திங்கள், 10 ஜூன், 2019

07.06.19 ஆம் நாளைய பெருந்திரள் ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது...

அன்பானவர்களே!வணக்கம்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு    நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட இணைப்பதிவாளர் மற்றும் நாமக்கல் சரக துணைப்பதிவாளர் ஆகியோரிடம்  எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணயச்
சங்க முறைகேடுகள் குறித்து புகார் தெரிவித்தது. 

ஆசிரியர் மன்றத்தின் புகார்களை  ஏற்றுக்கொண்டு நாமக்கல் சரக  கூட்டுறவு துணைப்பதிவாளர்  கூட்டுறவு விதிகளின் படி விசாரணைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது என்று கடிதம் அளித்துள்ளார்.  நாமக்கல் சரக கூட்டுறவு துணைப்பதிவாளரின் நடவடிக்கைகளை பெரிதும் வரவேற்றும்,
விசாரணை நடவடிக்கைகளில் நம்பிக்கைக் கொண்டும்  07.06.19 ஆம் நாளைய பெருந்திரள் ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று கூட்டுறவு துணைப் பதிவாளருக்கு  ஆசிரியர் மன்றம் தெரிவித்துள்ளது.
 இப்பெரும் பணியில் பங்கேற்றோருக்கும்,
பங்களிப்புச் செய்வோருக்கும் ஆசிரியர்மன்றம் நன்றி பாராட்டுகிறது.  
             -முருகசெல்வராசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக