வெள்ளி, 20 டிசம்பர், 2019

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்- நாமக்கல் மாவட்ட அமைப்பின் கோரிக்கைகளின் மீது விரைவு நடவடிக்கை- Namakkal collector

அன்பானவர்களே!  வணக்கம்.
நாமக்கல் மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் பணிகள்  சார்ந்து நாமக்கல் மாவட்டத் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகள் மற்றும்
எருமப்பட்டி ஒன்றிய ஆசிரியர்களின் கோரிக்கைகள் ஆகியனவற்றை
14.12.19 அன்று  நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவரிடம்  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு கொண்டுச்சென்றது.

17.12.19 அன்று தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விண்ணப்பம் படைத்தது.

 19.12.19அன்று நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை விண்ணப்பம் அளித்தது.

 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பின்  கோரிக்கைகளின் மீது உரிய விரைவு  நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு மாநிலத்தேர்தல் ஆணையாளர் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் நன்றிக்கும், பாராட்டுதலுக்கு உரியவர்கள் ஆவர்.

தங்களது பணிக்கும் , பதவிக்கும் பொருத்தமான வாக்குச்சாவடி அலுவலர் நியமனம் இதுவரையிலும்  கிடைக்கப் பெறாத ஆசிரியப்பெருமக்கள் ஆசிரியர் மன்றத்தின் ஒன்றியச் செயலாளர்களிடம்  தெரிவியுங்கள்.

நாமக்கல் மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டுச்  சென்று 
 மாவட்ட அமைப்பு 
உரியத்தீர்வுகள் பெற்றுத் தருமென்று தெரிவித்துக் கொள்கிறேன். -முருகசெல்வராசன் & மெ.சங்கர்.