சனி, 25 ஜனவரி, 2020

ஜனவரி 25,
வரலாற்றில் இன்று.

தேசிய வாக்காளர் தினம் இன்று.

ஓட்டுரிமை - நமது கடமை

உலகின் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இதற்கு முதுகெலும்பாக விளங்கும் இந்திய தேர்தல் ஆணையம், ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு.

இது 1950 ஜனவரி 25இல் உருவாக்கப்பட்டு, 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை சிறப்பிக்கும் வகையில் 2011 முதல், ஜனவரி 25ஆம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது.

ஓட்டுப்பதிவை அதிகப்படுத்தி, ஓட்டளிப்பதின் முக்கியத்துவத்தை உணர்த்துவது இதன் நோக்கம்.

தேர்தல் ஆணையம் நவீன வளர்ச்சிக்குப் ஏற்ப, ஓட்டளிக்க மின்னணு எந்திரம், அனைவருக்கும் புகைப்பட அடையாள அட்டை, விரைவாக தேர்தல் முடிவுகள் என புதுமைகளை புகுத்தி வருகிறது.

எனவே அனைவரும் ஜனநாயக கடமையை, கடமை தவறாமலும், செம்மையாகவும் நிறைவேற்றுவோம்...!!