க்கையை மேலும் அழகாக்கவே.” – Gloria Steinem

“மறைந்து போவதிலும், அழிந்து போவதிலும் நான் எப்போதும் ஆர்வம் காட்டுவதில்லை.” – Laverne Cox

“பெரியவர்களுக்கு தான், சிறு பெண் பிள்ளைகள் அழகாக தோன்றுகிறார்கள். சக பிள்ளைகளிடையே அவர்கள் அழகானவர்களாக பார்க்கப்படுவதில்லை. அவர்கள் வாழ்க்கை அளவிலானவை.” – Margaret Atwood

“நான் எதையாவது சாதிக்க முடியும் என்ற உண்மையை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதால் நானே என்னை கட்டுப்படுத்த போவதில்லை.” – Dolly Parton

“வழிநடத்தும் பெண்கள், படிக்கவேண்டும்.” – Laura Bates

“தங்களை தாங்களே வெறுக்காத சிலர், பெண்ணைச் சுற்றி இருக்கும் போது, உண்மையில் அசௌகரியமாக உணருகிறார்கள். இதனால், நீங்கள் சற்று தைரியமானவராக இருக்க வேண்டும்.” – Mindy Kaling

“தைரியம், தியாகம், தீர்மானம், அர்ப்பணிப்பு, கடினத்தன்மை, இதயம், திறமை, தைரியம். சிறிய பெண் பிள்ளைகள் இவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளனர்.” – Bethany Hamilton

“ஒரு ஆணால் எல்லாவற்றையும் அழிக்க முடிகிறது எனில், ஏன் ஒரு பெண்ணால் அதை மாற்ற முடியாது?” – Malala Yousafzai