சனி, 28 டிசம்பர், 2019

டிசம்பர் 28, வரலாற்றில் இன்று.

தங்கத்தின் விலை ஒரு பவுன்,
ரூபாய் ஆயிரத்தை தாண்டிய தினம் இன்று(1979).

இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில், தங்கம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையோடும் பின்னிப்
பிணைந்துவிட்டது. ஏழை-எளிய மக்கள், நடுத்தர மக்கள் என்று தொடங்கி, பணக்காரர்கள் வரை எந்த குடும்பத்தில் திருமணம் பேசினாலும், வரதட்சணை வாங்கினாலும், வாங்காவிட்டாலும், கண்டிப்பாக கேட்கும் ஒரு கேள்வி, பெண்ணுக்கு எவ்வளவு நகை போடுவீர்கள்? என்பதுதான். 1979இல் ஆயிரம் ரூபாயை தாண்டியவுடன் தொடர்ந்து ஜெட் வேகத்தில் ஏறியது.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மாறுவதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது தங்கம் மற்றும் பெட்ரோலியப் பொருள்களின் இறக்குமதியே.