வெள்ளி, 18 டிசம்பர், 2020

*📚மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப அரசு பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு.*

*📚மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப அரசு பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியீடு.*
 

*ஆணை :*

*2020-2021ம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களால் கீழ்க்கண்டவாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. “ பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து அரசு உயர்ரி லை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நிர்வாகம் , அலுவலகம் தொடர்பான பணிகளை மேறகொள்வதற்கு போதுமான அளவில் ஆசிரியரல்லா பணியிடங்கள் இருப்பதை உறுதி செய்வதற்கு தேவையின் அடிப்படையில் உதவியாளர்கள் , இளநிலை உதவியாளர்கள் அல்லது பதிவறை எழுத்தர்கள் பணியிடங்கள் ஆண்டு ஒன்றுக்கு சுமார் ரூ .12.84 கோடி செலவில் தோற்றுவிக்க வழிவகை செய்யப்படும். ”*


*அரசுப் பள்ளிகளின் நிர்வாகம் நிலை மேம்படவும் , ஆசிரியர்களது நலன் மற்றும் பணப்பயன்கள் பெற்றளித்தலில் தொய்வற்ற நிலை ஏற்படுத்தவும் , தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தலில் முழுக் கவனமும் செலுத்த ஏதுவாகவும் , அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ மாணவியர் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு உதவியாளர் , இளநிலை உதவியாளர் மற்றும் பதிவறை எழுத்தர் ஆகிய பணியிடங்கள் அனுமதிப்பது அவசியமாகிறது எனவும் , மேற்படி ஆசிரியரல்லாப் பணியிடங்கள் அனுமதிப்பது குறித்து மாணவ , மாணவியர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு கணக்கீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக