செவ்வாய், 15 மே, 2018

ஆசிரியர் மன்றம், நாமகிரிப்பேட்டை ~ நீதிகேட்டு நடைபயணம் ~ ஒத்திவைக்கப்படுகிறது...

ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம்.
நாமகிரிப்பேட்டை ஒன்றிய ஆசிரியர் களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி எதிர்வரும் 15.05.18அன்று முதல் 3 நாட்கள் நீதிகேட்டு நடை பயணம் மேற்கொள்வதென்றும்,17.05.18 பிற்பகல் நாமக்கல் மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடும்,காத்திருப்புப்போராட்டமும் மேற்கொள்வதென 
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமகிரிப்பேட்டை ஒன்றியக்கிளை முடிவாற்றியது.

இப்போராட்டத்திற்கான  எல்லாவிதமான தொடர் நடவடிக்கைகளையும் மாவட்டச்செயலாளர் திருமுருகசெல்வராசனின் வழிகாட்டுதல்களுடன் ஒன்றியப்பொறுப்பாளர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில்.(14.05.18)பிற்பகல் 04.20மணியளவில் ஒன்றிய உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் அவர்கள்
ஒன்றியப்பொறுப்பாளர்களை அழைத்து கடிதநகல் அளித்துஎதிர்காலங்களில் நிர்வாகப்பணிகளில்  தேக்கநிலை இல்லாது நிர்வாகச்செயல்பாடுகள் இருக்குமென தெரிவித்து உள்ளார்கள்.

மேற்கண்டவற்றை எல்லாம் கவனமுடன்பரிசீலித்து(15.05.18-செவ்வாய்)முற்பகல் முதல் மேற்கொள்ளவிருந்த நீதிகேட்டு
நெடும்பயணம் ஒத்திவைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.
_சி.மோகன்குமார்,
ஒன்றியச்செயலாளர்,ஆசிரியர் மன்றம்,
நாமகிரிப்பேட்டை ஒன்றியம்,
நாமக்கல் மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக