புதன், 4 மார்ச், 2020

நாமகிரிப்பேட்டையில் சிறுவிடுப்பு உள்ளிட்ட அனைத்து வகை விடுப்புகளுக்கும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியப்பெருமக்களை மட்டும் குறிவைத்து அலைக்கழிப்பதை,பழிவாங்குவதை கண்டித்திடுக!தடுத்து நிறுத்திடுக!

ஒரு அரசாணை வெளியாகிறது.
இவ்வரசாணைக்கு துறைத்தலைவர் செயல்முறை இடவில்லை.
நாமக்கல் மாவட்ட 
முதன்மை அலுவலர்  துறைத் தலைவரின் செயல்முறையை மேல் நடவடிக்கைக்கு பகிரவில்லை.
நாமகிரிப்பேட்டை வட்டார அலுவலரும்  தனக்குள்ள வானாளவிய செல்வாக்கில் சுற்றறிக்கை வெளியிடவில்லை.

விடுப்பு விண்ணப்பம் தனது பரிந்துரைக்கு வேண்டும் எனும் 
புத்தம் புதிய அவதார புருசர்களும் 
கடித எண் இட்டு கடிதமோ...
சுற்றறிக்கையோ தனது தொகுப்பு பள்ளிகளுக்கு அனுப்பி வைத்திட வில்லை.

ஆனாலும் ,
வெற்று மிரட்டலில்...
அதிகார தோரணையில்.... அத்துமீறலில் ...
பழிவாங்கும் எண்ணத்தில்...
அலைக்கழிக்கும் உள்நோக்கில் ...
மோதலை உருவாக்கி குளிர் காயும் பேராசையில்...
வட்டாரஅலுவலர்களின் ஓரவஞ்சனைச்
செயல்பாடுகள் நீள்கிறது.

இக்
கொடுமையை - 
கொடிய அராசகத்தைக் கண்டித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம்
நாமகிரிப்பேட்டையில் ஆர்ப்பாட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக