ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

அரசு ஊழியர்களின் பணிவிதிகள் குறித்தான தற்போதைய நடைமுறை (Latest) சட்டம்_அனைத்து அரசு ஊழியர்களும், உள்ளாட்சி பணியாளர்களும், அதிகாரிகளும், பணியாளர் பிரிவு உதவியாளர்களும் கையில் வைத்திருக்க வேண்டிய ஆவணம்


அரசு ஊழியர்களின் பணிவிதிகள் குறித்தான தற்போதைய நடைமுறை (Latest) சட்டம்

"Tamilnadu Govt. Servants (conditions of service) Act,2016*


           தமிழ்நாட்டில் உள்ள மாநில அளவிலான மற்றும் சார்நிலை (State and subordinate service) பணியாளர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட சட்டம் "Tamilnadu Govt. Servants (conditions of service) Act 2016 ஆகும். இந்த சட்டம் 14-9-2016 ல் இருந்து அமுலுக்கு வருகிறது. இந்த சட்டம்தான் பணியாளர்களுக்கான தற்போதைய (latest) நடைமுறை சட்டமாகும். இதற்கு பின்னர் இந்த சட்டத்தில் எந்த மாறுதலும் மேற்கொள்ளப் படவில்லை. இந்த சட்டம் இயற்றப் படுவதற்கு முன்பாக பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை பிறப்பித்த பல்வேறு அரசாணைகளை உள்ளடக்கி இயற்றப்பட்டதுதான் இந்த சட்டம். இந்த சட்டத்தில் பணி நியமனம், முதுநிலை பட்டியல், பதவி உயர்வு, ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட பணியாளர் பணிகள் குறித்தான பல விதிகள் உள்ளன.

          எந்த ஒரு ஊழியர் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளும், அரசு ஊழியர் தம்மை பாதுகாத்துக் கொள்ள தேவையான விதிகளும் இந்த சட்டத்தில் உள்ளன. வலைதளத்தில் Tamilnadu Govt.Servants (conditions of service) Act, 2016 என்று தட்டச்சு செய்தாலே இந்த 90 பக்கம் உள்ள சட்டவடிவு முழுமையாக வந்துவிடும். இச்சட்டத்தின் தமிழாக்கம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

            அனைத்து அரசு ஊழியர்களும், உள்ளாட்சி பணியாளர்களும், அதிகாரிகளும், பணியாளர் பிரிவு உதவியாளர்களும் கையில் வைத்திருக்க வேண்டிய ஆவனம் இது.

CLICK HERE TO OPEN

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக