புதன், 28 மார்ச், 2018

மார்ச் 29-31 வரை வருமான வரித்துறை அலுவலகங்கள் திறந்திருக்கும்...

வருமான வரி செலுத்துவோருக்கு வசதியாக வரும் மார்ச் 29ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை வருமான வரி அலுவலகங்கள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

▪2017-2018ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வரும் மார்ச் 31ஆம் தேதி கடைசிநாளாகும். ஆனால், மகாவீர் ஜெயந்தியால் 29ஆம் தேதியும், புனித வெள்ளியால் 30ஆம் தேதியும் அரசு விடுமுறை நாளாகும். 

▪அதேபோல், ஆண்டு கணக்கு முடிக்கும் நாளான மார்ச் 31ஆம் தேதியும் அரசு விடுமுறை என்பதால், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தாமதம் ஏற்படும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், வரும் 29ஆம் தேதி முதல்31ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து வருமான வரித்துறை அலுவலகங்களும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக