ஞாயிறு, 19 நவம்பர், 2017

2017 உலக அழகியாக இந்தியப் பெண் தேர்வு!


2017-ம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி சீனாவில் நடைபெற்றது. இதன் இறுதிச்சுற்றுப் போட்டி  நடத்தப்பட்டது.

இதில், இந்தியாவைச் சேர்ந்த மானுஷி ஷில்லார் (20 வயது) 2017-ம் ஆண்டுக்கான உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டார். ஹரியாணாவைச் சேர்ந்த மானுஷி மருத்துவ மாணவி ஆவார்.

108 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களுக்கு மத்தியில் அவர் இந்தப் பட்டத்தை வென்றுள்ளார். இம்மகுடம் சூடும் 6-வது இந்தியப் பெண் என்ற பெறுமையும் பெற்றார். இதையடுத்து 2016-ம் ஆண்டு உலக அழகி ஸ்டெஃபனி டெல் வாலே அவருக்கு மகுடம் சூட்டினார்.

அதோடு 67-ஆவது உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். இந்தியாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராய் முதன்முறையாக பட்டம் வென்றவர் ஆவார். பின்னர் பிரியங்கா சோப்ரா, டயானா ஹெய்டன் உள்ளிட்டவர்கள் இப்பட்டம் வென்றுள்ளனர்.

இதுகுறித்து மானுஷி கூறியதாவது:

சிறுவயது முதலே உலக அழகிப் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. ஆனால், அது நடைபெறும் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. இந்த தருணத்தை எனது வாழ்நாள் முழுவதும் நான் நிச்சயம் மறக்க மாட்டேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக