திங்கள், 30 நவம்பர், 2020

*🔖தமிழகத்தில் ஊரடங்கு 2020 டிசம்பர் 31வரை நீட்டித்து தமிழக அரசு அரசாணை எண் 673 நாள்:30.11.2020 வெளியிட்டு வழிகாட்டுநெறிமுறைகளை பிறப்பித்துள்ளது.

*🔖தமிழகத்தில் ஊரடங்கு 2020 டிசம்பர் 31வரை நீட்டித்து தமிழக அரசு அரசாணை எண் 673 நாள்:30.11.2020 வெளியிட்டு வழிகாட்டுநெறிமுறைகளை பிறப்பித்துள்ளது.அரசாணையை படிக்க இங்கே கிளிக் செய்க.

click here.

*✍️வட்டாரக் கல்வி அலுவலகங்களில் மண்டல தணிக்கைத் துறை அலுவலர்களால், ஆசிரியர்களின் பணிப் பதிவேடு தொடர்பான தணிக்கை நடைபெறும் போது, தணிக்கை அலுவலர்களால் பொதுவாக சுட்டிக் காட்டப் படும் சிறு சிறு குறைபாடுகளும்,ஆசிரியர்களுக்கான ஆலோசனைகளும் ஒரு பார்வை.*

*✍️தணிக்கை தொடர்பாக ஆசிரியர்களுக்கான சில ஆலோசனைகள்!*

வட்டாரக் கல்வி அலுவலகங்களில் மண்டல தணிக்கைத் துறை அலுவலர்களால், ஆசிரியர்களின் பணிப் பதிவேடு தொடர்பான தணிக்கை நடைபெறும் போது, தணிக்கை அலுவலர்களால் பொதுவாக சுட்டிக் காட்டப் படும் சிறு சிறு குறைபாடுகள்: 


1. ஒரு ஆசிரியர் அரசுப் பணிக்கு வரும் முன்னரே, கூடுதல் கல்வித் தகுதி பெற்றிருந்தால், பணியில் சேரும் முன்னரே உயர் கல்வி பெற்றுள்ளார் என்ற பதிவை வட்டாரக் கல்வி அலுவலருக்கு விண்ணப்பித்து பணிப் பதிவேட்டில் பதிவு செய்து கொள்ள வேண்டும். 

 
2. உயர் கல்வி பயில்வதற்கான முன் அனுமதி ஆணை வழங்கப் படும் விவரம், 2012 ஆம் ஆண்டிற்கு பின்பு தான், பணிப் பதிவேட்டில் பதிவு செய்யப் படுகிறது. அதற்கு முன்னர் ஆணை மட்டும் தான், வழங்கப் பட்டது. ஆனால் தற்போது தணிக்கைத் துறை அலுவலர்கள், பணி நியமன நாள் முதல் இன்று வரை, பணிப் பதிவேட்டில் பதிவு செய்துள்ள அனைத்து கூடுதல் கல்வித் தகுதிகளுக்கும் முன் அனுமதி அல்லது பின்னேற்பு பதிவு செய்வது கட்டாயம் என வலியுறுத்துகின்றர். ஊக்க ஊதியம் பெற்றிருந்தாலும், பெறாவிட்டாலும் முன் அனுமதி / பின்னேற்பு ஆணையை வட்டாரக் கல்வி அலுவலரிடம் காண்பித்து, பணிப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். 


3. 10 ஆம் வகுப்பு முதல், நாம் பணிப் பதிவேட்டில் பதிவு செய்திருக்கும் அனைத்து கல்வித் தகுதிகளுக்கும் உண்மைத் தன்மைச் சான்றினைப் பெற்று பணிப் பதிவேட்டில் பதிவு செய்திருக்க வேண்டும். அதன் நகலும் ஆசிரியர் கைவசம் வைத்திருக்க வேண்டும். 

 
4. பணிப் பதிவேட்டில், தற்காலிக தேர்ச்சி சான்று மட்டும் பதிவு செய்திருத்தல் கூடாது. அப்படிப்பிற்கான பட்டச் சான்றை பணிப் பதிவேட்டில் பதிவு செய்திருக்க வேண்டும். 


5. இதற்கு முந்தைய தணிக்கையின் போது, ஏதேனும் குறைபாடுகள் சுட்டிக் காட்டப் பட்டிருந்தால், அவற்றை நிவர்த்தி செய்திருக்க வேண்டும். 


6. பணியிட மாறுதல் ஏதேனும் பணிப் பதிவேட்டில் பதிவு செய்யப் படாமல் விடுபட்டிருந்தால், அவற்றை உரிய ஆவணங்களின் அடிப்படையில் விடுதல் பதிவாக பதிவு செய்ய விண்ணப்பித்து, பதிவு செய்ய வேண்டும். 

 
7. CL, RH தவிர பிற அனைத்து விடுப்பு வகைகள், ஈட்டிய விடுப்பு பணப் பயன், ஈட்டிய விடுப்பு கையிருப்பு, பணிக் காலம் சரி பார்ப்பு இவற்றில் ஏதேனும் விடுபட்டிருந்தால் சரி செய்து கொள்ள வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்ட காலம், ஊதியமில்லா விடுப்பாக பதிவு செய்யப் பட்டிருக்க வேண்டும். கலந்து கொண்ட போராட்ட நாட்களுக்கு ஏற்ப, ஆண்டு ஊதிய உயர்வு தள்ளி போயிருக்க வேண்டும். 



8. குடும்ப உறுப்பினர் விவரம், வாரிசு நியமனம் இவற்றில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின் உடனே விண்ணப்பித்து சரி செய்து கொள்வது நல்லது. 


 
9. பி.எட். கற்பித்தல் பயிற்சிக்காக, அரைச் சம்பள விடுப்பு எடுத்திருந்தால், அதை ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு கணக்கீட்டிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். 



10. பணிப் பதி வேட்டின் நகல் தங்களிடம் இருந்தால், அனைத்து பதிவுகளும் சரியாக உள்ளதா? என்பதை சரிபார்த்துக் கொள்வது நல்லது.

*📘பாடத்திட்டம் குறைப்பது குறித்து நிபுணர் குழுவின் அறிக்கை வரும் திங்கட்கிழமை முதலமைச்சரிடம் வழங்கப்படும் என்றும், அதனை தொடர்ந்து சில நாட்களில், இதற்கான அரசாணை வெளியிடப்படும் -பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.*

*📘பாடத்திட்டம் குறைப்பது குறித்து நிபுணர் குழுவின் அறிக்கை வரும் திங்கட்கிழமை முதலமைச்சரிடம் வழங்கப்படும் என்றும், அதனை தொடர்ந்து சில நாட்களில், இதற்கான அரசாணை வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.*


பாடத்திட்டம் குறைப்பது குறித்து நிபுணர் குழுவின் அறிக்கை வரும் திங்கட்கிழமை முதலமைச்சரிடம் வழங்கப்படும் என்றும், அதனை தொடர்ந்து சில நாட்களில், இதற்கான அரசாணை வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அரசாணைக்கு ஏற்ப கல்வி தொலைக்காட்சியிலும், ஆன்லைன் மூலமும் பாடங்கள் மாணவ மாணவிகளுக்கு நடத்தப்படும் என்றார். மேலும், தற்போதைய சூழ்நிலையில் அரையாண்டு தேர்வு நடைபெறாது என்றும் தெரிவித்தார்.

புதிய கல்வி கொள்கை குறித்து நிபுணர் குழு, பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர் இடமிருந்து கருத்துக்களை திரட்டி வருவதாக தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், மத்திய அரசு 2023 ஆம் ஆண்டு முதல் புதிய கொள்கையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

சனி, 28 நவம்பர், 2020

*🌸2020-2021 ஆம் கல்வியாண்டுக்கான பள்ளி பாதுகாப்புக்குழு புதிய படிவம்.SCHOOL SAFETY COMMITTEE NEW FORMAT- 2020-2021 - PDF.

  *🌸2020-2021 ஆம் கல்வியாண்டுக்கான 
பள்ளி பாதுகாப்புக்குழு புதிய படிவம்.
SCHOOL SAFETY COMMITTEE NEW FORMAT- 2020-2021 - PDF.படிவங்களை பார்க்க இங்கே கிளிக் செய்க.

*✍️“கற்போம் எழுதுவோம் இயக்கம்” - புதிய வயது வந்தோர் கல்வித் திட்டம் செயல்படுத்துதல் - 30.11.2020 பிற்பகல் அன்று காணொளி வாயிலான ஆய்வுக்கூட்டம் நடத்துதல் - சார்பு - பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்குநரின் கடிதம் -நாள்:27.11.20*

*✍️“கற்போம் எழுதுவோம் இயக்கம்” - புதிய வயது வந்தோர் கல்வித் திட்டம் செயல்படுத்துதல் - 30.11.2020 பிற்பகல் அன்று காணொளி வாயிலான ஆய்வுக்கூட்டம் நடத்துதல் - சார்பு - பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்குநரின் கடிதம் -நாள்:27.11.20*

*📘✍️தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் -2021 தேர்தல் அலுவலர்கள் நியமனம் செய்தல் மற்றும் பயிற்சி அளித்தல் சார்பான மாவட்ட தேர்தல் அலுவலர்,நாமக்கல் அவர்களின் கடிதம்.*

*📘✍️தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் -2021 தேர்தல் அலுவலர்கள் நியமனம் செய்தல் மற்றும் பயிற்சி அளித்தல் சார்பான மாவட்ட தேர்தல் அலுவலர்,நாமக்கல் அவர்களின் கடிதம்.*

புதன், 25 நவம்பர், 2020

நிவர் புயல் பாதிப்பினால் 16 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.

நிவர் புயல் பாதிப்பினால் 16 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.

1.சென்னை,
2.காஞ்சிபுரம், 
3.திருவண்ணாமலை,
4. கள்ளக்குறிச்சி,
5.செங்கல்பட்டு,
6.கடலூர்,
7.திருவள்ளூர்,
8.விழுப்புரம்,
9.அரியலூர்,
10தஞ்சை,
11.திருவாரூர்,
12.நாகை,
13.பெரம்பலூர்,
14. திருப்பத்தூர்,
15.ராணிப்பேட்டை
16.வேலூர்.
ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு வேண்டுகோள்!தேவையற்ற சுற்றறிக்கையை திரும்பப்பெற வேண்டும்! தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத் தலைவர் முனைவர் -மன்றம் .திரு.நா.சண்முகநாதன் வலியுறுத்தல்!

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு வேண்டுகோள்!
தேவையற்ற சுற்றறிக்கையை திரும்பப்பெற வேண்டும்!     
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி 
ஆசிரியர் மன்றத்தின் மாநிலத் தலைவர் முனைவர் -மன்றம் .
திரு.நா.சண்முகநாதன் வலியுறுத்தல்!
+++++++++++++++++++++++++++++++++++++
கொரோனா கொடுந்தொற்று முற்றிலுமாய் நீங்காத சூழலில், பெருமழையும் கடும்புயலும் கரம்கோர்க்கும் காலத்தில் மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தத்தை காரணம் காட்டி 26.11.2020அன்று  கட்டாயம் பணிக்கு வரவேண்டும் என்ற உத்தரவை தமிழகஅரசு பிறப்பித்துள்ளது.

13 மாவட்டங்களுக்கு 26.11.2020அன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.,தற்போது மேலும் 3 மாவட்டங்களை சேர்த்து 16 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  மாநிலத்தின் சரி பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அப்படி எனில் மீதமுள்ள மாவட்டங்களில் மட்டும் போராட்டம் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்படுமா?அவ்வாறு நடத்துவது சரியான கணக்கெடுப்பு ஆகுமா?என்று தமிழகரசு கவனத்தில் கொள்ள வேண்டும். 

இத்தனைக்கும் மேலாக கொரோனா கொடுந்தொற்றால் தமிழகத்தில் பள்ளிகள் முற்றிலும் இயங்கவில்லை. நாள்தோறும்சுழற்சிமுறையில் 50சதவிகித ஆசிரியர்களுடன் பள்ளிகள் மாணாக்கர் சேர்க்கைக்காக இயக்கப்பட்டு வருகிறது.
கள நிலைமை இவ்வாறிருக்க 
பள்ளிக் கல்வித்துறையின் 
சில மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர்கள் பணிக்கு வந்த மற்றும் வராத ஆசிரியர்களின் பட்டியலைத் தயாரிக்க சுற்றறிக்கை அனுப்புவது எதற்கு?
ஆசிரியர்களை மிரட்டவா?
அவர்களுக்கு மனஅழுத்தத்தை கொடுக்கவா?
அசாதாரணமான சூழல் மாநிலத்தில் நிலவும் இவ்வேளையில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களைத் தாண்டி புயலின் தாக்கம் நீடித்தால் எவ்வாறு ஆசிரியர்கள் பணிக்கு செல்லமுடியும்? 
அவ்வாறு செல்லும் வழியில் ஏதாவது விபரீதம் நடந்தால் அதற்கு யார் பொறுப்பு? அரசு பொறுப்பேற்குமா?

நிவர் புயலின் கோரத்தாண்டவத்தில் மாநிலத்தின் மக்கள் சிக்கித்தவிக்கையில் இக்கணக்கெடுப்பு அர்த்தமுடையது தானா?
 ஆசிரியர்களைஅலைக்கழிக்கும் நோக்கம்கொண்டதா?என்று ஆசிரியர்களிடையே பேசப்படு வருகிறது.

பள்ளிகள் இயங்காத சூழலில் பள்ளிக் கல்வித்துறையில் இந்தச் சுற்றறிக்கை தேவையற்றதாகவே ஆசிரியர்களால்  பார்க்கப்படுகிறது. அகில இந்திய வேலை நிறுத்தத்தைக் காரணமாக காட்டி தமிழகத்து ஆசிரியர்களிடம் பீதியை உருவாக்கும் மனநிலையில் கல்வித்துறை அலுவலர்கள் செயல்படுவது தடுத்துநிறுத்தப்படவேண்டும்.   

பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் சுற்றறிக்கை வெளியிட்ட மாவட்டங்களில் அவ்வறிக்கையை திரும்பப்பெற பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டு ஆசிரியர்களின் நலன்காக்குமாறும், ஆசிரியர்களை மன அழுத்தத்தில் இருந்து பாதுகாத்திடுமாறும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்  சார்பில்  கேட்டுக் கொள்கிறேன்.

_முனைவர்-மன்றம்.
நா.சண்முகநாதன்,
மாநிலத் தலைவர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி 
ஆசிரியர் மன்றம்.

🌟தமிழ்நாட்டில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என்று வெளியான செய்தி தவறானது.*

 *🌟தமிழ்நாட்டில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என்று வெளியான செய்தி தவறானது.*


*தமிழ்நாட்டில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என்று வெளியான செய்தி தவறானது.*



*பள்ளிகள் திறப்பு குறித்து யோசிக்கவில்லை. சூழல் சரியானதும், பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் அறிவிப்பார்.*




*பள்ளிக் கல்வித் துறை*