திங்கள், 19 அக்டோபர், 2020

அக்டோபர் 19,வரலாற்றில் இன்று.கடித தொடர்புக்கு பயன்படும் தபால் கார்டு அறிமுகமான தினம் இன்று.

அக்டோபர் 19,
வரலாற்றில் இன்று.


கடித தொடர்புக்கு பயன்படும்  தபால் கார்டு அறிமுகமான தினம் இன்று.

1869ஆம் ஆண்டு, முதல் தபால் கார்டு ஆஸ்திரியா நாட்டினரால் வெளியிடப்பட்டது. வியன்னா ராணுவ கழகத்தை சேர்ந்த,  டாக்டர் இம்மானுவேல் ஹெர்மன் என்பவர் இதனை வடிவமைத்தார். 1875இல் சர்வதேச தபால் யூனியன் உருவான போது அப்போதையை இந்திய தபால்துறை டைரக்டர் ஜெனரலாக இருந்த மோன்டீத் என்ற ஆங்கிலேய அதிகாரியின் முயற்சியால் 1879இல் தபால்கார்டு முறை இந்தியாவில் அறிமுகமாகியது. இங்கிலாந்தில் 1870ஆம் ஆண்டிலும், இந்தியாவில் 1.7.1879 அன்றும் தபால் கார்டுகள் அறிமுகமாயின.

அக்டோபர் 19,வரலாற்றில் இன்று.சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழ் அறிஞருமான நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை (V.Ramalingam Pillai) பிறந்த தினம் இன்று.

அக்டோபர் 19,
வரலாற்றில் இன்று.


சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழ் அறிஞருமான நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை (V.Ramalingam Pillai) பிறந்த தினம் இன்று. 


நாமக்கல் அடுத்த மோகனூரில் (1888) பிறந்தார். தாய் கூறிய இதிகாச, புராணக் கதைகளைக் கேட்டு வளர்ந்தார். பொய் பேசக்கூடாது, நல்லவனாக விளங்க வேண்டும் என்ற தாயின் அறிவுரை அவர் மனதில் ஆழமாக பதிந்தது.

நாமக்கல்லில் தொடக்கக் கல்வி, கோவை மெட்ரிக் பள்ளியில் உயர்நிலைக் கல்வி, திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்றார். எழுதுவது, ஓவியம் வரைவதில் சிறந்து விளங்கினார். விடுதலைப் போராட்ட இயக்கத்தில் 1906-ல் இணைந்தார்.

தலைமைக் காவலரான தந்தை வெங்கடராமன், இவரையும் காவல் துறையிலேயே சேர்த்துவிட பெருமுயற்சி எடுத்தார். இவருக்கு விருப்பம் இல்லாததால் வீட்டைவிட்டு வெளியேறினார். 15 நாட்கள் வெளியே சுற்றித் திரிந்து வீடு திரும்பினார்.

அவரை மேலும் வற்புறுத்தாமல் நாமக்கல் வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தர் பணி வாங்கித் தந்தார் தந்தை. அதிலும் மனம் செல்லவில்லை. பணியை உதறினார். தந்தை முயற்சி எடுத்து, ஒரு பள்ளியில் ஆசிரியர் வேலை பெற்றுத் தந்தார். இவர் அடிக்கடி அரசியல் கூட்டங்களில் கலந்துகொண்டு பேசியதால், வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.

திலகர் போன்றவர்களின் தீவிரப்போக்கால் ஈர்க்கப்பட்டவர், முழு மூச்சாக அரசியலில் இறங்கினார். பின்னர் காந்தியின் அகிம்சை, அறவழிக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டார். அறப்போராட்டத்தால் மட்டுமே நாடு விடுதலை அடையும் என்ற முடிவுக்கு வந்தார். காங்கிரஸில் இணைந்தார்.

எளிய சொற்களால் கவிதை பாடி, தேசிய, காந்தியக் கொள்கைகளைப் பரப்பினார். தேசபக்திப் பாடல்கள் பாடியும், ஆவேச உரைகள் நிகழ்த்தியும் இளைஞர்கள் மனதில் எழுச்சியை ஏற்படுத்தினார். ஏராளமான கவிதைகள் எழுதிக் குவித்தார். ‘தேசியக் கவி’ என்று போற்றப்பட்டார்.

திருச்சி மாவட்ட காங்கிரஸ் செயலாளர், கரூர் வட்டார காங்கிரஸ் தலைவர், நாமக்கல் வட்டார காங்கிரஸ் தலைவர் ஆகிய பதவிகளை வகித்தார். 1932-ல் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். உப்பு சத்தியாகிரகத் தொண்டர்களின் வழிநடைப் பாடலுக்காக இவர் இயற்றித் தந்ததுதான் ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ என்ற பாடல்.

மலைக்கள்ளன், மரகதவல்லி, கற்பகவல்லி, காதல் திருமணம் உள்ளிட்ட பல நாவல்களை எழுதியுள்ளார். இவரது ‘மலைக்கள்ளன்’ நாவல், எம்ஜிஆர் நடிப்பில் திரைப்படமாக வந்தது. இசை நாவல், கட்டுரை, சுயசரிதம், புதினம், திறனாய்வு, நாடகம், கவிதைத் தொகுப்பு, சிறு காப்பியம், மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் அனைத்துக் களங்களிலும் முத்திரை பதித்தவர். மொத்தம் 66 நூல்களை எழுதியுள்ளார்.

நாடு விடுதலை அடைந்த பிறகு தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டார். பத்மபூஷண் விருது பெற்றார். சாகித்ய அகாடமியின் தமிழ்ப் பிரதிநிதியாக பொறுப்பு வகித்தார்.

தேசியக் கவிஞர், காந்தியக் கவிஞர், காங்கிரஸ் புலவர், அரசவைக் கவிஞர் என்றெல்லாம் போற்றப்பட்ட நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை 84ஆவது வயதில் (1972) காலமானார்.

ஞாயிறு, 18 அக்டோபர், 2020

👫தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில செயலாளர் திரு.முருக செல்வராசன் அவர்களின் இல்லத் திருமண விழா நிகழ்வுகள்.

👫தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில செயலாளர் திரு.முருக செல்வராசன் அவர்களின் இல்லத் திருமண விழா நிகழ்வுகள்.
பார்க்க இங்கே கிளிக் செய்க..

சனி, 17 அக்டோபர், 2020

*🌟பள்ளிக்கல்வி -நாமக்கல் மாவட்டம்-அனைத்து பள்ளிக் கட்டிடத்தின் மேல் தளத்தில் உள்ள இலைகள்,செடிகள் சுத்தம் செய்வது தொடர்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்.*

*🌟பள்ளிக்கல்வி -நாமக்கல் மாவட்டம்-அனைத்து பள்ளிக் கட்டிடத்தின் மேல் தளத்தில் உள்ள இலைகள்,செடிகள் சுத்தம் செய்வது தொடர்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்.*

*🌟ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதிய (Incentive) உயர்வை நிறுத்திய அரசாணை -37 க்கு விரிவான விளக்கம் அளித்து தலைமைச் செயலாளர் அரசாணை வெளியீடு...*

*🌟ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதிய (Incentive) உயர்வை நிறுத்திய அரசாணை -37 க்கு விரிவான விளக்கம் அளித்து தலைமைச் செயலாளர் அரசாணை வெளியீடு...
அரசாணையினைப் படிக்க இங்கே கிளிக் செய்க..

click here

அக்டோபர் 17, வரலாற்றில் இன்று.கண்ணதாசன் நினைவு தினம் இன்று.

அக்டோபர் 17, வரலாற்றில் இன்று.

கண்ணதாசன் நினைவு தினம் இன்று.

திரைப்பட பாடல்கள் என்றாலே நம் நினைவுக்கு வருவது கண்ணதாசன் தான்.இலக்கியங்களை பாமரரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையாக்கி தந்தவர் அவர்.

கண்ணதாசன் (ஜூன் 24 1927 - அக்டோபர் 17 1981)  நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, மேதாவி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

அக்டோபர் 17,வரலாற்றில் இன்று.சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் இன்று.

அக்டோபர் 17,
வரலாற்றில் இன்று.

சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் இன்று.

சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் ஒவ்வோரு ஆண்டும் அக்டோபர் 17ஆம் தேதி உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறதுஉலக அளவில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிப்பிணியில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பு 1992 ஆம் ஆண்டு வறுமை ஒழிப்பு நாளை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது.

வெள்ளி, 16 அக்டோபர், 2020

*🌟ஒரு ஆசிரியர் மருத்துவ விடுப்பு எடுக்கும் பட்சத்தில் மருத்துவ விடுப்பு எடுத்ததற்கு ( 17 நாள் MLக்கு 1 நாள் EL என) ஈட்டிய விடுப்பு நாட்களை கழிக்க கூடாது , மருத்துவ விடுப்பு என்பது ஊதியத்துடன் கூடிய விடுப்பு . சம்பளமில்லா விடுப்பு எடுத்தால் மட்டுமே ஈட்டிய விடுப்பு கழிக்கப்பட வேண்டும் என்பதற்கான முதலமைச்சர் தனிப்பிரிவு பதில்.*

*🌟ஒரு ஆசிரியர் மருத்துவ விடுப்பு எடுக்கும் பட்சத்தில் மருத்துவ விடுப்பு எடுத்ததற்கு ( 17 நாள் MLக்கு 1 நாள் EL என) ஈட்டிய விடுப்பு நாட்களை  கழிக்க  கூடாது , மருத்துவ விடுப்பு என்பது ஊதியத்துடன் கூடிய விடுப்பு . சம்பளமில்லா விடுப்பு எடுத்தால் மட்டுமே ஈட்டிய விடுப்பு கழிக்கப்பட வேண்டும் என்பதற்கான முதலமைச்சர் தனிப்பிரிவு பதில்.*

அக்டோபர் 16, வரலாற்றில் இன்று. வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட தினம் இன்று (1799)

அக்டோபர் 16, வரலாற்றில் இன்று.

 வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட தினம் இன்று (1799).

தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட வீர மன்னர் கட்டபொம்மன். ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியின் மேலாண்மையை ஏற்க மறுத்து அவர்களுக்கு கப்பம் கட்ட மறுத்தார்.1797இல் முதன் முதலாக ஆங்கிலேயரான ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்து வீரபாண்டிய கட்டபொம்மனிடம் போரிட்டு தோற்றுப்போனார்.
1799இல் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டு பின்னர் கைப்பற்றப்பட்டது. பாஞ்சாலன்குறிச்சியிலிருந்து தப்பியோடிய கட்டபொம்மன் புதுக்கோட்டையில் பதுங்கினார். எனினும் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கிழக்கிந்திய கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டார். 1799 ஆம் ஆண்டு அக்டோபர் 16, ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் வீரப்பாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்.

அக்டோபர் 16,வரலாற்றில் இன்று."உலக உணவு தினம்" இன்று.

அக்டோபர் 16,
வரலாற்றில் இன்று.

"உலக உணவு தினம்" இன்று.

ஐக்கிய நாடுகளின் "உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு" தொடங்கப்பட்ட நாளை நினைவுகூறும் வகையில் 1979ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இத்தினம் உலக உணவு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

உணவின் முக்கியத்துவம், வறுமை மற்றும் பட்டினிக்கு எதிரான விழிப்புணர்வு ஆகியவற்றை வலியுறுத்தி, ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு கருப்பொருளின் அடிப்படையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.