திங்கள், 18 நவம்பர், 2019

நவம்பர் 18,
வரலாற்றில் இன்று.

 இந்திய விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளை நினைவு தினம் இன்று.


 வ.உ.சி
வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் எனும் பன்முகத் தன்மை பெற்றிருந்தார்.
இவரது அரசியல் வாழ்க்கை,
உயர்ந்த ஒழுக்கமும், நேர்மையும், ஆற்றலும் நிறைந்ததாக இருந்தது. அவர் அன்பு, தைரியம், வெளிப்படையான குணம் இவற்றை உடையவராக இருந்தார்.
தமிழ் மொழியில் உள்ள அநேக இலக்கியங்களைப் படித்து அவற்றைப் பற்றி கட்டுரைகளையும், செய்யுள்களையும் எழுதியுள்ளார், ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.
விடுதலைப் போராட்டம் குறித்தும் தமிழ் இலக்கியங்கள் குறித்தும் நண்பர்களுடன் விவாதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

 வ.உ.சி. 1892ஆம் ஆண்டு பால கங்காதர திலகர் அவர்களின் ஆற்றல் மிகுந்த, வீரம் செறிந்த எழுத்தால் கவரப்பட்டு திலகரின் சீடரானார்.


வ.உ.சி
இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டதோடு மற்றவர்களையும் பங்கு கொள்ளச் செய்தார். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடினார். அவர்களின் கொடூரமான சட்டங்களைப் பற்றி மக்களிடையே வீர உரையாற்றினார்.

ஆங்கிலேயருக்கு எதிராக கப்பல் கம்பெனியை தொடங்கி கப்பல் போக்குவரத்து ஏற்படுத்திய விளையாட்டு வ.உ.சி
கப்பலோட்டிய தமிழன் என அழைக்கப்படுகிறார். ஆங்கிலேயரால் சிறையில் அடைக்கப்பட்டு பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்.

 வ.உ.சி. 1936ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் நாள் காலமானார்.