புதன், 27 நவம்பர், 2019

அன்பானவர்களே!வணக்கம்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி  ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பின் சார்பில் பரமத்தி மற்றும் கபிலர்மலை ஒன்றியங்களின் பள்ளித் தூய்மைப்பணியாளர்களுக்கான ஊதியம் மற்றும் பராமரிப்புத் தொகையினை வலியுறுத்தி  நாமக்கல் மாவட்ட ஊரகவளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் இன்று(27.11.19-புதன்)பிற்பகல் 05.30மணியளவில் கோரிக்கை விண்ணப்பம் படைக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பில் மாவட்டச்செயலாளர் முருகசெல்வராசன்,மாவட்டத் துணைச்செயலாளர் மெ.சங்கர்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பெ.சதீசு,மாவட்ட தணிக்கைக்குழு உறுப்பினர் த.தண்டபானி, பரமத்தி ஒன்றியத் தலைவர்.நா.ரங்கசாமி,ஒன்றியச் செயலாளர் க.சேகர்,ஒன்றியப்பொருளாளர் கு.பத்மாவதி, நாமக்கல் ஒன்றியச்செயலாளர் அ.செயக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். இச்சந்திப்பு மேற்கண்ட பரமத்தி மற்றும் கபிலர்மலை ஒன்றியப்
பள்ளிகளின் தூய்மையை,
சுகாதாரத்தை பேணிப் பாதுகாத்து  பராமரித்திடுவதற்கு பேருதவியாக அமைந்திடும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நம்பிக்கைக் கொள்கிறது.
-முருகசெல்வராசன்.