வியாழன், 14 ஜூன், 2018

ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைப்பு...



வணக்கம்...
மூன்று நாட்கள் கட்டுக்கோப்புடனும், உணர்வு பூர்வமாகவும் உண்ணாவிரதப்
போராட்டத்தை நடத்திய  ஜாக்டோஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக் குழு உறுப்பினர்களை அழைத்து பேசாத முதல்வரை நேரில் சந்திப்பது என்று உயர்மட்டக்குழு முடிவெடுத்ததனடிப்படையில் (13.06.18) மாலை கோட்டை நோக்கி நாம்  பேரணியாக சென்ற போது காவல்துறை தடுத்து நிறுத்தி கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் அனைவரையும் ரிமாண்ட் செய்ய சொல்லி வாதாடியும், ரிமாண்ட் செய்ய இயலாது என தெரிவிக்கப்பட்டது.

அனைத்து எதிர்கட்சிகளும் நமது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததுடன் போராடும் ஜாக்டோஜியோ நிர்வாகிகளை அழைத்துப்பேச வேண்டும் என்று கோரிக்கை வைத்ததுடன்  சட்ட மன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து வெளிநடப்பு செய்தும் ஆதரவளித்தன . எனவே நமது அடுத்த கட்ட இயக்கத்தை வலுவாக எடுத்துசெல்லும் பொருட்டு மாநில அளவிலான காலவரையற்ற உண்ணாவிரத்தை இந் நிலையில் முடித்து  கொள்வது முடிவு செய்யப்பட்டது , மாவட்டங்களில் நடைபெறும் போராட்டங்களையும் இத்துடன் தற்காலிகமாக ஒத்திவைப்பது என்றும் அடுத்த கட்ட இயக்கம் குறித்து ஜாக்டோஜியோ உயர்மட்டக்குழு கூடி முடிவெடுத்து அறிவிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
                          இவண்.             
                   ஜாக்டோ-ஜியோ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக