சனி, 5 மார்ச், 2022

தமிழ்நாடு பள்ளிக்கல்வி அமைச்சருடன்‌ உகாண்டா ‌தூதர் சந்திப்பு!

 தமிழ்நாடு பள்ளிக்கல்வி அமைச்சருடன்‌ உகாண்டா ‌தூதர் சந்திப்பு! மாண்புமிகு.தமிழ்நாடு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களை சென்னை தலைமை செயலகத்தில் உகாண்டா தூதர் திருமிகு.தினா கிரேஸ் அக்கிலோ அவர்கள் சந்தித்து தமிழ்நாட்டு கல்வி செயல்பாடுகள் பற்றி விவாதித்தார்கள். தமிழ்நாட்டில் கல்வி முறை சிறப்பாக செயல்படுகிறது என்றும், இதுபோன்ற சிறப்பான‌‌ கல்வி முறையை உகாண்டா நாட்டில் ஏற்படுத்தவும், நல்லெண்ண அடிப்படையில் உகாண்டா நாட்டின் ஆசிரியர்கள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்து கல்வி முறை பற்றி பயிற்சி எடுக்க விரும்புவதாகவும் இச்சந்திப்பில் உகாண்டா தூதர் தெரிவித்து உள்ளார்கள்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு உகாண்டா தூதரின் விருப்பங்கள் மற்றும் கோரிக்கைகள் எடுத்து செல்லப்படும் என்று மாண்புமிகு.தமிழ்நாடு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்கள் உகாண்டா நாட்டுத்தூதரிடம் தெரிவித்து உள்ளார்கள்.



1 கருத்து: