சனி, 16 நவம்பர், 2019

நவம்பர் 16,
வரலாற்றில் இன்று.

தேசிய  பத்திரிகை தினம் இன்று.

நாடு முழுவதும் இன்று தேசிய பத்திரிகை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா நிறுவப்பட்ட தினமான நவம்பர் 16ஆம் தேதி தேசிய பத்திரிகை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஜனாநயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் பத்திரிகைகளின் பணி ஜனநாயக நாட்டில் மிக முக்கியமானது. மக்களின் பிரச்னைகளை சுட்டிக்காட்டுவதோடு மட்டுமின்றி அதற்கு தீர்வு கிடைக்கும் பணிகளையும் பத்திரிகைகள் தொடர்ச்சியாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது.