சனி, 6 மே, 2023

ஒன்றிய இடைநிலை ஆசிரியருக்கு பணிமூப்பின் படி பட்டதாரி ஆசிரியர் பதவிஉயர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் 06.05.2023

 1.ஒன்றிய இடைநிலை ஆசிரியருக்கு பணிமூப்பின் படி பட்டதாரி ஆசிரியர் பதவிஉயர்வு வழங்கிட வேண்டும்.

2. பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க கலந்தாய்வு கால அட்டவணையை மாற்றி திருத்திய கால அட்டவணை வெளியிட வேண்டும்.

3.பட்டதாரி ஆசிரியர் பதவிஉயர்வு வழங்காமல் பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல் ஒன்றியம் விட்டு ஒன்றியம், மாவட்டம் விட்டு மாவட்டம் வழங்க கூடாது

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி *தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம்* சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் 06.05.2023 காலை 11.00 மணிக்கு நடைபெற்றது..



ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய துணைத்தலைவர் திரு. சி.சிவக்குமார் அவர்கள் தலைமை தாங்கினார்

ஒன்றியச் செயலாளர் திரு.சி.மோகன்குமார் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

மாநிலச் செயற்குழு உறுப்பினர் திரு.சு.சிதம்பரம் அவர்கள் முன்னிலை உரை ஆற்றினார்.

மாவட்ட துணைத் தலைவர் திரு.அ.சுப்ரமணியம்,மாவட்ட மகளிரணி அமைப்பாளர் திருமதி. கு.பாரதி அவர்கள்,

இராசிபுரம் ஒன்றியச் செயலாளர் திருமதி. வே.இலட்சுமி அவர்கள் வாழ்த்துரை வழங்கினர்..

மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் திரு.பெ.பழனிசாமி அவர்கள் தொடக்கவுரை நிகழ்த்தினார்..

மாவட்டச் செயலாளர் திரு மெ.சங்கர் அவர்கள் ஆர்ப்பாட்ட கோரிக்கை உரை ஆற்றினார்..

மாநில பொருளாளர் *திரு.முருகசெல்வராசன்* அவர்கள் ஆர்ப்பாட்ட பேருரை ஆற்றினார்..

ஒன்றியப் பொருளாளர் திரு.க.கிருஷ்ணன் அவர்கள் நன்றியுரை கூறினார்..






















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக