திங்கள், 22 அக்டோபர், 2018

ஊராட்சி ஒன்றியப் பள்ளி மாணவர்களுக்கு களபயணம்மூலம் விவசாயம் குறித்த நேரடி பாடம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு விவசாயப் பணிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக திங்கள்கிழமை நேரடியாக வயல் வெளிக்கு அழைத்துச் செல்லப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது.
மூன்றாம் வகுப்பு சமூகவியல் 2 ம் பாடத்தில் உணவின் கதை என்ற தலைப்பிலான பாடத்தில் நெல் சொல்லும் கதை என்ற பாடம் உள்ளது. மேலும் நான்காம் வகுப்பு தமிழ் பாடத்தில் நெல் குறித்த பாடம் வந்துள்ளது. இந்த மாணவர்களை அருகில் உள்ள வயல் வெளிக்கு அழைத்துச் சென்று நேரடியாக பாடங்கள் குறித்து விளக்க தலைமை ஆசிரியர் கோ.ஜெயக்குமார் ஞானராஜ் முடிவு செய்தார்.