சனி, 2 நவம்பர், 2019

*🌷நவம்பர் 2,*
*வரலாற்றில் இன்று.*
------------------------------------------------------
*சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு விண்வெளி  வீரர்கள் முதன்முதலில் சென்ற தினம் இன்று (2000).*

 *விண்வெளி வீரர்கள் அங்கு தங்கி உயிரியல், இயற்பியல், வானவியல், வானிலை மற்றும் பிற துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறனர்.*

 *2000ஆம் ஆண்டு  நவம்பர் 2ஆம் தேதி தான் முதன்முதலில் பில் ஷெப்பர்ட், யூரி மற்றும் செர்ஜி ஆகிய மூன்று விண்வெளி வீரர்களும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றது குறிப்பிடத்தக்கது.*

*17 நாடுகளில் இருந்து 220 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றுள்ளனர்.*

 *சர்வதேச விண்வெளி நிலையம் இதுவரை பூமியை 87,600 முறை சுற்றிவந்துள்ளது.*

*ஒன்பது நாடுகளில் இருந்து 122 வீரர்கள் spacewalks என்று கூறப்படும் விண்வெளி நிலையத்திற்கு வெளியே வந்து மிதந்தபடி வேலையில் ஈடுபட்டுள்ளனர்.*

*நீண்ட நாள்கள் விண்வெளியில் இருப்பதால் ஏற்படும்* *விளைவுகளை அறிந்துக்*
*கொள்வதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்காட் கெல்லி 522 நாட்களாக அங்கு தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.*

 *உள்பகுதியில் படுக்கை அறையுடன் கூடிய 6 வீடுகள் அளவிற்கு மனிதர்கள் வசிப்பதற்கான இடம் உள்ளது.*

*இதன் எடை 454,000 கிலோ கிராம். 3.3 மில்லியன் மென்பொருள் குறியீடு கோடுகள் மூலம் இயக்கப்படுகிறது*