புதன், 15 ஜனவரி, 2020

ஜனவரி 15,
வரலாற்றில் இன்று.

ஜான் பென்னி குயிக் பிறந்த தினம் இன்று(1841).

முல்லைப்பெரியாறு அணை கட்டிய இவரை, அப்பகுதி மக்கள் கடவுளாக தங்கள் குலதெய்வமாக பார்க்கிறார்கள்.

 நூறாண்டுகள் கடந்தும் மக்கள் மனங்களில் இவர் வாழ்கிறார்.

உலகிலேயே இவர் மட்டும் தான் விவசாயிகளின் வாழ்வில் மண் அள்ளி போட்டு சோறு அள்ளி சாப்பிட வைத்தவர்.
ஆம்... அந்த மண் அணை கட்ட அள்ளிப் போடப்பட்ட மண்.

 அரசாங்க நிதி உதவியை நிறுத்திய போதும் அசராமல்,
தன் மனைவியின் நகைகளை விற்று இவர் கட்டிய அணையால் தான் இன்று பல விவசாயிகளின் மனைவிகள் கழுத்தில் நகைகள் மின்னுகின்றன.

இன்றும் தங்கள் பிள்ளைகளுக்கு அவர் பெயர் வைப்பவர்கள் ஏராளம்.
அவரை நன்றியுடன் நினைவு கூர்வோம்..