திங்கள், 4 டிசம்பர், 2017

நாம் பயன்படுத்தும் பல சேவைகளை ஆதார் எண்ணுடன் டிசம்பர் 31-க்குள் இணைக்க வேண்டும்...


நாம் பயன்படுத்தும் பல சேவைகளை டிசம்பர் 31-க்குள் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்.

எந்தச் சேவைகளை எல்லாம் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும்மற்றும் இணைக்கவில்லை என்றால் என்ன ஆகும் என்ற விவரங்களை இங்கு காண்போம்...

பான்கார்டு: 

பான்கார்டுடன் வருமானவரி இணையதளத்தில் ஆதார் எண்ணை டிசம்பர் 31-க்குள் இணைக்க வேண்டும். ஒருவேலை இணைப்பினை செய்யவில்லை என்றால் வருமான வரி தாக்கல் செய்ய முடியாது. வருமான வரி தாக்கல் செய்துள்ள விவரங்கள் செயல்படுத்தப்படாது.

கிரெடிட் கார்டுகள்:

 கிரெடிட் கார்டு சேவைகளைப் பயன்படுத்தி வருபவர்கள் தங்களது கிரெடிட் கார்டுகளை 2017 டிசம்பர் 31-க்குள் ஆதார்எண்ணுடன் இணைக்க வேண்டும். இல்லை என்றால் உங்களது கிரெட்ட் கார்டு சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படும்.

காப்பீடு திட்டங்கள்:

 காப்பீடு திட்டங்களில் முதலீடுசெய்துள்ளவர்களும் 2017 டிசம்பர் 31-க்குள் ஆதார் எண்ணுடன் பாலிசியை இணைக்க வேண்டும். இல்லை என்றால் தேவைப்படும் போது பாலிசியை அணுக முடியாது.

மியூச்சுவல் ஃபண்டுகள் / பங்குச் சந்தை:

 பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வருபவர்கள் 2017 டிசம்பர் 31-க்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இல்லை என்றால் முதலீடுகளைத் தொடர முடியாது.

வங்கி கணக்கு:

 வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் அதனுடன் 2017 டிசம்பர் 31-க்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இல்லை என்றால் கணக்கு செயல்படாது.

பிபிஎப் / கிசான் விகாஸ் பத்ரா போன்ற சிறு சேமிப்புத் திட்டங்கள்:

 பிபிஎப், கிசான் விகாஸ் பத்ரா, தேசிய சேமிப்புப் பத்திரம், சுகன்யா சம்ரிதி யோஜனா போன்ற சிறு சேமிப்பு திட்டங்களிலும் ஆதார் எண் இணைப்பினை செய்ய வேண்டும். இல்லை என்றால் முதலீடுகளைத் தொடர முடியாது.

எல்பிஜி மற்றும் பொது விநியோக திட்டங்கள்:

 எல்பிஜி மானியம் மற்றும் பொது விநியோக திட்டங்களின் நன்மைகளைத் தொடர்ந்து பெற 2017 டிசம்பர் மாதத்திற்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இல்லை என்றால் மானியம் போன்றவை கிடைக்காது.

மொபைல் எண்:

 மொபைல் எண் பயன்படுத்தி வருபவர்கள் அனைவரும் 2018 பிப்ரவரி 6-ம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இல்லை என்றால் சிம் கார்டிற்கான சேவைகள் துண்டிக்கப்படும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக