வெள்ளி, 2 மார்ச், 2018

ஆப்பிரிக்க குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு 2030க்கு பின்னும் தொடரும்...


வரும் 2030ஆம் ஆண்டுக்குள் ஆப்பிரிக்க குழந்தைகள் மத்தியில் நிலவும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க வேண்டும் என்று ஐ.நாவின் நிலைபேண் வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goals) திட்டத்தின்கீழ் வைத்திருக்கும் இலக்கை அடைய முடியாது என்பது குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் கல்வி தொடர்பாக ஆப்பிரிக்க நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

'நேச்சர்' சஞ்சிகையில் பதிப்பிடப்பட்டுள்ள இந்த இரு ஆய்வுகளிலும், 2000 முதல் 2015 வரை 51 ஆப்பிரிக்க நாடுகளில் குழந்தை வளர்ச்சி விகிதம் மற்றும் மகப்பேறு வயதுடைய பெண்கள் அடைந்திருக்கும் கல்வி ஆகியவை குறித்த தரவுகள் திரட்டப்பட்டன.

மேற்கண்ட இரு விடயங்கள் குறித்தும் ஒவ்வொரு தனிப்பட்ட கிராமத்தின் புள்ளிவிவரங்களையும் தெளிவாக விளக்கும் வரைபடங்களை வெளியிட்டுள்ள இந்த ஆய்வுகள் மூலம் அனைத்து ஆப்பிரிக்க நாடுகளிலும் குழந்தைகளின் உடல் நலனில் முன்னேற்றம் ஏற்படும் குறைந்தது ஒரு பிராந்தியமாவது இருப்பது தெரியவந்துள்ளது.
நன்றி:பிபிசி தமிழ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக