ஞாயிறு, 6 டிசம்பர், 2020

தொழிற்சங்கங்களின் எதிர்காலம் என்னவாகும்?what-is-the-future-of-the-unions?நன்றி:இந்து தமிழ்திசை.

தொழிற்சங்கங்களின் எதிர்காலம் என்னவாகும்?
what-is-the-future-of-the-unions?
நன்றி:இந்து தமிழ்திசை
****************************

தொழிலாளர் நலச் சட்ட ‘சீர்திருத்தம்’ என்பது 1991 முதலாகவே விவாதிக்கப்படுவதுடன், ஒவ்வொரு அரசாங்கத்துக்கும் பொருளாதார வளர்ச்சிக்கான விருப்பத்துக்குரிய தீர்வாகவும் இருந்துவருகிறது. ஆனாலும், இதுவரையில் இது குறித்து அரசாங்கங்கள், அரசியல் கட்சிகள், தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள், பணி வழங்குவோர் ஆகியோரிடையே ஒருமித்த கருத்து உருவாகவில்லை.

ஏனைய அரசியல் கட்சிகளைப் போலின்றி பாஜக தற்போது நடைமுறையில் இருக்கும் தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தி அமைப்பதற்குப் பணி வழங்குவோருடன் சேர்ந்து ஓர் உடன்பாட்டை மேற்கொண்டிருக்கிறது. முன்னதாக பாஜக ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட இரண்டாவது தேசிய தொழிலாளர் ஆணையத்தில் (1999-2002) தொழிலாளர்கள் சங்கங்களின் பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டது. அந்த ஆணையத்தால் அளிக்கப்பட்ட பரிந்துரைகளை நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. இத்தகுசூழலில், நடைமுறையில் இருக்கும் அனைத்துத் தொழிலாளர் நலச் சட்டங்களையும் நீக்குவது, அவற்றுக்குப் பதிலாக நான்கு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைக் கொண்டுவருவது, புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளின் வரைவு ஆகியவை குறித்து முன்கூட்டி ஆலோசிப்பதிலிருந்து தொழிற்சங்கங்களை விலக்கிவைப்பது ஆகியவற்றில் இப்போதைய அரசு உறுதியாகவே இருக்கிறது. நாடாளுமன்ற நிலைக் குழுவின் கணிசமான பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதுடன், எதிர்க்கட்சிகள் வலுவாக இல்லாத நாடாளுமன்றச் சூழலும் இந்த முடிவுகளுக்குச் சாதகமாக ஆகியிருக்கிறது. பிரச்சினை என்னவென்றால், இந்த நான்கு சட்டத் தொகுப்புகளுமே பணி வழங்குவோரின் உரிமைகளுக்கு இணக்கம் காட்டுவதற்காகத் தொழிலாளர்களின் உரிமைகளை நீர்க்கச்செய்வதோடு, அமைப்பாக ஒன்றுசேரும் தொழிலாளர்களின் உரிமை, கூட்டுச் செயல்பாடு ஆகியவற்றையும் நீர்க்கடிக்கின்றன.



நீண்ட நெடிய வரலாறு

கடுமையான உழைப்புச் சுரண்டலை எதிர்கொள்ள வேண்டி, 19-ம் நூற்றாண்டில் முதலில் தொழிற்சங்கங்கள் உருவானபோது தொழிலாளர்களை நிர்வாகிகளாகக் கொண்ட அமைப்புகளாகத்தான் இருந்தன. பணி வழங்குவோரின் சுரண்டல், நேர்மையற்ற மற்றும் சட்டவிரோத நடைமுறைகளுக்கு எதிராகத் தொழிலாளர்களின் ஒருமித்த குரலாக அவை தொடர்ந்து ஒலித்தன. தொழிற்சங்கங்களின் வாயிலாகவே தொழிலாளர்கள் நல்லதொரு ஊதியத்தையும் நியாயமான பணிச் சூழலையும் போராடிப் பெற முடிந்தது.

இந்தியாவில் காலனியாதிக்க ஆட்சியின்போது 1926-ல் இயற்றப்பட்ட தொழிற்சங்கச் சட்டத்தால் தொழிற்சங்கத்தைத் தொடங்கும் சட்டரீதியான உரிமையைத் தொழிலாளர்கள் பெற்றார்கள். இந்தச் சட்டம் தொழிலாளர்களின் உரிமையிலிருந்து உருவெடுத்த தொழிற்சங்கத்தைப் பதிவுசெய்வதற்கான நடைமுறைகளையும், அவற்றின் செயல்பாடுகளுக்கான விதிமுறைகளையும் உருவாக்கித் தந்தது. மேலும், ஒரு தொழிற்சங்கம் ‘இந்தச் சட்டத்தின் எந்தவொரு வகைமுறைக்கும் எதிராக நடந்துகொண்டால்’ அதன் பதிவை ரத்துசெய்வதற்கான நடைமுறைகளைக் கொண்டிருந்தது. இதன் மூலமாக, தொழிற்சங்கச் சட்டம் தொழிலாளர்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் செய்தது.

தொழிற்சங்கச் சட்டம் தொழிலாளர்களுக்குத் தங்களது தொழிற்சங்கத்தைப் பதிவுசெய்துகொள்ளும் உரிமையை அளித்ததன் மூலமாக, அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நடவடிக்கைகளை எடுக்கவும், பணி வழங்குவோர் தீங்கெண்ணம் கொண்டவராக இருப்பது போன்ற சூழல்களில் தேவைப்பட்டால் தங்களது கோரிக்கைகளுக்காகப் போராடவும், அந்தக் கோரிக்கைகளை அரசு மற்றும் நீதித் துறையின் முன்னர் கொண்டுசெல்லவும் உரிமை அளித்தது. மேலும், அந்தச் சட்டமானது உறுப்பினர்கள் (தொழிலாளர்கள்) மற்றும் தொழிற்சங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்குக் குற்றவியல் சதி உள்ளிட்ட வழக்குகளிலிருந்து விலக்கும் அளித்தது. முக்கியமாக, தொழிலாளர்கள் ஒருமித்து எடுக்கும் முடிவுகளின் அடிப்படையிலான செயல்பாடுகள் சட்டபூர்வமானவை என்றும், அவை குற்றவியல் சதியாகக் கொள்ளப்பட மாட்டாது என்றும் இந்தச் சட்டம் அங்கீகரித்தது.

தெளிவில்லாத வரையறைகள்

அது எந்த அரசாக இருப்பினும் சரி; தொழிலாளர் சட்டங்களை எளிமைப்படுத்துவதாகச் சொல்லி, தொழிற்சங்கச் சட்டம், தொழிலகச் சச்சரவுகள் சட்டம் - 1947, தொழிலகப் பணி (நிலையாணைகள்) சட்டம் - 1946 ஆகியவற்றை நீக்கிவிட்டு அவற்றுக்குப் பதிலாகத் தொழிலக உறவுகள் சட்டத் தொகுப்பை உருவாக்குவது என்பது அமைப்பாக ஒன்றுசேரும் தொழிலாளர்களின் உரிமையை வஞ்சிப்பதாகும். இந்தச் சட்டத் தொகுப்பானது தொழிற்சங்கப் பதிவை ரத்துசெய்வதற்கான வாய்ப்புகளை மிகவும் விரிவுபடுத்தியிருக்கிறது. தொழிற்சங்கச் சட்டத்தைப் பொறுத்தவரை, பதிவை ரத்துசெய்வது என்பது அந்தச் சங்கத்தின் நிர்வாகச் செயல்பாடுகளை மட்டுமே கட்டுப்படுத்துவதாக அமைந்திருந்தது - அதுவும் இந்தச் சட்டத்தின் கீழ் அல்லது சங்கத்தின் அமைப்பு முறையின் கீழ் நிதியைக் கையாளுவது குறித்த விதிமுறைகளை மீறும் சூழல்களில் மட்டும். நிலையாணைகள் சட்டமும், தொழிலகச் சச்சரவுச் சட்டமும் முறையே பணிச் சூழல் மற்றும் சச்சரவுகளைப் பேசித் தீர்த்துக்கொள்ளுதல் தொடர்பிலானவை. தொழிற்சங்கத்தைப் பற்றியோ அதன் நிர்வாகச் செயல்பாடுகளைப் பற்றியோ இந்தச் சட்டங்களில் ஏதும் குறிப்பிடப்படவில்லை. புதிதாக இயற்றப்பட்டிருக்கும் தொழிலக உறவுகள் சட்டத் தொகுப்பின் கீழ், ஒரு தொழிற்சங்கத்தின் பதிவை மிக எளிதாக ரத்துசெய்ய முடியும். அதற்குத் தேவையான அடிப்படையான முகாந்திரங்கள் எதுவும் இந்தச் சட்டத் தொகுப்பில் குறிப்பிட்டுச் சொல்லப்படவில்லை.

ஒரு தொழிற்சங்கத்தின் பதிவு ரத்துசெய்யப்படுவதன் விளைவு மிக மோசானது. அதன் பிறகு, அந்தச் சங்கத்தால் தொழிலாளர்களின் தரப்பாக நீதிமன்றத்தின் முன்னாலோ, தொழிலகச் சச்சரவுகளைத் தீர்த்துவைக்கும் அமைப்புகளின் முன்னாலோ ஆஜராக முடியாது. மேலும், தொழிற்சங்கம் தனது பதிவை இழக்க நேரும்போது அதன் உறுப்பினர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் சிறப்புரிமைகளும் பறிக்கப்படுகின்றன. அவர்களால் எடுக்கப்பட்ட கூட்டு முடிவுகளைச் சட்டவிரோதமாகக் கருதி நடவடிக்கை எடுக்கவும்கூட முடியும். உதாரணத்துக்கு, வேலைநிறுத்த முடிவொன்றுக்காக அந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் தொழிலாளர்களைப் பணியிலிருந்து நீக்கவோ அல்லது அவர்களால் ஏற்பட்ட இழப்புகளுக்காக அதிகளவில் அபராதம் விதிக்கவோ பணி வழங்குவோர் வாய்ப்பைப் பெறுகிறார்கள். மேலும், தொழிற்சங்க உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளும் அவர்களது கூட்டு முடிவுகளுக்காகவும் செயல்பாடுகளுக்காகவும் குற்றவியல் சதி வழக்குகளிலிருந்து விலக்களிக்கப்பட்ட சிறப்புரிமையை இழக்கிறார்கள் என்றே இதற்குப் பொருள். தொழிற்சங்கச் சட்டத்தால் வழங்கப்பட்ட இந்தச் சிறப்புரிமையானது இத்தகைய குற்றச்சாட்டுகளிலிருந்து அவர்களைப் பாதுகாத்தது.

சதிக் குற்றச்சாட்டுகளிலிருந்து விலக்களிக்கும் சட்டப் பிரிவுகள் எல்லாம் தொழிற்சங்கச் சட்டத்திலிருந்து வெட்டி புதிய சட்டத் தொகுப்பில் ஒட்டப்பட்டுள்ளன என்றபோதும், தொழிற்சங்கத்தின் பதிவை ரத்துசெய்ய முடியும் எனில், அந்தச் சிறப்புரிமைக்கு எந்த அர்த்தமும் கிடையாது. புதிய சட்டத் தொகுப்பானது தொழிலாளர் கூட்டமைப்புகளின் கூட்டுச் செயல்பாடுகளை அச்சுறுத்துவதற்காகவே வடிவமைக்கப்பட்டதுபோல தோன்றுகிறது. ‘எளிமைப்படுத்த’ப்பட்டதாகச் சொல்லப்படும் புதிய சட்டத் தொகுப்பின் பொறிக்குள் மாட்டிக்கொண்டுவிடுவோமோ என்ற அச்சத்தையே இது தொழிற்சங்கங்களிடம் உருவாக்கியிருக்கிறது.

சட்டங்களுக்கு அப்பாற்பட்ட அமைப்புகள்

எப்போது வேண்டுமானாலும் தொழிற்சங்கத்தின் பதிவை ரத்துசெய்யலாம் என்ற அச்சுறுத்தலானது, தொழிலாளர்களையும் அவர்களது தொழிற்சங்கங்களையும் சட்டத்துக்கு அப்பாற்பட்ட அமைப்புகளாக்கிவிடக்கூடும். தொழிற்சங்கச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு, நியாயமற்ற முறையில் நடந்துகொண்ட பணி வழங்குநர்களுக்கு எதிராகத் தங்களது கோரிக்கைகளை முன்வைத்த ‘போராட்டக் குழு’, ‘தொழிலாளர்’ முன்னணி போன்றே அந்தச் சங்கங்களும் கருதப்படக்கூடும். இது இரண்டு விளைவுகளை ஏற்படுத்தலாம்: முதலாவதாக, பணி தொடர்பான சச்சரவுகளுக்குச் சட்டரீதியான அமைப்புகளுக்கு வெளியே தீர்வு காண வேண்டிய நிலைக்குத் தள்ளலாம். இரண்டாவதாக, தொழிலாளர்களின் போராட்டங்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்ட அமைப்புகளின் வாயிலாகவே நடந்தது என்று சொல்லிக் கருத்து மாறுபட்ட தொழிலாளர் வர்க்கத்தினரைக் குற்றவாளிகளாக்கும் இன்னும் மோசமான விளைவை ஏற்படுத்தலாம்.

தொழிற்சங்கங்களின் பதிவை ரத்துசெய்வதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் தொழிலகச் சட்டத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள சட்டப் பிரிவானது, நூற்றாண்டு கால உலகளாவிய உரிமையின் மீது நடத்தப்படும் தாக்குதல் என்பதோடு, மிக முக்கியமாக அறுதியான ஓர் உரிமையைத் திரும்பப்பெற்றுக்கொள்வதும் ஆகும். ஒருமுறை தொழிற்சங்கத்தின் பதிவு ரத்துசெய்யப்பட்டுவிட்டால் அல்லது அவ்வாறான அச்சுறுத்தலின் காரணமாக அந்தச் சங்கம் அமைதிப்படுத்தப்படும் என்றால், அமைப்பாக ஒன்றுசேரும் தங்களது அடிப்படை உரிமையைத் தொழிலாளர்கள் இழந்துவிடுவார்கள். புதிய சட்டத் தொகுப்பின்படி தொழிற்சங்கங்களைப் பலவீனப்படுத்துவது என்பது இந்நாட்டில் ஜனநாயக உரிமைகள் எதிர்கொள்ளவிருக்கும் சிக்கல்களுக்கான அறிகுறி.

- கௌதம் மோதி, ‘புதிய தொழிற்சங்க முன்னெடுப்பு’ அமைப்பின் பொதுச்செயலாளர்

© ‘தி இந்து’, தமிழில்: புவி

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் 10 ஆண்டாக வழங்கப்படாத ‘கலைஞர் தமிழ் விருது’! தேர்வுக்குழுவும் இதுவரை அமைக்கப்படவில்லை! -ஆர்.ஷபிமுன்னா,இந்துதமிழ்திசை.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் 10 ஆண்டாக வழங்கப்படாத ‘கலைஞர் தமிழ் விருது’!
 தேர்வுக்குழுவும் இதுவரை அமைக்கப்படவில்லை!
 -ஆர்.ஷபிமுன்னா,
இந்துதமிழ்திசை
 -------------------------------------------

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு கடந்த 2008-ம் ஆண்டு, ஜூன் 30-ல் ரூ.1 கோடியை வைப்புத் தொகையாக வழங்கினார். இதன்மூலம் ஆண்டுதோறும் ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது’ வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இவ்விருது, ரூ.10 லட்சம் பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழ், ஐம்பொன்னால் ஆன திருவள்ளுவர் சிலை, மு.கருணாநிதி உருவம் பொறித்த தங்கப்பதக்கம் ஆகியவற்றைக் கொண்டது. தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம், மொழிபெயர்ப்பு, நுண்கலை ஆகிய துறைகளில் செம்மொழித் தமிழாய்வுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ள ஆய்வாளருக்கோ, ஆய்வுக் குழுவின ருக்கோ இந்த விருது வழங்கப்படும்.

2009-ம் ஆண்டுக்கான முதல் விருதை பின்லாந்து அறிஞரான அஸ்கோ பர்போலோவுக்கு கோயம்புத்தூரில் 2010-ல் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் வழங்கினார். இதற்கு பின் 2011 முதல்2016 வரையிலான ஆண்டுகளுக்கான விருது அறிவிப்பு 2017-ல்வெளியானது. கடைசியாக 2020ஏப்ரல் வரையிலான விருது அறிவிப்பும் வெளியிடப்பட்டது. ஆனால் இவற்றுக்கு பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் வட்டா ரத்தில் கூறும்போது, “பெற்ற விண்ணப்பங்களை பரிசீலித்து விருதாளர்களை தேர்வு செய்ய அதிமுக அரசு அக்கறை காட்டவில்லை. அதில் தேவையின்றி மத்திய அரசின் பெயர் இழுக்கப்படுகிறது. ஏனெனில், கலைஞர் விருதுக்கும் மத்திய அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று தெரிவித்தனர்.

இதை அளிப்பதில் தாமதம் ஏற்படுவதற்கு அந்நிறுவனத்தில் நிரந்தர இயக்குநர் இல்லாதது காரணமாகக் கூறப்பட்டது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜூன் மாதம் நிரந்தர இயக்குநர் பதவியில் அமர்த்தப்பட்ட பிறகும் விருது வழங்கப்படவில்லை.

குடியரசுத் தலைவர் விருதும்..

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில், தொல்காப்பியர் விருது, குறள்பீடம் விருது, இளம் அறிஞர் விருது ஆகிய 3 ‘செம்மொழி விருதுகள்’ குடியரசுத் தலைவரால் ஆண்டுதோறும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த விருது களும் கடந்த 2016 முதல் 4 ஆண்டுகளாக மத்திய அரசால் வழங்கப்படாமல் உள்ளன. இந்த விருதுகளுக்கான தேர்வுக்குழுவின் தலைவராக முன்னாள் தலைமைதேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி 3 ஆண்டுகளுக்கு முன் நியமிக்கப்பட்டார். இவரது தலைமையிலான குழு தேர்வுசெய்து அனுப்பிய விருதாளர்கள் மீது மத்திய அரசு இன்னும் முடிவெடுக்காமல் உள்ளது.

🔴2020-21 நிதியாண்டு - பழைய முறை & புதிய முறை வருமானவரி தோராய கணக்கீடு - CPS & TPF ஆசிரியர்களுக்கான தனித்தனி எக்ஸெல் படிவங்கள்... [ Tentative Incometax statement for FY 2020-21 (AY 2021-22) in Old Regime & New Regime in Excel Sheets for TPF & CPS Teachers]...

🔴2020-21 நிதியாண்டு - பழைய முறை & புதிய முறை வருமானவரி தோராய கணக்கீடு - CPS & TPF ஆசிரியர்களுக்கான தனித்தனி எக்ஸெல் படிவங்கள்... [ Tentative Incometax statement for FY 2020-21 (AY 2021-22) in Old Regime & New Regime in Excel Sheets for TPF & CPS Teachers]...         
                  
             Old regime &New regime in excell sheets for TPF Teachers.                  
                  
click here.1

Old regime &New regime in excell sheets for CPS  Teachers. 

*🌻கல்வி உதவித் தொகை 2020-2021 – புதுப்பித்தல் ( Renewal ) - Minority Scholarship Date Extension upto 31.12.2020 - Instruction Published*

*🌻கல்வி உதவித் தொகை 2020-2021 – புதுப்பித்தல் ( Renewal ) - Minority Scholarship Date Extension upto 31.12.2020 - Instruction Published*

*🏥 NHIS - G.O Ms.No. 441 Dt: December 03, 2020 - MEDICAL AID - New Health Insurance Scheme, 2018 for the Pensioners (including spouse) /Family Pensioners – Empanelment of Accredited Hospitals – Approval of 133 additional hospitals and inclusion of Additional speciality in 29 hospitals based on the recommendations of the Accreditation Committee – Notified – Orders – Issued.*

*🏥 NHIS - G.O Ms.No. 441 Dt: December 03, 2020 - MEDICAL AID - New Health Insurance Scheme, 2018 for the Pensioners (including spouse) /Family Pensioners – Empanelment of Accredited Hospitals – Approval of 133 additional hospitals and inclusion of Additional speciality in 29 hospitals based on the recommendations of the Accreditation Committee – Notified – Orders – Issued.*
அரசாணை மற்றும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளின் பட்டியலைப் பார்க்க இங்கே கிளிக் செய்க.

*🌻TN-EMIS - New Update Available Now - Direct Link.*

*EMIS FLASH NEWS*

*TN -EMIS NEW UPDATE* AVAILABLE UPDATE NOW

*DATE 05.12.2020*

*TN -EMIS New Update direct link* Available -update Now

TN-EMIS ஐ Update செய்ய இங்கே கிளிக் செய்க.

சனி, 5 டிசம்பர், 2020

🖥️வருமானவரி 2020-21 ஆம் நிதியாண்டுக்கான வழிகாட்டுதல் குறிப்பு-பழைய வருமானவரி முறை-புதிய வருமானவரி முறை ஓர் ஒப்பீடு.மற்றும் 2020-21 ஆம் நிதியாண்டிற்கான பழைய வருமானவரி முறையிலான படிவம்&புதிய வருமானவரி முறையிலான படிவங்கள்.*

*🖥️வருமானவரி 2020-21 ஆம் ஆண்டுக்கான வழிகாட்டுதல் குறிப்பு-பழைய வருமானவரி முறை-புதிய வருமானவரி முறை  ஓர் ஒப்பீடு.மற்றும் 2020-21 ஆம் நிதியாண்டிற்கான பழைய வருமானவரி முறையிலான படிவம்&புதிய வருமானவரி முறையிலான படிவங்கள்.*


வருமானவரி 2020-21 ஆம் ஆண்டுக்கான SBI -இன் வழிகாட்டுதல் குறிப்புகளைப் படிக்க இங்கே கிளிக் செய்க.


பழைய வருமானவரி முறை 
மற்றும் புதிய வருமானவரி முறை வவேறுபாடு தொடர்புடைய குறிப்புகளைப் படிக்க இங்கே கிளிக் செய்க.

*2020-21 ஆம் நிதியாண்டிற்கான பழைய வருமானவரிப் படிவத்தைப் பார்க்க இங்கே கிளிக் செய்க.(4 பக்கம்)


2020-21 ஆம் நிதியாண்டிற்கான புதிய வருமானவரிப் படிவத்தைப் பார்க்க இங்கே கிளிக் செய்க.(2 பக்கம்)

பல்கலைக்கழகமாக மாறும் இந்திய மொழிகள் மத்திய நிறுவனம்... இந்தியில் பெயர் மாற்றம்.

பல்கலைக்கழகமாக மாறும் இந்திய மொழிகள் மத்திய நிறுவனம்... இந்தியில் பெயர் மாற்றம்
4 December 2020 

புதுதில்லி:
மைசூருவில் உள்ள இந்திய மொழிகள் மத்திய நிறுவனம் மத்தியப் பல்கலைக்கழகமாக மேம்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இந்திய மொழிகள் ஆய்வுக்காக மைசூருவில் 1969-ல் இந்தியமொழிகள் மத்திய நிறுவனம் (சிஐஐஎல்)அமைக்கப்பட்டது. மத்திய அரசின் இந்தி மற்றும்ஆங்கில மொழி வளர்ச்சிக்கான கல்வி நிறுவனங்கள் மத்திய பல்கலைக்கழகங்களாக மேம்படுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து மொழிகள் நிறுவனத்தை பாரதிய பாஷா விஷ்வ வித்யாலயா (பிபிவி) என்றுஇந்தியில் பெயர் மாற்றி, மத்திய பல்கலைக்கழகமாக மாற்றவும் செம்மொழி அந்தஸ்து பெற்ற மொழிகளை இதன் துறைகளாக இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா ஆகிய மொழிகளும் செம்மொழி அந்தஸ்து பெற்றாலும் தமிழைப் போல அவற்றுக்கு தனி ஆய்வு நிறுவனம் அமைக்கப்படாதது இதற்கு சாதகமாக உள்ளது.தமிழுக்கு, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. 13 ஆண்டுகளுக்கு பிறகு இதற்கு நிரந்தர இயக்குநர், சில மாதங்களுக்கு முன்புதான் அமர்த்தப்பட்டார். இந்நிலையில் மற்ற மொழிகளுடன் தமிழும் இணைக்கப்பட்டால் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனமும் பிபிவி உடன் இணைக்கப்பட வாய்ப்புள்ளது.செம்மொழிகளை புதிய மத்திய பல் கலைக்கழகமான பிபிவி உடன்இணைப்பதுஉள்ளிட்ட பல்வேறு கூறுகளை ஆய்வு செய்ய 11 அறிஞர்கள் கொண்ட ஒரு குழுவை மத்திய கல்வி அமைச்சகத்தின் மொழிகள் பிரிவு அமைத்துள்ளது.இக்குழுவுக்கு தமிழரான முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபாலசாமி தலைமை ஏற்றுள்ளார். அடுத்த 3 மாதங்களில் அறிக்கை அளிக்குமாறு இவரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மொழிபெயர்ப்பாளர்கள் தட்டுப்பாடு
இதுகுறித்து என்.கோபாலசாமி கூறுகையில், தற்போது இந்திய மொழிகளை மொழிபெயர்ப்பதில் வல்லுநர்கள் தட்டுப்பாடு உள்ளது. இது கவனிக்கப்படாமலேயே உள்ளது. இதை முக்கிய குறிக்கோளாக்கி அனைத்து மொழிகளையும் வளர்க்கும் வகையில் சிஐஐஎல் நிறுவனத்தை மத்தியப் பல்கலைக்கழகமாக மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். ஏற்கெனவே செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையுடன் இணைக்கும் முயற்சிக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதைத்தொடர்ந்து அந்த முயற்சி கைவிடப்பட்டது.

சமஸ்கிருதத்தைச் சீராட்டும் மத்திய அரசு, செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுவனத்தை, மைசூருவில் உள்ள பாரதிய பாஷா விஷ்வ வித்யாலயாவுடன் இணைத்துச் சுருக்குவது கண்டனத்திற்குரியது. உடனடியாக இந்த முடிவை மத்திய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும்!-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

சமஸ்கிருதத்தைச் சீராட்டும் மத்திய அரசு, செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுவனத்தை, மைசூருவில் உள்ள பாரதிய பாஷா விஷ்வ வித்யாலயாவுடன் இணைத்துச் சுருக்குவது கண்டனத்திற்குரியது. உடனடியாக இந்த முடிவை மத்திய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும்!

முதலமைச்சர் திரு. பழனிசாமி அனைத்துப் பிரச்சினைகளிலும் அமைதி காப்பது போல், பாஜக அரசின்  இந்த முடிவையும் ஆமோதிக்காமல், அதனைக் கைவிட வலியுறுத்தி உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.

மத்திய கல்வி அமைச்சகத்தில் காலிப்பணியிடங்கள் !தகவல் உரிமைச்சட்டப்பதில்கள்!பணியாளர் இல்லாமல் முடங்கி கிடக்கும் மத்திய கல்வி அமைச்சகம் !

மத்திய கல்வி அமைச்சகத்தில் காலிப்பணியிடங்கள் !
தகவல் உரிமைச்சட்டப்பதில்கள்!


பணியாளர் இல்லாமல் முடங்கி கிடக்கும் மத்திய கல்வி அமைச்சகம் ! 

  தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக சில தகவல்களை பெற மத்திய கல்வி அமைச்சகத்திற்கு மனு அனுப்பியிருந்தேன்.

 அதில் கிடைத்த பதில்களை இதனுடன் இணைத்துள்ளேன் ! 

 மத்தியகல்வி அமைச்சர் அலுவலகத்தில் கூட காலிப்பணியிடங்களை நிரப்பாமல் மத்திய அரசு மெத்தனமாக இருப்பது கல்வி வளர்ச்சியில் மத்திய அரசின் உண்மையான அக்கறை தெரியவருகிறது ! 

  தற்போது பணியாற்றிவருபவர்களின் எண்ணிக்கை 754 

 காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 326 

 

 நாடு முழுவதும் உள்ள IIT,IIM,IISE,மத்தியபல்கலைகழகங்கள் என அனைத்து நிறுவனங்களின் நிலையும் இது தான் ! 

 கல்வி வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கை எடுக்காமல் கொள்கையை அறிவிப்பதும்,மேடையில் முழங்குவதும் மக்களை ஏமாற்றும் செயல் ! 

 மத்திய அரசிற்கு உண்மையான அக்கறை இருக்குமானால் மத்திய அரசின் கல்வித்துறை,கல்வி நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் அனைத்து பணியாளர்கள் மற்றும் பேராசிரியர்களையும் உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் !

 இதை செய்யாமல் புதியகல்வி கொள்கையை அமுல்படுத்தி கல்வியில் மாற்றம் செய்வோம் என கூச்சலிடுவது எந்த பலனையும் தராது ! 

 ஏற்கனவே உள்ள கல்வி நிறுவனங்களை நிர்வாகம் செய்யும் அமைச்சக அதிகாரிகள் பற்றாகுறை உள்ள நிலையில் அனைத்து அதிகாரங்களையும் மத்தியில் சொற்பொழிவில் எதையும் முறையாக கவனிக்க இயலாமல் நிர்வாக சீர்குழைவு தான் ஏற்படும் ! 

 தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள் ! 

 ஆத்த மாட்டாதவன் கையில் ( .. )58 அறிவாளாம் ! 

 மத்தியகல்வி அமைச்சகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பணியாளர்கள் மிகக்குறைந்த எண்ணிக்கையில் இருப்பது வியப்பளிக்கிறது ! 

 மத்திய கல்விதுறை பதிலை இதனுடன் இணைத்துள்ளேன்.

வே.ஈசுவரன், மதிமுக.