திங்கள், 18 நவம்பர், 2019

நவம்பர் 18,
வரலாற்றில் இன்று.


சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் தி.ஜானகிராமன் நினைவு தினம் இன்று.

மன்னார்குடி வட்டம் தேவங்குடியில் பிறந்த தி.ஜானகிராமன் (தி.ஜா) அவர்கள். சிறுகதை, நாவல், பயணக்கட்டுரை, மொழிபெயர்ப்பு, நாடகம் என பல துறைகளில் சிறந்து விளங்கியவர்.

பத்து வருடங்கள் பள்ளியாசிரியராக பணியாற்றி,
பின் அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வு பெற்றார். அதன் பின்னர் தமிழின் முதன்மையான இலக்கிய இதழாக விளங்கிய கணையாழி மாத இதழில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

தி.ஜா எழுதிய நாவல்கள் :
மோகமுள்
அமிர்தம்
அம்மா வந்தாள்
மரப்பசு
நளபாகம்
மலர்மஞ்சம்
உயிர்த்தேன்
அன்பே ஆரமுதே
செம்பருத்தி
அடி

சக்தி வைத்தியம் என்ற சிறுகதைத் தொகுப்புக்காக தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றவர். இது தவிர நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைள், கட்டுரைகள், மூன்று நாடகங்கள், பயண நூல்கள். இவர் சமையற்கலையிலும் வல்லவர். இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம் முதலியவற்றிலும் ஈடுபாடு மிக்கவர்.

மன்னைக்கு பெருமை சேர்த்த தலைசிறந்த தமிழ் எழுத்தாளர் இவர்.