ஞாயிறு, 25 மார்ச், 2018

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மே 8ம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம்~ ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு…

மே-8ம்  தேதி கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ - ஜியோ அறிவித்துள்ளது. 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கடந்த 7 ஆண்டுகளாக பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் தேதி, உயர் நீதிமன்ற மதுரை கிளை, ஜாக்டோ - ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்த தடைவிதித்தது. தமிழக தலைமை செயலாளர் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்னைக்கு சுமூக தீர்வு காண அறிவுறுத்தியது. ஆனால் அரசு அதை நிறைவேற்றவில்லை.

இந்நிலையில் 4 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மாவட்ட தலைநகரங்களில்  பேரணியாக சென்றனர்.

 பேரணியில் ,
புதிய பென்சன் திட்டம் ரத்து, இடைநிலை  ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை உடனே களைய வேண்டும்,
தொகுப்பூதியத்தில் இருந்து காலமுறை ஊதியம் வழங்க  வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், மே 8ம் தேதி கோட்டை முற்றுகை  போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக