புதன், 22 மே, 2019

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் நாமக்கல் மாவட்டப் பொறுப்பாளர்கள், நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட இணைப்பதிவாளர் திரு.பொ.பாலமுருகன் அவர்களை 22/05/19-புதன் பிற்பகல் 12.00 மணியளவில் சந்தித்தனர்...

இச்சந்திப்பில்,
SN . 241 ,எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச்  சங்கத்தின் வரவு- செலவு சார்ந்தும்,சங்கப்பணம் தவறாக கையாளப்பட்டிருப்பது குறித்தும், வெளிப்படையான விசாரணையும்-ஆய்வும், சட்டப்பூர்வமான விரைவு நடவடிக்கைகளும் மேற்கொள்ள வலியுறுத்தி  மாவட்ட அமைப்பின் சார்பில்  விண்ணப்பம் அளிக்கப்பட்டது. மேற்கண்ட கோரிக்கையை விரைந்து நிறைவேற்றிட வலியுறுத்தி எதிர்வரும் 07.06.2019 (வெள்ளி)அன்று பிற்பகல் 05.00 மணியளவில் நாமக்கல் சரக கூட்டுறவு சங்கங்களின்  துணைப்பதிவாளர் அலுவலகம் முன் #பெருந்திரள்_ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதென முடிவாற்றப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக