செவ்வாய், 21 ஜூலை, 2020

*வால்வு பொருத்தப்பட்ட N-95 முகக் கவசங்களை பயன்படுத்த வேண்டாம் என மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.*

*😷N-95 மாஸ்க் பயன்படுத்துவதால் பலன் இல்லை.. மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அறிவிப்பு..*


*N-95 மாஸ்க்* *பயன்படுத்துவதால்*
*பலன் இல்லை..*
*மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அறிவிப்பு..*

*கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.*

*இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 11 லட்சத்தைத் தாண்டியுள்ளது.கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தங்களை பாதுகாத்துக்கொள்ள மாஸ்க், சானிடைசரை மக்கள் அதிகம் பயன்படுத்திவருகின்றனர்.*

*அதிலும் குறிப்பாக, வால்வ் பொருத்தப்பட்டுள்ள N95 முக கவசத்தை பொதுமக்கள் பயன்படுத்துவது தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலையில், இதனைப் பொது மக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.*


*இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதாரத்துறை ஒரு கடிதத்தை அனுப்பி உள்ளது.*
*அதில் இந்த N95 வகை மாஸ்க் மூலம் கொரோனா பரவுவது முற்றிலும் தடுக்க இயலாது என்று கூறப்பட்டுள்ளது. எனவே, பருத்தி துணி மூலம் தயாரிக்கப்பட்ட முக கவசத்தைப் பொதுமக்கள் பயன்படுத்துவதுதான் சிறந்தது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.*

*மத்திய சுகாதாரத்துறையில் இந்த அறிவிப்பு N95 முக கவசத்தை பயன்படுத்தி வந்தோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தை நெருங்கும் பேரிடர் காலத்தில் சுகாதாரத்துறை முறையான ஆய்வுகள் மேற்கொண்டு மக்களை பாதுகாக்கவேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக