வெள்ளி, 6 ஜனவரி, 2023

ஜாக்டோ-ஜியோவின் பெரும்படை நாமக்கல்லில்ஆசிரியர் மன்றப்படையே !

ஜாக்டோ-ஜியோவின் பெரும்படை 
நாமக்கல்லில்
ஆசிரியர் மன்றப்படையே !

--------------------------------------------------------

ஜாக்டோ-ஜியோவின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றிடுமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்தி மாநிலமெங்கும் மாவட்டத்தலைநகரில்  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
மிகுந்த எழுச்சியோடு நடைபெற்று உள்ளது.

நாமக்கல் பூங்காசாலையில் நடைபெற்றுள்ள ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில,மாவட்ட,
ஒன்றியப்பொறுப்பாளர்கள்,மன்ற முன்னோடிகள்,‌
மறவர் - மறத்தியர் 160- க்கும் மேற்பட்டோர்‌
பங்கேற்று  ஆர்ப்பாட்டத்தை 
வெற்றிகரமாக்கி
உள்ளனர்.

நாமக்கல் ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று 
வெற்றிகரமாக்கியுள்ள  மன்றத்தினர் அனைவருக்கும்
மாவட்ட அமைப்பு பெரும் நன்றி பாராட்டுகிறது.

நாமக்கல்லில்
போராளிகளின் பெரும்படை 
ஆசிரியர் மன்றப்படையே!

இன்று
இன்னொரு முறை போராட்டக்களத்தில் மெய்ப்பித்துள்ள   ஆசிரியர் மன்றத்தினர் அனைவருக்கும் பேரன்பு 
பெரும் வாழ்த்து 
மாவட்ட அமைப்பு மனம்நிறைந்து தெரிவித்துக்
கொள்கிறது.

சுற்றிநில்லாதே போ !                    பகையே துள்ளி வருகுது வேல்!
-மகாகவி பாரதி

நாம் வெல்வோம்!

போராட்ட
வாழ்த்துகளுடன்...
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்
நாமக்கல் மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக