சனி, 28 டிசம்பர், 2019

டிசம்பர் 28,
வரலாற்றில் இன்று.

இந்திய தேசிய காங்கிரஸ் உருவான தினம் இன்று(1885).

 ஆலன் ஆக்டேவியன் ஹூயும் (Octavian Hume) தலைமையில் 72 முக்கிய பிரதிநிதிகள் சேர்ந்து காங்கிரசை தோற்றுவித்தார்கள் .
மேட்டுக்குடியினர் மற்றும் படித்த இந்தியர்களின் குரலாகவே காங்கிரஸ் ஆரம்பத்தில் இயங்கியது .
டஃபரின் என்கிற அப்பொழுதைய வைஸ்ராயின் அனுமதியோடு இது உருவானது. முதலில் வேண்டுகோள்கள் , விண்ணப்பங்கள் ,
தீர்மானங்கள் என்றே கட்சி இயங்கிக் கொண்டிருந்தது . மிதவாத தன்மையோடு அக்கட்சி இருந்தபொழுது திலகர் புதுரத்தம் பாய்ச்சினார் . ஆனால் அவர் இந்து மதம் சார்ந்து தன் செயல்பாடுகளை முன்னெடுத்தது மற்ற மக்களிடம் அச்சத்தை உண்டு பண்ண செய்தது .
வங்கப்பிரிவினைக்கு எதிரான போராட்டத்தை இந்தியா முழுக்க நடத்த வேண்டுமா அல்லது வங்கத்தோடு அதை முடித்துக்கொள்ள வேண்டுமா என்கிற பிரச்சினையில் தீவிரவாதிகள், மிதவாதிகள் என காங்கிரஸ் உடைந்து பின் மீண்டும் இணைந்தார்கள் .