புதன், 6 நவம்பர், 2019

நவம்பர் 6,
வரலாற்றில் இன்று.

தென்னாபிரிக்காவில் காந்தி,
இந்திய சுரங்கத் தொழிலாளர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட தினம் இன்று (1913).

இந்திய ஒப்பந்தத் தொழிலாளர்கள் மீதான 3 பவுண்ட் வரி, இந்து மற்றும் முஸ்லிம் திருணங்களை செல்லாததாக்கும் அரசு உத்தரவு ஆகியவற்றுக்கு எதிராக, 1913இல் காந்தி தனது ஆதரவாளர்களுடன் நடைப்பயணம் தொடங்கினார். இவர்கள் நடால் மாகாண எல்லையை கடந்து டிரான்ஸ்வால் மாகாண எல்லைக்குள் நுழைந்த போது, காந்தியும் உடன் சென்ற அனைவரும் கைது செய்யப்பட்டு வாக்ஸ்ரஸ்ட் சிறையில் அடைக்கப்பட்டனர்