செவ்வாய், 15 மே, 2018

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பொதுச் செயலாளர் பாவலர் அவர்கள், தலைவர் தியோடர் ராபின்சன், பொருளாளர் அம்பை கணேசன், விழுப்புரம் சின்னசாமி ஆகியோர் ஒரு நபர் குழு தலைவர் திரு.சித்திக் அவர்களை சந்தித்து (13.05.2018) அறிக்கையை சமர்பித்தல்...

வணக்கம்.  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பாக மன்ற பொதுச் செயலாளர் பாவலர் க.மீனாட்சிசுந்தரம் அவர்கள், தலைவர் தியோடர் ராபின்சன், பொருளாளர் அம்பை கணேசன், விழுப்புரம் சின்னசாமி ஆகியோர் ஒரு நபர் குழு தலைவர் திரு.சித்திக் அவர்களை இன்று 13.05.2018 சந்தித்து அறிக்கையை சமர்பித்து தெளிவாக எடுத்துரைத்தனர். 

இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைதல், 2009மற்றும் 2012 பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் ஊதிய குறைவினை களைதல், தனிஊதியம் 2000 க்கு சலுகைகளை அளித்தல்,அரசு ஊழியர்கள் பல பிரிவினருக்கு உள்ள முரண்பாடுகளை களைதல் போன்ற பல்வேறு கோரிக்கை குறித்து தெளிவு படுத்தப்பட்டது. மிகவும் கவனமுடன் கேட்டு புரிந்து கொண்ட திரு. சித்திக் அவர்கள் மகிழ்சியுடன் மீண்டும் உங்களை சந்திக்கின்றேன். இந்த சந்திப்பு பயன் உள்ளதாக அமைந்துள்ளது என மகிழ்வுடன் தெரிவித்தார். உடன் குழுவின் இணை செயலாளர் திரு துளசிராம் அவர்கள் இருந்தார்கள். 

அன்புடன்  திரு.க.மீனாட்சிசந்தரம் பொதுச்செயலாளர். ஆசிரியர்மன்றம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக