ஞாயிறு, 24 டிசம்பர், 2017

ஸ்டேட் வங்கிக்கு ஓய்வூதியர்கள் கண்டனம்...


சென்னை, டிச. 23: -

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் நெ.இல.சீதரன், பொதுச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழக அரசு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 8வது ஊதிய மாற்றம் அளித்து உத்தரவிட்டது. அதில் 21 மாத நிலுவை மறுக்கப்பட்டு, ஒருமாத ஊதிய நிலுவையும் ஓய்வூதிய திருத்தமும் வெளியிட்டும் இதுவரை ஸ்டேட் வங்கி ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வழங்காமல் உள்ளது. இதர வங்கிகளில் கடந்த மாதமே ஒரு மாத ஊதிய நிலுவையும் திருத்திய ஓய்வூதியத்தையும் வழங்கி உள்ளன.எனவே, ஸ்டேட் வங்கி தன்னிடம் ஓய்வூதியம் பெறுகிறவர்களுக்கு இம்மாதத்திற்குள் திருத்திய ஓய்வூதியம், ஒரு மாத நிலுவையை அளிக்காவிட்டால், அடுத்த மாதம் வங்கியின் தலைமையிடம் முன்பு போராட்டம் நடைபெறும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக