புதன், 15 ஜனவரி, 2020

ஜனவரி 15,
வரலாற்றில் இன்று.

இந்திய ராணுவ தினம் இன்று.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 15 ஆம் தேதி இந்திய ராணுவ தினமாகக் கொண்டாடப்படுகிறது .

 இந்த நாளை ராணுவ தினமாகத் தேர்ந்தெடுத்ததற்கு காரணம்,
 இந்தியாவின் முதல் ராணுவ தளபதியாக ஜெனரல் கே . எம் . கரியப்பா (K.M. Cariappa) 1949 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதிதான் பதவி ஏற்றார்.

அதற்கு முன்புவரை பிரிட்டிஷ்காரர்களே தளபதிகளாக இருந்து வந்தார்கள் .

கரியப்பா ராணுவ வாழ்க்கையில் தனது இறுதி மூச்சு வரை நாட்டிற்காக தன்னலமற்ற சேவை புரிந்தார் . மதச்சார்பின்மை மற்றும் தேசப்பற்றில் மிகவும் உறுதியாக இருந்தார் . ராணுவ தளபதியாகப் பொறுப்பேற்ற பிறகு ஏகாதிபத்திய இந்திய ராணுவத்தை,
 தேசிய இந்திய ராணுவமாக மாற்றும் முக்கிய பணியில் ஈடுபட்டார் .