வெள்ளி, 8 ஜூன், 2018

தேர்வுத்துறையில் தனி அதிகாரி...


தமிழக பள்ளிக் கல்வித்துறையில், துறை வாரியாக,மாவட்ட வாரியாக, நிர்வாக சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து, தேர்வுத்துறையிலும் நிர்வாக சீர்திருத்தம் துவங்கியுள்ளது. அதன்படி,மாவட்ட வாரியாக தேர்வுத்துறை அதிகாரிகள்நியமிக்கப்பட உள்ளனர்.

மாவட்டக் கல்வி அதிகாரி அந்தஸ்தில் ஒருவரும், கண்காணிப்பாளர் ஒருவரும், பணியாளர்கள் ஐந்து பேரும் நியமிக்கப்படுவர். மாவட்ட வாரியாக, தேர்வுத்துறை அலுவலகம் அமைக்கவும், பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக