செவ்வாய், 4 ஜனவரி, 2022

புதுச்சத்திரம் வட்டாரக் கல்வி அலுவலருடன் ஆசிரியர் மன்றப் பொறுப்பாளர்கள் சந்திப்பு

 புதுச்சத்திரம் வட்டாரக் கல்வி அலுவலருடன் ஆசிரியர் மன்றப் பொறுப்பாளர்கள் சந்திப்பு இன்று (4.1.2022) மாலை , தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், புதுச்சத்திரம் ஒன்றியக் கிளையின் சார்பாக , புதியதாக பொறுப்பேற்றுள்ள வட்டாரக் கல்வி அலுவலர் திரு. வ.சந்திரசேகரன் அவர்களை, மரியாதை நிமித்தமாக ஆசிரியர் மன்றப் பொறுப்பாளர்கள் சந்தித்த போது , ஒன்றியப் பொருளாளர் திரு.இரா.பிரபாகரன் அவர்கள் பொன்னாடை அணிவித்தார். மாவட்ட துணைச்செயலாளர் திருமதி.து.லதா அவர்கள் புத்தகங்கள் வழங்கி வரவேற்றார். மேலும் ஒன்றியத் தலைவர் திரு.பெ.பன்னீர்செல்வம், துணைத்தலைவர் திரு.பெ.முருகேசன், ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் திரு.சி.சேகர் , மகளிர் அணி அமைப்பாளர் திருமதி.வெ.கவிதா மற்றும் திரு.அ.கனகராசு, திருமதி.கோ.தேன்மொழி மற்றும் திருமதி . N R சாந்தி அவர்களை ஒன்றியச் செயலாளர் திரு.கொ.கதிரேசன் அவர்கள், பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து வட்டாரக் கல்வி அலுவலர் அவர்களை வரவேற்று சிறப்பித்தார்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக