புதன், 20 அக்டோபர், 2021

பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ40/இலட்சம்‌ மதிப்பீட்டில் புதிய வகுப்பறைக்கட்டிடங்கள். ---மாண்புமிகு.தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சித் துறை அமைச்சர் மருத்துவர் திரு.மா.மதிவேந்தன் அவர்கள்,மாண்புமிகு.நாடாளுமன்ற உறுப்பினரும்,நாமக்கல் கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டப்பொறுப்பாளருமான திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் அடிக்கல் நாட்டு விழா

 பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ40/இலட்சம்‌ மதிப்பீட்டில் புதிய வகுப்பறைக்கட்டிடங்கள். ------------------------------------------- இராசிபுரம் பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பழுதடைந்த கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய வகுப்பறைக்கட்டிடம் ரூ 40 இலட்சம் மதிப்பீட்டில் மூன்று வகுப்பறைக்கட்டிடமாக கட்டப்படுகிறது. புதிய‌ மூன்று அறை வகுப்பறைக்கட்டிடத்தின் அடிக்கல்நாட்டு நிகழ்வு இன்று (20.10.2021)நடைபெற்றது. இந்நிகழ்வில் , மாண்புமிகு.தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சித் துறை அமைச்சர் மருத்துவர் திரு.மா.மதிவேந்தன் அவர்கள்,மாண்புமிகு.நாடாளுமன்ற உறுப்பினரும்,நாமக்கல் கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டப்பொறுப்பாளருமான திரு.கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள்,திராவிட முன்னேற்றக்கழகத்தின் இராசிபுரம் நகரச்செயலாளர் திரு.என்.ஆர் சங்கர் அவர்கள்,முன்னாள் நாடாளுமன்ற‌ உறுப்பினர் திரு.பி.ஆர்.சுந்தரம் அவர்கள், நகராட்சி ஆணையாளர் திரு.கிருபாகரன் அவர்கள்,பள்ளித்தலைமையாசிரியை திருமதி.கு.பாரதி அவர்கள் உள்ளிட்டு அரசு அலுவலர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துக்கொண்டு உள்ளனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக