ஞாயிறு, 5 ஜூலை, 2020

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட இணையவழி ஒன்றியச்செயலாளர்கள் கூட்ட நிகழ்வுகள் நாள்:05.07.2020

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பின் ஒன்றியச்செயலாளர்கள் கூட்டம் இணையவழியில் இன்று(05.07.2020)பிற்பகல் 06.00மணிக்கு தொடங்கி 08.25 மணிக்கு நிறைவுபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்டத்தலைவர் திரு.க.ஆசைத்தம்பி அவர்கள் தலைமை தாங்கினார்.மாவட்டப்பொருளாளர் திரு.சு.பிரபு முன்னிலை வகித்தார்.
மாநிலச் செயலாளர் திரு.முருகசெல்வராசன் இயக்க உரை ஆற்றினார்.

நாமக்கல் மாவட்டத்தின் 13  ஒன்றியங்களில் இருந்தும் பங்கேற்ற பொறுப்பாளர்களின் கருத்துகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட முடிவுகள்   தீரமிகு போராட்டக்களத்தில் இருக்கும் பரமத்தி ஒன்றிய அமைப்பிற்கு தெரியப்படுத்துவது -வழிகாட்டுவது  என்று இக்கூட்டம்
முடிவாற்றி உள்ளது.

பரமத்தி ஒன்றிய அமைப்பின் அனைத்துவகை போராட்ட நடவடிக்கைகளுக்கும் அனைத்து ஒன்றிய அமைப்புகளும் உறுதிமிக்க  ஆதரவினை நல்குவது என்று இக்கூட்டம் முடிவாற்றி 
உள்ளது.

*(மெ.சங்கர்),*
*மாவட்டச்செயலாளர்.*



























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக