திங்கள், 19 நவம்பர், 2018

மத்திய அரசு நிறுவனத்தில் 96 பணியிடங்கள்


மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்று, முற்போக்கு கணினி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனம் (சி.டி.ஏ.சி.)



நொய்டாவில் செயல்படும் இந்த நிறுவனத்தில் தற்போது திட்ட மேலாளர், மேலாளர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 96 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக திட்ட என்ஜினீயர் பணிகளுக்கு 76 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்

புராஜெக்ட் என்ஜினீயர் பணிக்கு 37 வயதுக்கு உட்பட்டவர்களும், திட்டமேலாளர் போன்ற பணிக்கு 50 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
பி.இ., பி.டெக், எம்.இ., எம்.டெக், எல்.எல்.எம்., எல்.எல்.பி., எம்.சி.ஏ., மற்றும் இளநிலை பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 20-11-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். 1-12-2018-ந் தேதியில் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் நடக்க இருக்கிறது. இது பற்றிய விரிவான விவரங்களை https://www.cdac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.