சனி, 2 நவம்பர், 2019

*🌷நவம்பர் 2,*
*வரலாற்றில் இன்று.*
------------------------------------------------------
*உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜார்ஜ் பெர்னாட்ஷா நினைவு தினம் இன்று (1950).*


*கேலியும்,கிண்டலும், துள்ளலான நடையழகும் கொண்ட பெர்னார்ட்ஷாவின் நாடகங்கள் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றவை. அவர்* *எழுத்துகள் மட்டுமல்ல, வாழ்ந்த வாழ்க்கையும் கூட வண்ணமயமானது*
*தான். உலக இலக்கியத்தின் உச்சம் என்றால், அது நோபல் பரிசுதான். பெர்னாட்ஷா ஆங்கில இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில்* *ஒருவராக, ஷேக்ஸ்பியருக்கு இணையாகப் போற்றப்படுபவர். அவரது நாடகங்கள்,* *ஆய்வுப்படைப்புகள், சிந்தனைகள் அனைத்தும், இன்றைய வாசகர்களாலும் விரும்பிப் படிக்கப்படுபவை. இத்தனைக்கும்,* *பெர்னாட்ஷா எழுதிய விஷயங்கள் ஒவ்வொன்றும், நெருப்புப்போல, வரிக்கு வரி நகைச்சுவை பொங்கும் எழுத்து. ஆனால் சிரித்து முடித்த அடுத்த வினநாடி,* *அதன் பின்னணியில் இருக்கும் நிஜம் நெஞ்சைச் சுடும். சமூகத்துக்காக ஏதாவது உடனே செய்தாகவேண்டும் என்கிற வேகம் உண்டாகிவிடும். நோபல் பரிசு, ஆஸ்கர் பரிசு இரண்டையும் வென்ற எழுத்தாளர் பெர்னார்ட்ஷா தவிர உலகில் வேறு யாரும்* *இல்லை. உலகப் புகழ் பெற்ற உன்னதப்*
*படைப்பாளியின் உத்வேகமூட்டும் வாழ்க்கை அவருடையது.*

*முட்டாள்கள் செய்யும் ஒரே புத்திசாலித்தனம் காதல்..!*

*புத்திசாலிகள் செய்யும் ஒரே முட்டாள்தனம் காதல்..!*

 *ஜார்ஜ் பெர்னாட்ஷா.*